Headlines

மக்களால் உருவான தேசியத் தலைவன் – 42 இற்குள் 15 வருடம்

ஆக்கம் எஸ்.எச்.எம்.முஜாஹிர் – புதுக்குடியிருப்பு குறிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்கு இன்று (27) பிறந்த நாளாகும் (42வயது). அத்துடன் பாராளுமன்ற அரசியலில் 15வது வருடத்தில் காலடி எடுத்தும் வைக்கின்றார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை. உலகில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் என்ற இனம்தான் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்ற இனமாகும்.உலகம் பூராகவும் உள்ள முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க வேண்டும்-அழித்தொழிக்க வேண்டும் என்ற தூர நோக்குடைய சர்வதேச சதித் திட்டத்தின் அடிப்படையில்தான் உலகம் பூராகவும் இன்று…

Read More

நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து தின்ற 5 பேர் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அங்குள்ள நார்த் கிராஸ் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம், நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தது. பக்கத்து வீட்டு கோழிகள் இடும் முட்டையை தினந்தோறும் உடைத்து குடிக்கும் பழக்கம் கொண்ட அந்த நாயின் தொல்லை தாங்க முடியாத கோழிகளின் உரிமையாளர் முட்டைகளில் விஷம் வைத்து அந்த நாயை கொல்ல முயன்றுள்ளார். விஷம் கலந்த முட்டைகளை சாப்பிட்ட நாயின்…

Read More

ஜனாதிபதி முன்னிலையில் றிஷாத் பதியுதீன் விடுத்த சவால்

– அமைச்சரின் ஊடகப்பிரிவு – வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை. அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு இந்த உயர் சபையில் சவால் விடுகின்றேன் என்றார் அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன். ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த போது ஜனாதிபதியின் முன்னையிலையில் இந்த சவாலை ரிசாத் பதியுதீன் மிக ஆக்ரோசமாக விடுத்தார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு சபையில் மிக ஆக்ரோசமாக…

Read More

“புத்தளம் கேட்போர் கூடத்திற்கான பணிகளை நிறைவு செய்து தாருங்கள்” பிரதமரிடம் நவவி MP

புத்தளம் பிஸ்ருள் ஹாபி நகர மண்டபத்திற்க்கு (Town Hall) அருகில் கட்டப்பட்டுவரும் கேட்போர் கூடத்திற்கான (Auditorium) நிர்மாண பணிகள் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதற்கட்ட பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் தொடங்கப்படாமல் மிக நீண்ட காலமாக அப்பணிகள் தடைப்பட்டுள்ளன. எனவே அதன் இரண்டாம் கட்ட பணிகளை உடனடியாக ஆரம்பித்து அவ் Auditorium யத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி எமது புத்தளம் மாவட்ட…

Read More

காலி – மாத்தறை ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின.!

ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் காலி வக்வெல்ல பகுதியில்  நேற்று (17) trainதடம்புரண்டது. இதனையடுத்து, காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதிக்கான ரயில் சேவை மீண்டும் சீர்செய்யப்பட்டுள்ளது.

Read More

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது!

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் தாக்கல் செய்யப்பட் இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மக்கள் காங்கிரஸ் சார்பில் ஆஜராகியுள்ளார்.   -ஊடகப்பிரிவு-

Read More

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி…

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு அடித்தளமாக அமையட்டும் இவ் ஈகைத்திருநாள். அளவற்ற அருளாளனும், அன்பில் நிகரற்றவனுமாகிய வல்லநாயன் அல்லாஹ்வின் திருப்பெயரை துதித்து, புனித ரமழான் முடிவில், மலரும் இவ் ஈகைத்திருநாளை மகிழ்வுடன் வரவேற்று, மனித அவலங்கள் தீர்ந்திடபிரார்தித்து, மகிழ்ச்சி மட்டும் அடையும் நாளாய், மனதாற ஆர்ப்பரித்து மகிழ்ந்திட என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் முஸ்லிம் நெஞ்சங்களுக்கு. முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை அழிப்பதற்க்கு சர்வதேச பயங்கரவாதம் முனைப்புக்காட்டி அதில் வெற்றியும் கண்டு கொண்டிருக்கின்றது. இதுவே…

Read More

தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது!

“சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்துறை கழிவு அகற்றலுக்கும் அரசாங்கத்தின் இந்த முக்கிய செயற்பாடுகள் பாதுகாப்பாக அமையும்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையில் முதன் முறையாக சர்வதேச தொழில்துறைகளின் “அபாயகரமான பொருட்களின் பாதுகாப்பு மீதான முகாமைத்துவத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நேற்று (17) வியாழக்கிழமை ஹில்டன் ஹேர்ட்டலில் நடைபெற்ற…

Read More

நாதியற்ற அரசியல் பிழைப்பு நடத்தும் பிரதி அமைச்சர் பைசல் காசிம்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா கண்டனம்.

மிகவும் பிழையாகவும்  அசிங்கமாகவும்  பிரதி அமைச்சர் பைசல் காசிம்  காழ்ப்புணர்வு அரசியல் செய்வது  சிறுபான்மை கட்சிகளுக்கே வெட்க கேடு என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா தெரிவித்தார். முஸ்லீம்களின் விடிவுக்காக முஸ்லீம் சிறுபான்மை கட்சிகள் அரசியல் செய்வது வரவேற்கத்தக்கது இந்த நாட்டிலில் தனித்துவத்தோடு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனிக்காட்டு  ராஜாவாக நடைபோட்டு வந்தாலும் மறைந்த எங்களின் மாபெரும் தலைவர்  அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை ஆரோக்கியமான முறையில் வழிநடத்த முடியாமல் ஆளுமை உள்ளவர்களையும் கட்சியை…

Read More

வட துருவத்தில் மர்மமான இராட்சத துளை, யார் மறைக்கும் உண்மை இது..?

சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான ஒரு விளக்கமாகவோ அல்லது கருதுகோளாகவோ இருக்கும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கும். பொதுவாக சட்டவிரோதமான, மறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட அல்லது தீங்கிழைக்கும் தொடர்புடைய இரகசியங்கள் அல்லது நிகழ்வுகளை சார்ந்தே தான் இந்த சதியாலோசனை கோட்பாடுகள் பிறக்கும்..! அப்படியாக, நாசாவும் பிற உலக நாட்டு அரசாங்கமும் பூமி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஒரு மர்மமான இராட்சத…

Read More

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு!!!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில்  ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும்  கலந்துரையாடினார். மேலும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Read More

கைப்பையுடன் கண்டெடுத்த பெறுமதியான பொருட்களை உரியவரை தேடி ஒப்படைத்த வண்டித் தொழிலாளி எஸ்.எம்.பரீத்.. இலங்கையில் தான்

தோப்பூர் சந்தைக்கு அருகில் வைத்து காணாமல் போன கைப் பையிலிருந்த பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து உரியவரிடம் மாட்டு வண்டில் தொழிலாளி ஒருவர் ஒப்படைத்தச் சம்பவ ஒன்று இன்று செவ்வாய் கிழமை தோப்பூர் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. -தோப்பூர் நிருபர் நஹீம் முஹம்மட் புஹாரி- தோப்பூர் பொதுச் சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்ற போது அவரின் கை பையிலுந்த 7500 ரூபா பணம்,கையடக்க தொலைபேசி1,வங்கியில் அடகு வைத்த இரண்டு அடகு…

Read More