Headlines

நேபாள நாட்டவருக்கு, இலங்கையில் மரண தண்டனை

நேபாள நாட்டுப் பிரஜை ஒருவருக்கு கண்டி நீதிமன்றம் இன்று 12-03-2015 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹெரொயின் போதைப் போருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 63 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நோபாளம் – லலித்புர பட்டான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி குறித்த நபர் தனது உடம்பினுள் சுமார் 80 கிராம் அளவு ஹெரோயின் வைத்திருந்த நிலையில் கண்டியில் வைத்து கைது…

Read More

மெற்றோபொலிட்டன் கல்லுாாியின் பட்டமளிப்பு விழா

– அஸ்ரப் ஏ சமத் – கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிபின் லண்டன் கல்வி நிறுனத்தின் இலங்கை நிறுவனமான மெற்றோபொலிட்டன் கல்லுாாியின் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று (21) சனிக்கிழமை இரவு வெள்ளவத்தையில் உள்ள எக்சலன்சி ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு கைத்தொழில் வா்த்தக அமைச்சா் றிஷாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டாா். அத்துடன் கௌரவ அதிதிகளாக , இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌவுசி, பிரதியமைசச்சா் அமீா் அலி, பாராளுமன்ற உறுப்பினகள் நவவி,…

Read More

இலங்கைப் பெண்கள், டுபாயில் உண்ணாவிரதப் போராட்டம்

தமக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, துபாயிலுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் எட்டாவது நாளாகவும் சாஜாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சுமார் 100 இலங்கைப் பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அதிகாரிகளை தெரியப்படுத்தியுள்ள போதிலும், தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய நாட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், சம்பள உயர்வு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் தமக்கு செய்துகொடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தம்மை மீண்டும் நாட்டிற்கு…

Read More

மலாலாவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு போராடி விபச்சார ஊடகங்கள் எங்கே? மியன்மார் கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் வரட்டும்

-மொஹமட் ஹஸ்னி- அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட மலாலா என்ற ஒரே ஒரு பெண்ணிற்காக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்று கூடி வரிந்துக்கட்டிக்கொண்டு போராடியது தற்போது பர்மாவில் புத்தர்களின் அராஜகத்தால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து கஞ்சிக்கு வழியில்லாமல் செத்துக்கொண்டிருப்பதை உலக நாடுகளும் ஊடகங்களும் கண்டும் காணாமல் இருப்பது எதற்காக???! இதுவே ஒரு அரபு நாட்டில் வேற்று மதத்தினருக்கு இதுப்போன்று நடந்திருந்தால் உலக மகா மனித உரிமை மீறீல் என வரிந்து கட்டிக்கொண்டு அமெரிக்காவும் அதன்…

Read More

வருட இறுதிக்குள் 1,210 பாலங்கள்

இந்த வருட இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் 1, 210 பாலங்கள் அமைக்கப்படும் என மகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இந்த கிராம பாலங்கள் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும். இதற்காக 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் முயற்சியில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை!

கிண்ணியாவில் பெய்து வரும் கணமழையினைத் தொடர்ந்து ஜாயா வீதி, ஆலிம் வீதி, ஹிஜ்ரா வீதி, அண்ணல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் நேற்று இரவு (24) ஊர்மக்களுடன் இணைந்து களத்தில் நின்று இரவோடிரவாக நடவடிக்கை மேற்கொண்டார்.      

Read More

திருமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யுவுள்ள இப்தார் நிகழ்வுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Read More

யாழ் முஸ்லிம்களின் வரலாற்று நுால் வெளியீட்டு விழாவுக்கு றிஷாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி

ஊடகப் பிரிவு அஸ்ஸலாமு அலைக்கும். இன்று இடம் பெறும் இந்த நுால் வெளியீட்டு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த போதும்,தவிர்க்க முடியாதத காரணம் காரணமாக வருகைத்தர முடியாமையினையிட்டு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். வடமாகாண முஸ்லிம்களின் வரலாறு இந்த நாட்டை பொறுத்தவரையில் பதிவு செய்ய வேண்டிய முக்கியமான விடயமாகும்.பல நுாற்றாண்டு கால வரலாற்றைவுடைய வடமாகாண முஸ்லிம்களின் கடந்த கால அரசியல்,சமூக பொருளாதார வரலாறு என்பது நாட்டின்…

Read More

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக TV பார்த்தால் ரத்த கொதிப்பு அதிகரிக்கும் -ஆய்வில் தகவல்

குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக டி.வி பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து பிரேசில் ஆய்வாளர் அகஸ்டோ சீஸர் எப்.டி. மோராயஸ் நடத்திய ஆய்வில், ஸ்பெயின், ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, சைப்ரஸ், ஸ்வீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து 2 முதல் 10 வயது குழந்தைகளான 5 ஆயிரத்து 221 பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த சேனல்களை பார்க்க வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில்…

Read More

சிரிய அகதிகளின் படகை கவிழ்க்க முயன்ற கிரீஸ் அதிகாரி (வீடியோ)

கிரீஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஐம்பத்தெட்டு சிரிய அகதிகளுடன் சென்ற காற்றடைத்த படகை கவிழ்க்க முயன்ற வீடியோ துருக்கி அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கூரிய முனை கொண்ட ஈட்டியால், சிரிய நாட்டு அகதிகளின் படகை வேண்டுமென்றே சேதப்படுத்திவிட்டார். இதன்பின்னர், கவிழத் தொடங்கிய அந்தப் படகிலிருந்த சிரிய அகதிகளை காப்பாற்றிய துருக்கி அரசு இந்த வீடியோவை சமீபத்தில் பகிர்ந்துள்ளது. வழக்கமாக தமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் வீடியோவாக பதிவு செய்யும் துருக்கி அரசாங்கத்தின் இந்த வீடியோ இணைப்பின்…

Read More

தமயந்தி ஜயரத்னவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை எவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே அழைப்பட்டுள்ளார்.இதற்கிடையில் எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளைய தினம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

மதுபோதையில் ஓடினால் இனிமேல் ஓட முடியாது

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். ‘இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு தற்காலிக அனுமதிப்பத்திரமொன்றை வழங்கி வந்தோம். ஆனால், நேற்று முதல், அந்த நடைமுறையை அமுலில் இருக்காது….

Read More