Headlines

மண்டாடுகம பாடசாலை மைதானம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில், அநுராதபுரம், மண்டாடுகம முஸ்லிம் வித்தியாலய மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவு  செய்யப்பட்டது. ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மைதானம், இஷாக் ரஹ்மான் எம்.பியினால் மாணவர்களின் பாவனைக்காக   கையளிக்கப்பட்டது.      

Read More

தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்வில் மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்காக புதிய தீர்மானங்கள் எடுப்பதற்காக முன் மொழிகள் பற்றிய ஒரு பட்டறை கொழும்பில் நடத்தப்பட்டது இந்த கருத்தரங்கில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாம்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

லீ குவான் யூ இறுதிச்சடங்கில் அமெரிக்கா சார்பில் கிளிண்டன்

சிங்கப்பூரின் தந்தை மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகின்றது. இதில் கலந்துகொள்ள முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமையிலான அமெரிக்கா குழு சிங்கப்பூருக்கு செல்வதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பில் கிளிண்டன் தலைமையிலான குழுவில், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கரும் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று அந்நாட்டு…

Read More

எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள் தானே! சம்பிக்கவிடம் புலம்பிய மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு கிழமைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்போது தொலைபேசியின் அடுத்த பக்கத்தில் பேசியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆவார். எனினும் கோபமில்லாத தொணியில் பேசிய மஹிந்த ராஜபக்ச, “ஒயாலா ஒக்கோம எக்கத்துவெலா மாவ பரத்துவா நெத்த”? ( நீங்கள் எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்தானே? என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். எனினும் அதற்கு பதிலளித்த ரணவக்க, ஏற்கனவே உங்களுடன் பேசி முடியாத நிலையிலேயே பொதுவேட்பாளரை தமது கட்சி ஆதரித்ததாக…

Read More

2016 ஜனவரிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்க உறுதி

கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் 2016 ஜனவரி இறுதிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இதனை தெரிவித்துள்ளார். நேற்று மாலை அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மீரியாபெத்த மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருட காலமாகியும், வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படாதவண்ணம் நிலத்தை செப்பனிடுதல், மூலப்பொருட்களின் விநியோகம், போன்ற பல காரணிகள் இதற்கு…

Read More

மஹிந்த ராஜபக்ஷவின் இப்போது ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால்

சர்­வ­தேச தரத்­தி­லான விசா­ர­ணை­யையே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு அறிக்கை கலப்பு நீதி­மன்றம் என்ற பெயரில் வலி­யு­றுத்­தி­யுள்­ளதே தவிர இது சர்­வ­தேச விசா­ர­ ணை­யல்ல என்று தெரி­வித்­துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால் எமது நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை விதிக்­கப்­பட்­டி­ருக்கும் என்றும் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக நெடுஞ்­சா­லைகள் மற் றும் பல்­க­லைக்­க­ழகக் கல்வி தொடர்­பான அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை…

Read More

மஹிந்தவை மத்திய குழு கட்டுப்படுத்த முடியாது.!

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் மத்­திய குழு எடுக்கும் தீர்­மா­னங்கள் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை கொண்­டது. எனினும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த நாட்டின் முன்னாள் ஜனா­தி­ப­தி­யாவார். எனவே ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வழி­ந­டத்­து­வது போன்று அவரை வழிநடத்த முடி­யாது. அவரை இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுகவேண்டும். ஆகவே அவ­ரது விடயத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரத்­தி­யே­க­மான முறையில் கையாள்வார் என திறன் விருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று (18) காலை…

Read More

கோப் குழுவுடன் விஷேட சந்திப்பு

கோப் குழுவுடன் விஷேட சந்திப்பு ஒன்று எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை பத்திரங்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகை சம்பந்தமாக, தான் வழங்கிய சுயாதீனமான அறிக்கை தொடர்பாகவும் கோப் குழுவுடன் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

விசமிகள் போட்ட புதிய பூட்டினால் ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தில் இன்று முதலாம் ஆண்டிற்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் பாடசாலை பூட்டை உடைத்தெறிந்து விட்டு இனந்தெரியாத விசமிகள் வேறு பூட்டை போட்டுவிட்டுச்சென்றதால் மாணவர்களும் பெற்றோரும் பாடசாலையினுள் செல்லமுடியாது வெளியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிஞ்சு மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் தவித்ததை அவதானிக்க முடிந்தது. நேற்று வழமை போன்று பாடசாலையை மூடிவிட்டுச்சென்று இன்று காலை பாடசாலை திறக்க வந்தபோது…

Read More

நீதிமன்றில் ஆஜராகாத பொது பலசேனா பிக்குகளுக்கு பிடியாணை

கடந்த அர­சாங்­கத்தில் கைத்­தொழில் அமைச்­ச­ராக  ரிஷாத் பதி­யுத்தீன் இருந்த போது அவ­ரது  அமைச்­சிற்குள் பலாத் கார­மாக நுழைந்து குழப்பம் விளை வித்த சம்­பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் இரு பிக்­கு­களை கைது செய்ய நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. இச்­ச­மப்வம் தொடர்பில் ஏற்­க­னவே  குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பைச் சேர்ந்த 6 பிக்­கு­மார்கள்  பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், தொடர்ச்­சி­யாக வழக்­கு­க­ளுக்கு ஆஜ­ரா­காத 4 ஆவது மற்றும் 5 ஆவது சந்­தேக நபர்­க­ளான பிக்­கு­க­ளையே கைது செய்ய…

Read More

கொழும்பில் வேட்டை ஆரம்பம்

கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ், இன்று திங்கட்கிழமை (15) முதல், விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய படையணி மூலம், இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்புத் தரப்பினர், தேவையேற்படின், விமானப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்றனர். போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம்…

Read More

சகவாழ்வை ஏற்படுத்துவோம் – அமைச்சர் ருவன் விஜேவர்த்தன

நாட்டில் இருந்த இனப்பிரச்சினையை தீர்த்து இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவே இணக்க அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 20 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கட்சியை பாதுகாத்துவந்த ஆதரவாளர்களுக்கு சேவைசெய்யும் காலம் கனிந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதி மல்வான அல் முபாரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Read More