Headlines

மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகள் தேசிய ஒருங்கிணைப்பாளராக டாக்டர் பரீட்

மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். பரீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுகாதார சேவைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (24.10.2017) கையளித்தார். முன்னாள் நிதி அமைச்சராகவும், பிரதி நீதி அமைச்சராகவும், நீண்டகால நிந்தவூர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய மர்ஹூம் எம். எம். முஸ்தபாவின் மருமகனான வைத்திய கலாநிதி பரீட் அரசியலில் நீண்டகால பாரம்பரியம் கொண்டவர். மர்ஹூம் எம்.எச்எம். அஷ்ரப்…

Read More

கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாகாணங்களில் நியமியுங்கள்-அகிலவிராஜை நேரில் சந்தித்து றிஷாட் எடுத்துரைப்பு

தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களை மீள்பரிசீலனை செய்து, அந்த ஆசிரியர்களுக்கு சொந்தமான  மாகாணங்களுக்கு  வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து தெளிவுபடுத்தியதுடன் எழுத்து மூலமும் கடிதமொன்றையும் கையளித்தார். புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் வதியும் மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணங்களுக்கு கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை நியமித்துள்ளமையை உடனடியாக இரத்துச் செய்து, அந்தந்த…

Read More

அ/ஸ்ரீ ராகுல ஆரம்ப பாடசாலையின் பிரச்சினை தொடர்பாக அவதானித்த இஷாக் ரஹ்மான்

தலாவ விரதேச செயலாளர் பிரிவில் எப்பாவல அ/ஸ்ரீ ராகுல ஆரம்ப பாடசாலையின்   எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் படசாலைக்கு விஜயம் செய்து கேட்டறிந்த போது.  

Read More

மொஹமட் பாயிஸ் தலைமையில் ஊடக நிகழ்வு

மனித உரிமைகள் ஊடக பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் பயிற்சிப்பட்டறையிள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு தபால் தலைமைக்காரியாள கேற்போர் கூடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் தலைமையில் நடைபெற்றது. பயிற்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் மொஹமட் பாயிசினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் முகியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் இறக்காமத்தில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு வீடுகள்.

இறக்காமத்தில அண்மையில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பத்துக்கு வீடு கட்டித்தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில்  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் அவர்களினால்  வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இன்று அதற்கான முதற்கட்ட 100000/- பணம் உயிர் இழந்த மூன்று குடும்பங்களுக்கும் முன்னால் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ்  மீராசாஹிபினால் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் ?

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்….

Read More

கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் ரிஷாட் உயர்மட்ட வர்த்தகர்களின் கூட்டத்திலும் பங்கேற்பு

இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, நாளை (24.10.2017) கட்டார் நாட்டுக்கு பயணமாகும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இணைந்துகொள்கின்றார்.  இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம்,  முதலீடு, உல்லாசத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை மேம்படுத்தல் மற்றும் இன்னோரன்ன விடயங்களை நோக்காகக்கொண்டு   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த தூதுக்குழுவின  விஜயத்தின் போது, வர்த்தக மேம்பாடுகள்  தொடர்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை –…

Read More

சமூகத்திற்கிடையே நல்லிணக்கம் பேணப்படுவது அவசியம் 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோவில் சிலைகள் இனம்தெரிய நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது. உடைக்கப்பட்ட வணக்கஸ்தலத்தை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பிரத்தியோகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்கள்  நேற்று பார்வையிட்டதோடு இன்றய தினமும் கோவில் புனர்நிர்மான வேலைகளினையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டார் இதன்போது வருகைதந்திருந்த கிராமவாசிகளிடம் கருத்து தெரிவித்த றிப்கான்  பதியுதீன் அவர்கள் ” சிறுபான்மை…

Read More

ஆறு நாடுகளிலிருந்து இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி டிசம்பர் 31 க்குள் கொழும்பு வந்து சேருகின்றது. 

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஐந்து இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, அவசரமாக மேலும் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட உயரதிகாரிகளை உள்ளடக்கிய விஷேட கேள்விப்பத்திர சபை, அரிசிக்கான சர்வதேச…

Read More

இனங்களைத் துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக் கூடாது. வவுனியாவில் அமைச்சர் றிஷாத்

.இனங்களைத் துருவப்படுத்தி, சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.   வவுனியாவில் ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று காலை (22.10.2017)இடம் பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார். நோர்த் மாஸ் மீடியா கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா ஓவியா ஹோட்டலில் இடம் பெற்ற இந்த…

Read More

நாளை முதல் நடமாடும் சேவை மூலம் அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை அமைச்சர் றிஷாட் பணிப்புரை.

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்குகிணங்க கூட்டுறவு மொத்த விற்பனைநிலையம் (cwe) நாளை  முதல் ( 22/10/2017) லொறிகள் முலம் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை நடமாடும் சேவையை ஆரம்பிக்கிறது. வியாங்கொட. மினுவாங்கொட. கம்பஹா  ராகம கனேமுல்லை. மருதானை. ஹோமகம, கிரிபத்கொட, தெல்கந்த  ஆகிய இடங்களில் முதற்கட்டமாக நடாத்தப்படும் இந்த நடமாடும் விற்பனை சேவையை எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூட்டுறவு…

Read More

பிபில முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யுங்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் வலியுறுத்து.

பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து  அட்டகாசம் புரிந்து அங்குள்ள வர்த்தகர்களை தாக்கிய நபர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி மக்களின் சுமுக வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஊவா மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரேம சாந்த அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். எந்த விதமான காரணங்களுமின்றி கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இவர்களின் செயல்கள் மேலும் எல்லை மீறி இன…

Read More