அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் பாடசாலைகள், மத வழி பாட்டுத்தலங்கள் பின் தங்கிய தோற்றத்தில் காணப்பட்டிருக்காது
அதி திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கும்புக்வெவ நிமல் சிறி வித்தியாலயம் பல குறைபாடுகள் நிறைந்த பாடசாலையாக காணப்பட்டது. பிரதானமாக 4,5 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கென ஓர் வகுப்பறை கட்டிடமில்லாமல் தென்னை ஓலையினால் அமைக்கப்பட்ட ஓர் குடில் போன்ற அமைப்பிலிருந்தே தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்களது பாடசாலைக்கான வகுப்பறை…
