Headlines

ஜூனில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடைபெறும்

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான எல்லை மீள் நிர்­ணய பணிகள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. இது குறித்­தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கைய­ளிக்­கப்­பட உள்­ளது. இதன்­படி ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் பிற்­போ­டப்­ப­ட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள…

Read More

பதவி வெற்றிடம்

நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் மாத்திரமே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரிவுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களும்…

Read More

சிறப்பு வலய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள யோஷித!

சி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது. யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.என்.சீ.தனசிங்க தெரிவித்துள்ளார். இந்த சிறைப்பகுதிக்கு அருகில் உள்ள சிறையில் இருந்து கையடக்கத்தொலைப்பேசி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும்…

Read More

இலங்கை வரும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சுவிட்ஸர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் வொல்ட்ஸ்ரோம் யாழ். குடாநாட்டிற்கும் செல்லவுள்ளார்.சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து சுவிஸ் அமைச்சர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மறவன்புலோவில் சுவிஸ் நாட்டின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தை பார்வையிடுவதற்காக சுவிஸ் அமைச்சர் எதிர்வரும் 26ஆம் திகதி…

Read More

இனி பாஸ்வேர்ட் வேண்டாம்… செல்ஃபி போதும்!

டெக்னாலஜியின் வளர்ச்சியை இரண்டு காலங்களாக இப்படி பிரிக்கலாம் – இருக்கின்ற டெக்னாலஜியை வைத்து ஃபன் பேக்டரை தேடிக் கொள்வது டிமு( டிஜிட்டலுக்கு முன்). அதுவே மக்கள் எதை ஃபன் ஃபேக்டராக கருதுகிறார்களோ அதை வைத்தே டெக்னாலஜியை உருவாக்குவது டிபி டிஜிட்டலுக்கு பின் ( அட டிபி- டிஸ்ப்ளே பிக்ச்சர் ). அப்படி ஒரு முயற்சியைதான் எடுத்திருக்கிறது மாஸ்டர் கார்ட் நிறுவனம். கிரெடிட், டெபிட் சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளருக்கு புதியதொரு அனுபவத்தையும், பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பையும்…

Read More

இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது!

மீகஹவத்தை – சியம்பலாபேவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நவகமுவ பகுதியில் வைத்து பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. சியம்பலாபேவத்தை பகுதியில் கடந்த முதலாம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்திகள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்களை இன்று மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

வெலிமடையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் மக்கள் சந்திப்பு

  ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வெலிமடை எப் சி மண்டபத்தில்  நடைபெற்றது.  இந் நிகழ்வில் வெலிமடை மற்றும் அயல் பிரதேசங்களின் முக்கிய தலைவர்கள், பிரதேச வாசிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        

Read More

உப்பு நிறுவனம் குத்தகையில் வைத்திருந்த 1050 ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானம்!

பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். திருகோணமலை, நிவாவெளி, இறக்க கண்டி, கும்புறுபிட்டி, குச்சவெளி சிறுமீன்பிடி கைத்தொழிலாளர்களின் தொழிலைத் தடையின்றி மேற்கொள்ளும் பொருட்டே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதனால், அன்றாட ஜீவனாம்சங்களில் ஈடுபடும் சிறுமீனவர்கள், தங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்…

Read More

புறப்படுங்கள்..

மிஹ்வார் அஹமட் மஹ்ரூப் இன்றைய சூழலில் நமது உரிமைகளை வாக்குகள் மூலம் வென்றெடுப்பதும் ஒரு போராட்டமாகவே இருக்கின்றது. ஒரே நாட்டில் பிறந்து வாழும் நம்மிடையில் மக்கள் கணக்கெடுப்பில் மட்டுமே பிரயோகிக்கப்பட்ட “சிறுபான்மை” “பெரும்பான்மை” என்ற வார்த்தை பிரயோகம், கடந்த காலத்தில் உருப்பெற்று அரசாங்கத்தினால் வளம்பெற்று வாழும் இயக்கத்தின் கொள்கைவாதிகளினால் இனக்கலவரமும், உயிர், சொத்து என அனைத்து வகையான சேதங்களையும் பார்த்துவிட்டோம். தமது சுயநலத்திற்காக சிறுபான்மை மக்கள் மீது அபாண்டமான பொய்களை சுமத்தி தமது இருப்பை உறுதி செய்துகொள்வதற்கு…

Read More

மலேசிய காடுகளில் மனித புதைகுழிகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தங்கள் நாட்டில் எல்லைகளில் எந்த விதமான சட்டவிரோத மனித முகாம்களும் கல்லறைகளும் இல்லை என்று மலேசிய அரசாங்கம் இதுவரை கூறி வந்தது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள படாங் பெசார் மற்றும் வாங் கெலியன் பகுதிகளில் உள்ள காடுகளில் ஏராளமான அகதிகளில் கல்லறை இருப்பதாக அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக மலேசிய…

Read More

கொழும்பில் நிலத்தடி ரகசிய முகாம்

கொழும்பு சைத்­திய வீதியில் ‘புட்டு பம்பு’ எனும் பெய­ரிலும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் நிலத்­துக்கு கீழ் ‘கன்சைட்’ எனும் பெய­ரிலும் கடற்­ப­டையின் இர­க­சிய தடுப்பு முகாம்கள் இருந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. புலிகள் இயக்க சந்­தேக நபர்­களை தடுத்து வைப்­ப­தாக குறிப்­பிட்டே இந்த இர­க­சிய முகாம்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அந்த முகாம்­களில் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் வைத்து கடத்­தப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மைக்­கான…

Read More

“தேர்தல் காலத்தில் பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்” அன்சில்!

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக முன்னாள் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் குற்றம் சாட்டினார்.தேர்தல் காலத்தின் போது, மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தருவதாக கட்சிகளிடம் பணப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டமையினால்தான், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் இப்போது சமூகத்துக்கான பேரம் பேசலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அன்சில்…

Read More