Headlines

சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு!!!

குவைத் நாட்டின் தனவந்தர் யாகூப் யூசூப் அல் தாஹிம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது. இதன் போது,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்ததை திறந்து வைத்தார். இதன் போது, பாடசாலையின் அதிபர் எல் எஸ் யமீனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச்…

Read More

காத்தான்குடி நூதனசாலையில் உருவச் சிலை: ACJU பத்வா குழு கடிதம்

காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூதனசாலை’ தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது…

Read More

அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம்

ஐ.எஸ். வாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம் என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார். அவர் ஆப்கானிஸ்தான் செல்லும் வழியில் விமானத்தில் பயணம் செய்யும் போது இவ்வாறு தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி – இந்தியப் பிரதமர் சந்திப்பு இவ்வார இறுதியில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வார இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். இவ்வார இறுதியில் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அப்பயணத்தின் போதே இந்தியப் பிரதமரை சந்திக்கவுள்ளார். பிரிட்டன் அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலண்டனில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி லண்டன் பயணமாகவுள்ளார். லண்டன் சென்று மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாட்டுக்கு திரும்பும் வழியில் எதிர்வரும் 13 ஆம்…

Read More

வடக்கில் இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி!!!

வடக்கில் இனவாதத்தை தூண்டிவிட்டு மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ரிவி தெரணவில் நேற்று (26) இரவு ஔிபரப்பான ´360´ அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து கூறுகையில், ´எனக்கு செய்தி ஒன்று வந்துள்ளது. அதனை நான் அமைச்சரவை விசாரணைக்கு வழங்கவுள்ளேன். முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய…

Read More

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் புதிய ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத் கண்டி தலாதா மாளிகையில் புதிய ஜனாதிபதி அஸ்கிரிய மகா பீடாதிகளிடம் ஆசிர்வதிப்பதிலும் மற்றும்  கண்டி மீரா மக்கா பள்ளிவாசலிலும் துஆ பிரத்தனையிலும் ஈடுபட்டனர்.

Read More

சுகாதார அமைச்சராக திஸ்ஸ பதவியேற்றார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட நிலையில், சுகாதார அமைச்சராக இன்று வியாழக்கிழமை  பதவியேற்றுக்கொண்டார்.  கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

Read More

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பிரமுகர்களுடனான சந்திப்பு

-சுஐப் எம்.காசிம்   – முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை அடிநாதமாகக்கொண்டு பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் “அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின்” செயற்பாடுகளுக்கு தாம் உறுதுணை அளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் கல்வி மாநாட்டின் முக்கியஸ்தர்களான அதன் தலைவர் கலாநிதி ஹுசைன் இஸ்மாயில், செயலாளர் சட்டத்தரணி ரஷீட்எம்.இம்தியாஸ், உபதலைவரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான என்.எம்.அமீன் உட்பட அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், அமைச்சரை அவரது அமைச்சில் சந்தித்துக்…

Read More

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் மீது கல்வீச்சு

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர பொலிஸ் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் எண்ணிக்கை வீதியில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிகமாக தெற்கு அதிவேக வீதிக்கு அண்மித்த பிரதேசங்களிலும் பொலிஸ் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனம் தொடர்பான பதில் பொலிஸ்மா அதிபர் அமரசிரி தெரிவித்துள்ளார். அதிவேக வீதியின் 21 ஆவது மைற்கல்லுக்கு அண்மையில் இருவர் வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களை வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் 6 வாகனங்கள்…

Read More

“வில்பத்துக்கு, முஸ்லிம்களால் எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை” – இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர்

வில்பத்துவ தேசிய வனப்பகுதிக்கு, எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை என்று, இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர் திலக் காரியவசம் தெரிவித்தார். மேலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான வெறுப்பின் காரணமாக, வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில், வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக பல முறைபாடுகள் பதிவாகியிருந்தன. இதனை ஆராயும் முகமாக, சனிக்கிழமையன்று (28) வில்பத்து வனப்பகுதிக்கு சென்ற மேற்படி கூட்டமைப்பினர், அங்கு நிலைமையைப் பார்வையிட்டனர். இதனையடுத்து அதன் தலைவர் தொடர்ந்து கூறியதாவது, “வில்பத்து…

Read More

ஜப்பானுக்கு செல்லும் மஹிந்த

உகண்டாவுக்கு அண்மையில் விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் வசித்து வரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவிற்கு நெருக்கமானவர்கள், முன்னாள் ஜனாதிபதியை ஜப்பானுக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவர்கள் விமல் வீரவன்ஸ, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை ஜப்பானுக்கு அழைத்திருந்தனர். ரோஹித்த அபேகுவர்தன…

Read More

ஐ.தே.க – அ.இ.ம.கா  கூட்டணி: மட்டக்களப்பு மக்கள் வரவேற்பு

நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிடுகின்றது இதில் முதன்மை வேட்பாளராக உள்ள முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியையும் அவருடன் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையும் ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் நேற்று (13.07.2015) வரவேற்பு வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு ஜூம்ஆ பள்ளிவாயல் ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்,வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல், மீறாவோடை,…

Read More