Headlines

மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் ஸ்தலத்தில் இருவர் மரணம்- இது மட்டக்களப்பு சோகம்

செய்யித் அப்ஷல்  மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் சந்தியில் சற்று முன்னர் (ஞாயிறு இரவு 10.30 மணி) இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். கிரான் பகுதியைச் சேர்ந்த எஸ். ஆதித்தன் (வயது 36) மற்றும் விநாயகம் ஜெயபிரதாப் (வயது 24) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும்  வேக கட்டுப்பாட்டை மீறி கிரான் பாடசாலைக்கு எதிரில் வீதி ஓரத்தில் இருந்த…

Read More

Lanka commences GSP+ process with EU

As bilateral trade between EU and Sri Lanka edged to $5Bn mark, Sri Lanka has commenced its talks on the recovery of the GSP Plus from EU on 24 March in Colombo, strengthened by previous positive vibes from EU-and  talks were so comprehensive, it involved even technical trade capacity support to Sri Lanka from the…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வு! செயலாளர் சுபைர்தீன் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் மல்வானை அமைப்பாளர் முஹம்மத் ரிபானின் முயற்சியில் யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், மல்வானை விதானகொடை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகைத்தொழில் ஆலையை (Mini Garment) மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் நேற்று முன்தினம் (20) திறந்து வைத்தார்.   சுமார் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வில், அகில இலங்கை…

Read More

மஹிந்தவை நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டாம்: அமீர் அலி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு பொதுமக்கள் இடம்தரக்கூடாதென சமுர்தி துறை பிரதியமைச்சர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லாட்சியை பிடிக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இவர்களே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக்க முனைந்தவர்களாவர். எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து மைத்திரிபாலவுக்கு வாக்களித்தன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தினர் என்று அலி தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேவை – ஐ.தே.க. போர்கொடி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.தேர்தல் அறிவிக்கப்படும் நாள் முதலே சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த கால தேர்தல்களின் போது அரசாங்கம் மோசமான முறையில் தேர்தல் விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளது. அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத பிரச்சாரம், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் அரசாங்கம் விதி மீறல்களில் ஈடுபட்டது.ஜனாதிபதி தேர்தலிலும் இ;வ்வாறான…

Read More

மஹிந்த, கோட்டாப, நாமல், கப்ரால் ஆகியோருக்கு எதிராக JVP செய்துள்ள முறைப்பாட்டின் முழு விபரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ஜே.வி.பி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவதைத் தடுப்பதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜே.வி.பியினர் கோரிக்கை விடுத்தனர். ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துந்நெத்தி…

Read More

தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் ஓய்வு!

பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (15) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதன்படி, இந்தக் காலம் அமைதியான காலம் என அழைக்கப்படுகின்றது. இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை,…

Read More

எதிர்க்கட்சி தலைவர் யார் ? சபாநாயகர் இன்று அறிவிப்பார்

எதிர்க்கட்சித் தலைவர் யார் ? என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவா அல்லது தினேஷ் குணவர்த்தனவா அல்லது இரா. சம்பந்தனா? என்ற சர்ச்சை அரசியலில் தலைதூக்கியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் சுதந்திரக் கட்சியினர் இணைந்து…

Read More

மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி முத்திரை வழங்கப்பட வேண்டும் அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை

  மூதூர் கிழக்கு சம்பூர் போன்ற மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (நேற்று) 21, திங்கட்கிழமை நடைபெற்ற போது இப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி அவர் கருத்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினார்களான அப்துல் லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கே. துரைரெத்தினசிங்கம், மாகாண அமைச்சர்களான…

Read More

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பொது கூட்டம்!

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 20ம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (18) வவுனியா, றோயல் கார்டின் மண்டபத்தில், சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ஜே. ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மயூரன், நகர சபை தவிசாளர்கள்…

Read More

சவூதி வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் பலி!

நேற்று சவூதி அரேபியா அல்கஸீமில் நடைபெற்ற வாகண விபத்தில் யேமன் நாட்டைச் சேர்ந்த 7 பெண்கள் மரணமடைந்துள்ளதுடன் இன்னும் 5 பேருக்கு கடுமையான காயம் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அரச வீசா பெற்று நேற்றுதான் சவூதிக்குள் நுழைந்தார்கள் என்பது  குறிப்பிததக்கது .

Read More

2763 படையினர் சேவை நீக்கம்

பொது மன்னிப்பின் கீழ் 2763 படையினர் சட்டரீதியாக பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் உத்தியோகபூர்வமாக விலகுவதற்குகடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ சிப்பாய்கள் சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அத்துடன் விமானப்படை சிப்பாய்கள் 118 பேரும், கடற்படை சிப்பாய்கள் 71பேரும் குறித்த இந்தக் காலப் பகுதியில் சட்டரீதியாக விலகுவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்….

Read More