Headlines

விஷேட குழு ஒரு மாதத்துல் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு ஜனாதிபதி செயலகம் அறிக்கை.

மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் அவர்களது தலைமையில் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட வன பாதுகாவல் திணைக்கள அலுவலர்களும் இக் கலந்துரையாடலில் கலந்த கொண்டனர். அப் பிரதேச மக்கள் சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தால் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்தரையாடப்பட்டது. இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக…

Read More

இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து பாராமுகமாக இருக்கக்கூடாது!

நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (16.05.2017) நண்பகளலவில் விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர் வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பு அதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறு வேண்டினார். புனித றமழான் நெருங்கும் போது இனவாதிகள் இவ்வாறான குழப்பத்தை உருவாக்கி சமூகங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டதை கடந்தகால வரலாறு. அந்த பின்னணியிலேயே வெல்லம்பிட்டி…

Read More

மறிச்சுக்கட்டிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டுகின்றது. மூவர் கொண்ட குழு நியமிக்க ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

-ஊடக அறிக்கை   1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட முன் முசலி மற்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அந்த பிரதேசங்களை நீக்கி வன பாதுகாப்பு பிரதேச பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் பி.பி அபேயகோன் இணக்கம் தெரிவித்தார். முசலி பிரதேசத்தில் மாவில்லு வன பாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான உயர்மட்ட மாநாடொன்று  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி செயலாளர்…

Read More

கூட்டுறவு அடிப்படையில் தையல் பயிற்சி நிலையங்கள் – கற்பிட்டியில் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு   நாடு முழுவதிலும் 180 தையல் பயிற்சி நிலையங்களை உருவாக்கி கூட்டுறவின் அடிப்படையில் 6மாதங்களின் பின்னர் அவற்றை தொழில் நிறுவனங்களாக மாற்றும் திட்டமொன்றை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு முன்னெடுத்து வருவதாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கற்பிட்டியில் அல் – அக்ஸா தையல் தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,  தனது அமைச்சின் கீழான இலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகளுக்கான  நிறுவனம் (சிலிட்டா)…

Read More

இணைத்தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம்…

கோறளைப்பற்று வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று 15.05.2017ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது சமுர்த்தி , பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை , நட்டு வளர்ப்பு போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஶ்ரீநேசன்,மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Read More

புத்தளத்தின் பலவந்தமான சூழலியற் பாதிப்புகளுக்கு தொடர்ச்சியான பிரதிநிதித்துவம் இல்லாமையையே காரணம். கற்பிட்டியில் அமைச்சர் றிஷாட்

அமைச்சின் ஊடகப்பிரிவு புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்கு புத்தளத்தின் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் நீண்ட இடைவெளியே பிரதான காரணமென்று என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த கால சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளினாலேயே புத்தளம் மாவட்ட பாராளுமன்றக் கனவு சிதைந்து…

Read More

அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கு அபுதாபி கொடைவள்ளல் மனிதாபிமான உதவி ஆரம்ப கட்டமாக 120 வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் வடமாகாண அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கென ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நாட்டைச் சேர்ந்த தனவந்தரும் கொடைவள்ளலுமான மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் அல்ஹாஜ் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அயராத முயற்சியினாலும் வேண்டுகோளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த அந்த கொடைவள்ளல் முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களுக்குச் சென்று அங்கு மீளக்குடியேறியுள்ள அகதிகளின் துன்பங்களை நேரில் கண்டறிந்தார். “ஆரம்பக் கட்டமாக இந்த…

Read More

இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை துரத்தி துரத்தி அடிக்கின்றன. பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு. வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ அத்தனை உச்சக்கட்டத் தடைகளையும் இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று (13) அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு சோதனைகளையும்…

Read More

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் ! ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு ஒரு வெட்டு முகப் பார்வை

சுஐப் எம்.காசிம் மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடாத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று மாலை (2017.05.08) தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது ஓர் ஆரோக்கியமான வெற்றியின் முதற்படிக்கல்லாகும். ஜனாதிபதியுடன் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வர்த்தமானி பிரகடனத்தால் முசலி பிரதேச முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள…

Read More

கல்முனை வீடமைப்பு கிளைக் காரியாலயம் இடம்மாறாது. அமைச்சர் றிஷாட்டிடம் அமைச்சர் சஜித் நேரில் உறுதி

ஊடகப்பிரிவு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று (2017.05.09) காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த அவர்  இந்தக் கிளைக்காரியாலயத்தை இடமாற்ற மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அம்பாறை முஸ்லிம் பிரதேச மக்கள் கவலைகொண்டுள்ளதாகவும் இவ்வாறான நிலை ஏற்பட்டால் அந்தப் பிரதேச மக்களுக்கு காரியங்களை நிறைவேற்றுவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான சூல்நிலை உருவாகுமென்றும் அவர்…

Read More

வெசாக் காலத்தில் பொருட்களுக்கு எந்தத் தட்டுப்பாடுமில்லை விலையை வேண்டுமென்றே அதிகரித்தால் சட்ட நடவடிக்கை அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

ஊடகப்பிரிவு வெசாக் பண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எத்தகைய தட்டுப்பாடும் ஏற்படாதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களின் விலையை அதிகரித்து விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இதே வேளை அத்தியாவசிய உணவுப்பண்டங்கள் இறக்குமதி மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹேமக்க பெர்னாண்டோ, சந்தையில் பொருட்கள் தாராளமாக இருப்பதாகவும் எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் உறுதிபடத் தெரிவித்தார். கடந்த வெசாக்…

Read More

பைசர், றிஷாட், அசாத் சாலி, மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது

சுஐப் எம் காசிம் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை இன்று மாலை தற்காலிகமாக (08) இடை நிறுத்திக்கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று காலை (07) நடாத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்; போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர்களான றிஷாட்…

Read More