உரிய ஆவணங்கள் இருப்பின் ஒருவாரத்தில் ஊழியர் சேமலாப நிதி
உரிய ஆவணங்களைச் சமர்பிக்கும் பட்சத்தில் ஒரு வார காலத்தினுள் ஊழியர்கள் தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலமைச்சர் காமினி லொக்குகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஒத்துவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அவர், ஊழியர் சேமலாப நிதியில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது உண்மையால் எதிர்க்கட்சி அது பற்றி “கோப்” குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார். மேற்படி நிதி தொடர்பான நிர்வகிப்புகளை மத்திய வங்கியே மேற்கொள்கின்றதெனக் குறிப்பிட்ட அமைச்சர் பொய்க் குற்றச்சாட்டுக்களை…
