Headlines

25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்றிரவு 7.40 மணி முதல் ஆரம்பம். 25 வருடங்களின் பின் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 25 வருடங்களின் பின்னர் கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த இலங்கைக்கு விஜயத்தின் போது தலைமன்னார் வரையான ரயில் பாதையை திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. “போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். அத்துடன் நாட்டைப் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலர் கடனாளியாக்கிச் சென்றுள்ளனர். அதுமட்டுமன்றி ஒப்பந்தகாரர்களுக்கு மேலும் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலரைப் பாக்கியாக கடந்த அரசு…

Read More

50 கோடி நஷ்டம்.. பவித்ரா வன்னியாராச்சியிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

-எம்.ஐ.அப்துல் நஸார்- சுற்றறிக்கை ஒன்றின் மூலம் 2014 ஆம் ஆண்டு மின்சார சபையின் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் வேதன அதிகரிப்பை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு  மாதமொன்றிற்கு 50 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக பொலீஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரிடமும் வாக்குமூலங்களைப் பெற வேண்டுமென இலஞ்ச விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகேக்கு அறிவித்துள்ளது. இவ்விடயம் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ்…

Read More

துமிந்த சில்வாவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கபட்ட பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில், இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். அத்தனை பேரும் கடும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் துமிந்த சில்வாவின்…

Read More

ஞானசார தேரரிடம் விசாரணை

பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மதத்தை அடிப்படையாக வைத்து தனி நபர்களுக்கும் சமூகங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை குறித்தே ஞானசார தேரரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சின் விசேட பொலிஸ் பிரிவினால் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அல்-கிம்மா நிறுவனத்தின் வாழ்வுக்கு வழிகாட்டும் வேலைத்திட்டம்

எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் வாழ்வுக்கு வழிகாட்டும் நகர அழகுபடுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கமைவாக சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வணிகஸ்தாபனம் நிறுவப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாரூன்(ஸஹ்வி) தலைமையில் நேற்று (31.03.2015) இடம் பெற்றது. அல்-கிம்மா நிறுவனத்தின் மக்கள் நலதிட்டங்களின் ஓர் அங்கமாக ஓட்டமாவடி ஆற்றங்கரைவீதி மற்றும் கொழும்பு பிரதான வீதியில் 5 மில்லியன் ரூபாய் செலவில் 25 சிறு கடைகள் நிறுவப்பட்டு சுயதொழில் ஆர்வமிக்க முயற்சியாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதமஅதிதியாக…

Read More

நயவஞ்சக ஷிஆக்களை இனம் காண்போம்- மசூர் மௌலானா

ஊடகப் பிரிவு யெமனின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் ஈரானின் பூரண ஒத்துழைப்போடு ஹோதி இனத்து ஷிஆக்கள் யெமன் நாட்டின் தலை நகர் சனா மற்றும் ஏடன் நகரை கைப்பற்றி அந்த நாட்டு மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். யெமன் நாட்டின் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அப்துரப்பு மன்சூர் ஹாதி மற்றும் அந்த நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஹோதி இனத்து ஷிஆ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் மன்னர்…

Read More

மட்டு-குருக்கள்மடம் புதை குழியினை விரைவாக தோண்டுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தோண்டப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஏற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தினை பூமிக்கு கீழேயுள்ள எச்சங்களை கண்டறிய ஸ்கேன் கருவியினூடாக குறிப்பிட்ட அந்த பகுதியினை ஆய்வு செய்யுமாறு களுவாஞ்சிக்குடி…

Read More

சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு வெளிநாடு செல்ல தடை

வெளிவிவகார முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் கடவுச் சீட்டை இன்று நீதிமன்றம் பொறுப்பேற்றுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கொன்றிக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான போதே அவரது கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான்…

Read More

பாராளுமன்றத்தில் முதன்முதலில் தமிழில் பேசிய மூதூர் முஹம்மத் அலி

-NM Ameen  – 1950களில் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கண்ணியமான அரசியல் வாதிகளில் மூதூர் எம்.ஈ.எச். முஹம்மத் அலி முக்கியமானவர். மூதூரின் பாரம்பரிய குடும்பமான எஹ{த்தார் ஹாஜியாரின் மூத்த மகனான அல்-ஹாஜ் முஹம்மதலி 1927ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி பிறந்தார். கிண்ணியா அரசினர் முஸ்லிம் வித்தியாலயம், திருமலை ஹிந்துக் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்விபயின்று ய+னானி வைத்தியத்துறையிலும் கல்வி கற்றார். 1952ஆம் ஆண்டு மூதூர் தொகுதியில் சுயேச்சை அபேட்சகராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற…

Read More

இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்

இலங்கை மக்கள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் பாஸ்போர்ட் ஆசியாவில் பெறுமதியான பாஸ்போர்ட் என்றும், பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் படுகின்றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் பல நாடுகள் வருகை விசாவினை அறிமுகப்படுத்தியுள்ளன. வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டினுள் நுழையும் போது அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து உங்களுக்கு விசா தரப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை….

Read More

அல்லாஹ் இந்த சகோதரிக்கு சுவர்கத்தை வழங்கி வைப்பானாக! நவீன இஸ்லாமிய பெண் தொழிலதிபர் இஷ்ரத்!

மும்பை ஷாலிமார் ஹோட்டல்-தெற்கு மும்பையில் அமைந்துள்ள சுவையான உணவுகள்  கிடைக்கும் பெரிய உணவகம் பயனுள்ள கல்வியுடன் மார்க்க கல்வியையும் போதிக்கும் ஷஃபா-மாறுபட்ட பள்ளிக்கூடம். இவற்றை வெற்றிகரமாக நிர்வகிப்பவர் ஒரு முஸ்லிம் பெண் ஆவார். அதுவும் நிகாப் எனும் முகத்தை துணியால் மறைக்கும் முஸ்லிம் பெண். வாருங்கள் இஷ்ரத்தை சந்திப்போம். 42 வயதான கணவனை இழந்த கைம்பெண்ணாக 5 பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்தும்  இஷ்ரத், மிகவும் வெற்றிகரமாக பெரிய உணவகத்தையும், பள்ளிக்கூடத்தையும்  நிர்வகித்து வருகிறார். உ.பி.மாநிலம் ஆஸம்கரை சார்ந்த…

Read More