Headlines

அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் பாடசாலைகள், மத வழி பாட்டுத்தலங்கள் பின் தங்கிய தோற்றத்தில் காணப்பட்டிருக்காது

அதி திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கும்புக்வெவ நிமல் சிறி வித்தியாலயம் பல குறைபாடுகள் நிறைந்த பாடசாலையாக காணப்பட்டது. பிரதானமாக 4,5 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கென ஓர் வகுப்பறை கட்டிடமில்லாமல் தென்னை ஓலையினால் அமைக்கப்பட்ட ஓர் குடில் போன்ற அமைப்பிலிருந்தே தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்களது பாடசாலைக்கான வகுப்பறை…

Read More

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணம்

சரத் பொன்சேகாவை கைது செய்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமடைந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 04ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று (6) மரணமடைந்துள்ளார். கட்டட நிர்மாணப் பணியின் போது மரங்கள் சரிந்தது வீழுந்தமையால் தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார்.

Read More

சம்மாந்துறை விவசாயிகள் பாதிப்பு; சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முஷாரப் எம்.பி முஷ்தீபு!

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி, கரங்கா வட்டையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வேளாண்மை செய்து வருகின்றனர். உரிய சட்டப்பூர்வ ஆவணங்களும் அவர்களிடம் உள்ளன. இந்நிலையில், அவர்களது காணிகளுக்குள் அத்துமீறும் ஒரு சில பெரும்பான்மையினர், அவ்விவசாயிகளை அச்சுறுத்தி வருவதுடன், செய்கை பண்ணவிடாது பல இடைஞ்சல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிப்படையும் விவசாயிகள், தமது பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர். குறித்த வயல் காணிகளில் முஸ்லிம் விவசாயிகள் மகாபோக வேளாண்மை செய்கை செய்துள்ளனர். கடந்த 07 ஆம் திகதி அக்காணிகளுக்குள் அத்துமீறிய பெரும்பான்மை…

Read More

இவரை கண்டுபிடிக்க உதவுங்கள்

அபூ பயாஸ் மட்டக்களப்பு மாவட்ட,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆஸ்பத்திரி வீதி,ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற திங்கள் கிழமையிலிருந்து (09-03-2015) காணாமல் போயுள்ளார். ஏறாவுரிலிருந்து கொழும்புக்கு அரிசி ஏற்றிச் செல்லும் லொறியில் நடத்துனராக (கோளயா”) சென்ற இவர் கொழும்பிலுள்ள கடையில் திங்களன்று காலை அரிசி இறக்கிவிட்டு அருகிலுள்ள ஹோட்டலில் தேநீர் குடிக்க சென்ற இவர் திரும்பி வரவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு நாட்களாக தேடியும் இவரை…

Read More

பிரதமர் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமானார். இன்று (5) காலை 7.25 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 302 என்ற விமானத்தில் சிங்கப்பூர் பயணமானதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Read More

ஐ.நாவில் ஒபாமாவின் இறுதித் தருணம்!

அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குப்பற்றிய தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தின் போதே இவர்கள் சந்தித்துக்கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் தற்போது இடம் பெற்றுவரும் மாற்றங்கள் குறித்தும் ஒபாமா தனது வாழ்த்துக்களை நேற்றை தினம் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருந்தார். ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத் தொடரில் அமெரிக்காவின்…

Read More

பறக்கும் தட்டு குறித்து, உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் – ஹிலாரி

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் குறித்த பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் இவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதில் ஒரு வாக்குறுதியாக, நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால், பறக்கும் தட்டும் குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் 77 சதவீதம் மக்கள், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு…

Read More

எபோலா வைரஸ் இலங்கைக்கும் பரவும் அச்சுறுத்தல்!

கிழக்கு நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் இந்த எபோலா வைரஸ், இலங்கைக்குள் வரும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாகவும் அதனை தடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விசேட மருத்துவர் திபால் பெரேரா தெரிவித்துள்ளார். கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினர், அங்கு சுற்றுலா சென்ற இலங்கையர்கள், அங்கு தொழில் புரிந்து வருபவர்கள் நாட்டுக்கு திரும்பி வரும் போது, அந்த வைரஸ் இலங்கைக்குள் பரவக் கூடும். இந்த வைரஸ்…

Read More

“ஐஸ் வாளி சவால்” ஜனாதிபதி, மேர்வின், ஹிருணிக்காவுக்கு அழைப்பு!

மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் ‘ஐஸ் வாளி சவாலுக்கு’ அழைத்துள்ளார். மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஐஸ் வாளி குளியல் காட்சியை தன்னுடைய பேஸ் புக் (முகப்புத்தகம்) பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளார். இந்த ‘ஐஸ் வாளி சவால்’ உலகளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டுவந்துள்ளது. மூன்று…

Read More

தொடரும் டின்மீன் இறக்குமதி சர்ச்சை, முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் ரிஷாட் பகீரத முயற்சி

டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சீனாவில் இறுதி மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்; நேற்று (10.07.2018) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதேஅமைச்சர் இதனை தெரிவித்தார். கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரான ரன்சியோங் மற்றும் சீன…

Read More

இலங்கை ஆசிரியர் சங்கம் : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார். இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களை உள்வாங்குதல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதி யாகும் என தெரிவித்த அவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  இன்று (13) பிற்பகல் கொழும்பு, புதுகடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக,…

Read More

த.தே.கூட்டமைப்புடன் பேசுவதற்கு எந்நேரமும் தயாராக உள்ளோம்: றிசாத் பதியுதீன்

தமிழ்- முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண…

Read More