Headlines

புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தினால் குற்றம்

மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் அலைபேசிகளை பயன்படுத்தி கொண்டு வாகனம் செலுத்துவது குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தண்டம் பத்திரிகையை வழங்கமுடியாது என்றும் அதனால் அவ்வாறான சாரதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாதுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார். சீருடையில் கடமையில்…

Read More

ஒபாமாவின் மனைவி ஏன் முக்காடு போடல? வெள்ளை மாளிகை விளக்கம்

சவுதி பயணத்தின் போது ஒபாமாவின் மனைவி மிஷேல் முக்காடு போடாததற்கு வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.சமீபத்தில் சவுதிக்கு ஒபாமாவுடன் பயணம் மேற்கொண்ட அவரது மனைவி மிஷேலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் முக்காடு அணியாததால் சவுதியில் சில அதிகாரிகள் அவருடன் கைகுலுக்க மறுத்து, ஒபாமாவை மட்டும் கைக்குலுக்கி சென்றனர்.இச்செயல் மிஷேலை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. மேலும் மிஷேலின் உருவத்தை சவுதி தொலைக்காட்சியில் மங்கலாக்கி ஒளிப்பரப்பட்டது. ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பில்லை என அந்நாட்டு தொலைக்காட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளது….

Read More

சன்ன மற்றும் நலீன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர்களான சன்ன விஜேவர்தன மற்றும் நலீன் பெரேரா ஆகியோருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் 113 லட்ச ரூபா அரசாங்கப் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணைக்கான வாக்குமூலம் அளிப்பதற்கே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

Read More

மாணவத் தலைவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன்

கண்டி – செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை 10ஆம் வகுப்பு மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று  (29)நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவத் தலைவரை கண்டி பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். குறித்த 10ஆம் வகுப்பு மாணவன் தற்போது கட்டுகஸ்தோட்டை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொழும்பில் மாணவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்

தனியார் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்த கிழமையில் நடத்தப்போவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

Read More

இறுதி முடிவு இன்று ஐ.தே.கவுடன் 3 மாவட்டத்தில் போட்டி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 03 மாவட்டங்களில் போட்டியிட இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 03 மாவட்டங்களிலேயே ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புத்தளம் மாவட்டத்தில் ஐதேக பட்டியலில் அ.இ.ம.கா சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் நவவியும் குருநாகல் மாவட்டத்தில் டொக்டர் சாபியும், அநுராதபுர மாவட்டத்தில் இசாக் ஹாஜியாரும்…

Read More

வட்டரக்க தேரரின் இரகசிய கடிதப் பையை பெற்றுத் தாருங்கள் – நீதிபதியிடம் வேண்டுகோள்!

ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் மீதான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.பாணந்துரை பிரதான மஜிஸ்த்ரேட் ருசிர வெலிவத்தவினால் இவ்வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கியதாக கூறப்பட்டு தேரருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சிகள் ஆறுபேரை அடுத்த விசாரணையின் போது நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு…

Read More

பதவியேற்ற நேரம் முதல் இன, மத, மொழி, பேதங்களுக்கு இடமளிக்கமாட்டேன் – மைத்திரிபால

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் ஒரு தடவையாக மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பு வர்த்தகக் கண்காட்சி மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய ஐக்கிய அமைப்பின் முஸ்லிம் சமூக ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். உலக நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 அல்லது ஐந்து வருடங்களேயாகும். எமது நாட்டில் மட்டுமே அது ஆறு வருடங்களாக உள்ளது. நான்…

Read More

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கை வருகிறார்..!

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பினை ரஸ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி புட்டின் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ரஸ்ய தலைவர் ஒருவர் இலங்கை;கு விஜயம் செய்ய உள்ளார். புட்டினின் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

புத்தளம் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராக மர்ஹூம் பீ.எம்.ஜனாப் திகழ்ந்துள்ளார் – தலைவர் ரிஷாட் அனுதாபம்!

புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிராம அதிகாரியும் சிறந்த சமூக சேவையாளருமான அல்ஹாஜ் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாருக்கு இறைவன் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன வாழ்வை நல்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “புத்தள வரலாற்றில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியானது…

Read More

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

KALEEL S. MOHAMMED விசேட செயலமர்வு – கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு! 2015 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கைநூல் (University HANDBOOK 2015/2016) வெளியாகியுள்ள நிலையில் அவ் அனுமதிக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் மத்தியில் தமக்கு பொருத்தமான பாடநெறி அத்துடன் அதற்கு பொருத்தமான பல்கலைகழகம் என்பனவற்றை தெரிவு செய்வதில் பல்வேறு முரண்பாடுகள், குழப்பங்கள் மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது. தற்போதுள்ள Z புள்ளி நடைமுறையில் தங்களது…

Read More

கோத்­த­பாய சுப்பர் மேன் இல்லை

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மட்­டுமே ‘சுப்பர் மான்’ என்­றில்லை என்­பதை நாம் நிரூபித்­துள்ளோம் என தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தனது அமைச்சில் நடை­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து உள்­ளக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். உலக குடிநீர் தினத்தை முன்­னிட்டு நடை­பெ­ற­வுள்ள தேசிய நிகழ்வு குறித்த ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சின் ஏற்­பாட்டில் நேற்­றைய தினம் அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது….

Read More