Headlines

கோட்டாபய கடிதம் மூலம் (FCID)விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID) கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. மிக் கொடுக்கல் வாங்கல் மற்றும் லங்கா வைத்தியசாலை பங்கு விற்பனை மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவென இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்

ஜனாதிபதி மைத்ரிபாலவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்தமை கட்சிக்குக் கிடைத்த வெற்றியெனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலசுக, கட்சி பிளவுறும் அபாயம் நீங்கி விட்டதாகவும் இனியும் அவ்வாறு இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறு இல்லையெனவும் தெரிவித்துள்ளது. நேற்றைய சந்திப்பின் போது: எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை நியமித்தல், உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் கூட்டணியை தொடர்ந்தும் பேணுதல், நிதிமோசடிப் பிரிவு அரசியல் மயப்படுத்துவது மற்றும் வேட்பாளர் நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இது குறித்து சுக…

Read More

எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்: நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும். எனினும் எரிபொருளின் விலைகளை குறைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. திறைசேரி பிணைப்பத்திர விநியோகம் தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. எனினும் இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் சிறந்த முகாமைத்துவம் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக நிலைமை…

Read More

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே, என் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்துகின்றனர் – றிஷாத் பதியுதீன்

என் மீது சுமத்தப்படுவது போலி குற்றச்சாட்டுக்கள் எனவும்,இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்களின் மற்றுமொரு சதியாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு வெளி மாவட்டத்தாரின் குடியேற்றமும் இடம் பெறவில்லையெனவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீளக்குடியேறுவதாகவும் கூறினார். தற்போது தொடர்ச்சியாக சில ஊடகங்கள் வெளியிட்டுவரும் வில்பத்து காட்டுப் பகுயினை அமைச்சர் றிசாத் பதியுதீன் அழிப்பதாக கூறும் செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வியாழக்கிழமை கொழும்பில்…

Read More

நீர்கொழும்பு கடற்கரையில், அபூர்வமான கடல் உயிரினம்

நீர்கொழும்பு கடற்கரையில் இப்படியான அபூர்வமான கடல் வாழ் உயிரினம் ஒன்று மீனவர்களுக்கு கிடைத்தது. மீனை போன்று இருக்கும் இந்த உயிரினத்தின் மேல் பகுதியில் மானுக்கு இருப்பதை போன்ற புள்ளிகள் காணப்படுகின்றன.

Read More

அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது!- அவுஸ்திரேலியா

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.இலங்கைக்கு வருகை தந்திருந்த அந்த நாட்டின் குடிவரத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் இருந்து தமிழக முகாம்களில் இருந்தும் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் வருகை, அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரம் அல்ல. இலங்கையின் உள்நாட்டிலும் பிரச்சினையை குறைத்துள்ளது என்று டட்டன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் டட்டன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க…

Read More

தேசத்திற்கு மகுடம் 2013ல் அபிவிருத்தியின் நிதி தொடர்பில்:இலஞ்ச ஆணையாளரிடம் முறைப்பாடு

அஸ்ரப் ஏ சமத் 2013ல் அம்பாறையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தியின்போது 3 பஸ் நிலையங்களை அமைப்பதாக சொல்லி முன்பு கடமையில் இருந்த அரசாங்க அதிபர் நில் தி அல்விஸ் கோட்டாப ராஜபக்சவின் தணிப்பட்ட கணக்குக்கு 13 கோடி ருபாவுக்கான காசோலையை வழங்கியிருந்தார். மேற்படி விடயமாக அம்பாறை ஜே.வி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் எல்.பி வசந்த பியதிஸ்ச கொழும்பு இலஞ்ச ஆணையாளரிடம் நேற்று முறைப்பாடு செய்தனர். இவ் நிதிமோசடி சம்பந்தமாக உடனடியாக கோட்டாபாய ராஜபக்ச, அம்பாறையில் கடமையில்…

Read More

தேசிய மொழிக் கொள்கை சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு இரண்டாம் மொழிகற்பிக்கும் நடவடிக்கை

எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் தேசிய மொழிக் கொள்கை சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு இரண்டாம் மொழிகற்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள நூறு இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள மொழியை ஆறுமாதகாலத்தில் கற்பிக்கும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் அல் – அறபா இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இத்திட்ட அங்குராப்பண நிகழ்வில் நகர சபைத்தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டார். இளைஞர் கழகத்தின் செயலாளர் முகம்மது சஜிர் தலைமையில் நடைபெற்ற…

Read More

பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கையேடு இன்று வெளியீடு

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். இதுகுறித்த விளம்பர அறிவித்தல் நாளை மற்றும் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியிடப்படும் என அவர் கூறினார். கடந்த உயர் தர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும். தொழிநுட்ப பிரிவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு…

Read More

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட 9பேருக்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காவியுடைக்கான துணிகளை விநியோகித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கே நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இடம்பெற்ற பிரசாரத்தின் போது, பொதுசொத்துக்களை நாசம் செய்தமை போன்றவற்றுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, இந்த ஒன்பது பேருக்கும் எதிராக பெவ்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண…

Read More

முஸ்லிம்கள் அடிப்பட்ட போது அமைதியாக இருந்த மஹிந்தவுக்கு திடீர் ஞானம்: முஜிபூர்

முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த தருணத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை கண்டுக்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது முஸ்லிம் தலைமைகளை சந்திக்க தீடீரென ஞானம் பிறந்தமைக்கான காரணம் என்ன?  என்று மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயமிழைக்கப்பட்டபோது சட்டத்தை அமுல்படுத்தாது வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனாதிபதி இன்று முஸ்லிம்களுடன் சந்திப்புகளை ஏற்பாடுசெய்வது நகைப்புகுரியதாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய…

Read More

மானங்கெட்ட முஸ்லிம் நாடுகள்…!

– சிராஜுல்ஹஸன் – நபிகளாரின்(ஸல்) உருவத்தைக் கேலி சித்திரமாக வரையும் போட்டி அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. “அமெரிக்க சுதந்திரப் பாதுகாப்பு இயக்கம்” எனும் அமைப்பு இதை நடத்தியது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக இது நடத்தப்பட்டதாம். இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தெரியாமல் நடந்துவிட்டால் மன்னிக்கலாம். ஆனால், வேண்டுமென்றே, உலக அளவில் முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு இந்தச் சுதந்திரப் பாதுகாப்பு இயக்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை….

Read More