Headlines

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பாறூக் வபாத்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60வயது வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாறூக் எனும் 60 வயதுடைய நபரே குறித்த விபத்தில் மரணித்துள்ளார். இவ் விபத்து நேற்று புதன் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையிலேயே…

Read More

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 18 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நீதிமன்றை உத்தரவினை மீறிய 18 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழப்பெரும காமினி லொக்குகே விமல் வீரவன்ச பந்துல குணவர்தன மற்றும் முரத்தட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 18 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை மீறிச் செயற்பட்டதாக குறித்த 18 பேர் மீதும் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.

Read More

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏற்படும் விபத்துகளை ஆராய விசேட குழு

லக்ஷ்மி பரசுராமன் விளையாட்டில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் விபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் வாரம் நியமிக்கப்படவுள்ள இந்த குழுவில் விளையாட்டுப் பணிப்பாளர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளடங்குவரெனவும் அவர் கூறினார். அம்பலந்தோட்டை போலான மஹா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் கடந்த 06ம் திகதி இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஈடுபட்டிருந்த வேளை, திடீரென மயங்கி மரணமுற்ற சம்பவம் தொடர்பில்…

Read More

புதியசாளம்பைக்ககுளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் வக்பு செய்யும் நிகழ்வு!

வவுனியா புதியசாளம்பைக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, அல் அக்‌ஷா ஜும்ஆ பள்ளிவாசலை வக்பு செய்யும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இன்று (21) நண்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் மஸ்தான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். (ன)  

Read More

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

புது வருடத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை வர்ததக, கைத்தொழில் அமைச்சர்  றிஷாத் பதியுதீன் குறைத்துள்ளார். . இதன்படி. மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனி ஒரு கிலோ 95 ரூபாகவும், கோதுமை மாவு ஒரு கிலோ 87 ரூபாகவும்,  டின் மீன் 140 ரூபாகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோல் அகற்றப்பட்ட கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபாவாகவும்,  பொதி…

Read More

20 பேருக்கு போட்டியிட தடை: ஜனாதிபதி தீர்மானம்

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் 20 பேரின் வெட்புரிமையை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய் இரவு நடைபெற்ற விஷேட சந்திப்பில் இந்த முடிவுகள் எடுக்கபட்டதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக இவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா,…

Read More

ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இலங்கை வருகை

–எம்.ஐ.அப்துல் நஸார்– ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று  (03) இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை புதிய அரசாங்கத்தின் கீழும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அரசாங்கத்தின் உயர்…

Read More

போஸ்டர்கள், கட்அவுட், பெனர்கள் அகற்றும் பணிகளை கண்காணிக்க விசேட பொலிஸ் குழு

தேர்தல் பிரசாரங் களுக்காக முன்வை க்கப்படும் கட் அவுட்கள் மற்றும் பெனர்கள் சரிவர அகற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க பொலிஸ் திணைக் களம், பொலிஸ் கண்காணிப்பு குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் ஆங்காங்கே போஸ்டர், கட்அவுட் அகற்றும் பணிகள் முறையாக இடம் பெறுகின்றனவா என்பதனை கண் காணிப்பரெனவும் பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார். நாடு முழுவதும் போஸ்டர், கட்அவுட் அகற்றும் பணிக்காக 12 ஆயிரம் பொலி ஸாரும் அதற்கு மேலதி கமாக…

Read More

இந்திய மீனவர்கள் 54 பேர் நாடு திரும்பினர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 54 இந்திய மீனுவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீனவர்கள் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொழும்பில் தொடரும் போராட்டம்: மக்கள் பெரும் அவதி!

தொட்டலங்க பகுதியில் நேற்று (16) மாலை மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொட்டலங்க ஜப்பான் நட்புறவு பாலத்தை மறித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். தொட்டலங்க பிரதேசத்தில் அனுமதியற்று கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பிரதேச மக்கள் நேற்று முதல் இவ்வாறு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று…

Read More

பெரியவெங்காயத்துக்கான தீர்வை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான, கிலோகிராம் ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை, 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இதுவரையில் 25 ரூபாயாகவிருந்த கிலோகிராம் ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை 40 ரூபாய் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More