காணிப்பிரச்சினையே அனைத்து முரண்பாடுகளுக்கும் அடிப்படையான நிலையை வடக்கில் தோற்றுவித்துள்ளது. மன்னாரில் அமைச்சர் றிஷாட்
அமைச்சின் ஊடகப்பிரிவு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பிரச்ச்pனையேயென்றும் இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றதெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரிய கரிசலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மாவாட்டத்தில் சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி, பெரியமடு, காக்கையன்குளம் விடத்தல்தீவு, சன்னார், தலைமன்னார் பியர், மற்றும் முல்லைத்தீவு…
