Headlines

கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார் அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு அழைத்துச் சென்ற தலைசிறந்த மனிதர் மௌனித்துவிட்டார். நீங்கள் எப்போதும் எமக்கு முன்னுதாரணமாயிருப்பீர்கள். உங்களைப் போன்ற ஒரு தலைசிறந்த மேதை மறைந்தது பாரத தேசதுக்கு மட்டுமல்ல அறிவால் நிறைந்த முழு உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். உங்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை…

Read More

முபாரக் விடுதலை

900 பேரை கொன்ற வழக்கில் இருந்து எகிப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் இன்று விடுவிக்கப்பட்டார். அராபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்தபோது ராணுவம் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கையில் போராட்டக்காரர்களில் சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில்…

Read More

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தி

தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக விசாரணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் மீளாய்வு செய்யப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் பற்றிய விபரங்ளை வர்த்தமானியில் அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சில தொகுதிகள் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக, உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அசோக பீரிஸ் தலைமையில் குழுவொன்றை நிறுவியிருந்தார். எல்லை நிர்ணயம் தொடர்பில்…

Read More

155 சட்டவிரோத ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைப்பு

சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் வேலைத்­திட்­டத்தின் கீழ் இதுவரை 155 ஆயு­தங்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் நட­வ­டிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்­ப­மாகி எதிர்­வரும் மே 6 ஆம் திகதி முடி­வ­டை­கி­றது. இக்­கா­லத்­தினுள் கைய­ளிக்­கப்­படும் ஆயுதம் தொடர்பில் எவ்­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் ஆயு­தங்­களை கைய­ளிப்­ப­வர்­க­ளுக்கு அவற்றின் வகை­க­ளுக்கு ஏற்ப பணத்தொகை வழக்­கப்­ப­டு­வ­தாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் மே 6 ஆம் திக­தியின்…

Read More

கோட்டாபய கடிதம் மூலம் (FCID)விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID) கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. மிக் கொடுக்கல் வாங்கல் மற்றும் லங்கா வைத்தியசாலை பங்கு விற்பனை மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவென இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

கொழும்பை நோக்கி படையெடுக்கும் பாதயாத்திரை!

கடந்த 28ஆம் திகதி கண்டியிலிருந்து கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையானது இன்று இறுதி நாளுக்கு வந்துள்ளது. நேற்று மாலை கிரிபத் கொடையை வந்தடைந்த இவர்கள் இன்று காலை கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர். இன்று மாதத்தின் முதல் நாள், வாரத்திலும் முதல் நாள். கொழும்பு தலைநகரம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் இன்று மக்கள் மத்தில் ஒரு பதட்டமான நிலை காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கின்றது. இந்த பாதயாத்திரை கொழும்பை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் கொழும்பில் இவர்கள் எங்கு…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது…

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது… இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தவிசாளர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட விடயங்கள் இந்த பிரதேச மக்களுக்கு செய்து கொடுக்கப்படும் அதேபோல் இந்த பிரதேசத்தில் வாழும் இளைஞ்சர் யுவதிகளின் பிரச்சினைகள் அதேபோல் இந்த பிரதேசத்தில் இருக்கும் 83 கிராமங்கள் உள்ளது அதேபோல் 34 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் மக்களின் பிரச்சினைகள் இந்த பிரதேசபை…

Read More

கிளிநொச்சியில் வரலாற்றிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி

கடந்த 71 வருடங்களின் பின்னர் கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி நேற்று (16) பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இது 373.2 மி.மீ. என கணிப்பிடப்பட்டுள்ளது. 1945 டிசம்பர் 5 ஆம் திகதியே அப்பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது 260 மி.மீ. எனவும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

Read More

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட 7 பேரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விமல் வீரவன்ச, வீரகுமார திசாநாயக்க, ஜயந்த சமரவீர, மொஹமட் முசம்மில், ரோஜர் செனவிரத்ன, பியசிறி விஜேயநாயக்க உள்ளிட்ட 07 பேர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான்…

Read More

கல்விக்காக ஏங்கும் சிறார்களுக்கான சிறுவர் முன்பள்ளி திறப்பு (படங்கள்)

ஊடகப் பிரிவு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முசலி பிரதேசத்தில் வெளிமலை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி பாடசலையினை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹ்யான்,முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Read More

அரிசியின் விலை  மேலும்  குறைகின்றது. சதொச அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசியின் அசாதாரண விலையேற்றம் காரணமாக மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை நாடெங்கும் சில்லறையாகவும் மொத்தமாகவும் விநியோகிக்க சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாடு பூராகவுமுள்ள 370 சதொச நிறுவனத்தினூடாக சாதாரண விலையில் அரிசி உட்பட அத்தியாவசிப் பொருட்களை  நியாயமான விலையில சதொச நிறுவனம் வழங்கி வருகின்றது. நுகர்வோரின் நன்மை கருதி  இன்று நள்ளிறவு முதல் (19) மீண்டும் அரிசியின் விலையை குறைக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோண் தெரிவித்தார். இன்று (19) வொக்ஸ்வல் வீதியில்…

Read More

கட்டார் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் இறுதி அமர்வில் இலங்கைக்கு பாரிய வெற்றி!- அமைச்சர் ரிஷாட்

கட்டார் – இலங்கை இடையிலான பொருளாதாரம்இ வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவுக்கான கூட்டு ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இரு தரப்பினருக்கும் பாரியளவில் நன்மையை பெற்றுக்கொடுப்பதோடு தற்போது காணப்படும் 45 மில்லியன் அமெரிக்க டொலுருக்கு அதிகமான அளவிற்கு இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க உதவுமென நான் நம்புகிறேன’என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில் கடந்த இரண்டு நாட்கள் (30-31) சினமன் லேக் ஹோட்டலில் இடம்பெற்ற கத்தார்-இலங்கைக்கிடையிலான பொருளாதாரம்இ வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவுக்கான கூட்டு…

Read More