Headlines

சிறுபான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை அமைய வேண்டும்

சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலான தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை அமைய வேண்டும். பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து சிறுபான்மை கட்சிகளை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றன. இந்த நிலைமை குறித்து அனைத்து சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். நாடு முழுவதிலும் பரந்து வாழும்…

Read More

சூழ்ச்சிக்காரர்களால் எவரையும் வீழ்த்த முடியாது

-சுஐப் எம்.காசிம் – வடக்கிலே யுத்தத்தினாலும் யுத்தத்தின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் வேதனைகளை போக்குவதற்காகவே மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் எந்தவிதமான குறுகிய நோக்கங்களும் கிடையாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (19/08/2016) தெரிவித்தார். முசலிப் பிரதேச வெள்ளிமலை மன்/பதியுதீன் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் திறப்பு விழாவில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, நீண்டகாலமாக அகதிகளாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின்…

Read More

முசலி பிரதேச பரிசளிப்பு விழா

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற கழகங்களுக்கான பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை முசலி தேசிய பாடசாலையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அழைத்துவரப்படுவதையும்,முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான்,வடமாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் அமர்ந்திருப்பதயும்,வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்தினை மாகாண சபை உறுப்பினர் வழங்கி வைப்பதையும் படத்தில் காணலாம்.

Read More

வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நறுவிலிக்குள மைதான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு வன்னி மாவட்;ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி தற்போது செயலுருப்பெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு வீருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச். எம். ஹரீஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற குழுக்களின்…

Read More

எம்பிலிபிட்டிய இளைஞனின் மரண அறிக்கை வெளியீடு

எம்பிலிபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் மருத்துவ உத்தியோகத்தர் டி.பி.குணதிலகவால் தயாரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையை எம்பிலிபிட்டிய மேலதிக் நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வெட்டு காயத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெயியேறியதால் மரணம் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது.

Read More

முஸ்லிம்கள் தமது மதக் கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் – சந்திரிக்கா பண்டாரநாயக்க

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்முதின் மகன் டாக்டர் தாரீக் மஹ்முதினை தலைவராக் கொண்ட சூறாக் கவுன்சிலின் ஆதரவுடன் 67வது சுதந்திர தினத்தினை முஸ்லீம்கள் கொண்டாடும் ;முகமாக சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க – கடந்த 2 வருடத்திற்குள் அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் முஸ்லீம்களது பள்ளிக்குள் உடைத்துக் கொண்டு பாய்ந்தார்கள். பல்வேறு அவர்களது கலை கலாச்சார அம்சங்களில்…

Read More

 வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் வித்தியாலய சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்த நடவடிக்கை!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் பாடசாலை அருகில் உள்ள, “மடுவத்தை” என்ற இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி, சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் கலீலுர்ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் உபதவிசாளர் நௌபர் மௌலவி உட்பட மக்கள் காங்கிரஸின் பிரதேசசபை உறுப்பினர்களான அன்வர் மற்றும் பாஹிமா ஆகியோரும் கலந்துகொண்டனர். “மடுவத்தை” பாடசாலைக்கு அருகாமையில் இருப்பதால், துர்நாற்றம் மற்றும் சூழல் மாசுறுகின்றது. இதனால்…

Read More

அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் மக்கள் இன்னும் தயாராக இல்லை

அணு ஆயுதப்பரவல் தடை உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. சபையின் வரைவு தீர்மானம் கடந்த 1996-ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் 183 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 164 நாடுகள் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள தற்போது இஸ்ரேல் மக்கள் தயாராக இல்லை என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து நெடான்யாஹூ…

Read More

பொலிஸ் செய்தி ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பம்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் செய்தி, நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த செய்திச் சேவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நண்பகல் 12 மணிக்கு இனி தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் என். இலங்ககோனின் ஆலோசனையின் கீழ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செயலாளரான சட்டத்தரணி நந்த முருத்தெட்டுவேகமவினால் இச்சேவை மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுவதற்காக  அமைக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணி பல்வேறு சிக்கலான விடயங்கள் குறித்து கடந்த 20 ஆம் திகதி ஆராய்ந்ததுடன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் சில முடிவுகளை மேற்கொண்டதாக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் மீள்குடியேற்றச் செயலணியின் இணைத்தலைவர்களான, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,…

Read More

மூக்கின் மேல் அடையாளம் – வியக்க வைக்கும் அல்-குர்ஆன்!

‘அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்’ எனக் கூறுகிறான். ‘அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்’ -குர்ஆன் 68:15,16 நாளை மறுமையில் ஏக இறைவனை மறுத்தோரை அனைத்து மக்களின் முன்னாலும் தனியாக அடையாளப்படுத்த அவர்களின் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்கிறான் இறைவன். மனிதனுக்கு அடையாளமிட எத்தனையோ இடங்கள் இருக்க இறைவன் மூக்கை பிரதானமாக ஏன் சொல்ல வேண்டும்? மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் உள்ளன. ஒன்று ரேகைகள். இது பற்றி நமக்கும் தெரியும்….

Read More

கோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை செப்டம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர்கள் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு…

Read More