Headlines

யெமன் முஸ்லிம்களுக்கு உதவிகளை வாரி வழங்கும் கட்டார்

யெமனில் அமைதி திரும்பி கொண்டிருக்கும் நிலையில் போரால் பாதிக்க பட்ட யெமன் முஸ்லிம்களுக்கு மனித நேய உதவிகளை சவுதி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் செய்து வருகின்றன சவுதியின் இராணுவ விமானங்கள் உணவு பொருட்களையும் மருந்து பொருட்களையும் யெமனின் அதுன் நகரில் குவித்து வருகிறது அது போல் தற்போது கட்டார்  நாடும், யெமன் முஸ்லிம்களின் துயர் துடைக்க ஏரளமான மனிதாபிமான உதவிகளை வாரி வளங்கி வருகிறது மனித நேய உதவிகளுடன் கத்தர் நாட்டின் விமானம் யெமன் நாட்டின் அதுன்…

Read More

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டி பயிற்சிக்கருத்தரங்கு ; பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்

திவிநெகும திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மவாட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுக அபிவிருத்தி குழு தலைவர்கள் ஆககேயார்களுக்கான வழிகாட்டி பயிற்சிக்கருத்தரங்கு இன்று மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்  உரையாற்றுவதை படத்தில் காணலாம்.  இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் , வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்து…

Read More

தம்புள்ள பள்ளிக்கு காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபை தயக்கம்

தம்­புள்ள ஜும்மா பள்ளியை நிர்­மா­ணிக்கும் காணியை விடு­விப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தயக்கம் காட்டிவருவதாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஏ.எச்.எம்.இப்­றாஹிம் சுட்டிக்காட்டியுள்ளார். தம்­புள்ள பிர­தேச அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம், தம்­புள்ள தொகுதி அமைப்­பா­ளரும் பிர­தேச அபி­வி­ருத்திக் குழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான ப்ரியான் விஜே­ரத்ன தலை­மையில் நடை­பெற்ற போது தம்­புள்ள நகரில் முஸ்லிம் ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­மா­ணிப்­ப­தற்­கென இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணியை விடு­விப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் தொடர்ந்தும் கால­தா­மதம் செய்து வரு­வது தொடர்பில் மத்­திய…

Read More

பிரசன்னவுக்கு எதிராக முறைப்பாடு

காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்ற மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவையைச்சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தேக ஆரோக்கியத்திற்காக சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஷபா பள்ளியில் பிராத்தனை இடம்பெற்றபோது.

முஸ்லிம் சமூகத்திற்காக அயராது குரல் கொடுத்து வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நீண்ட ஆயுளுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் சாய்ந்தமருது மஸ்ஜிதுஷ் ஷபா (சின்னப் பள்ளி)வில் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்ற போது…  

Read More

உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை நிராகரிப்பு!

ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் இரகசிய பொலிஸார் முன்வைத்த கோரிக்கையானதுநீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு 14 மில்லியன் அமெரிக்க டொலரகளுக்கு மிக் விமானக் கொள்வனவு கொடுக்கல்வாங்கல் தொடர்பாக உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு இரகசியப் பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கைவிடுத்தனர். எனினும் நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று இரண்டாவது தடவையாகவும் குறித்தகோரிக்கையினை நிராகரித்துள்ளார். இதேவேளை முன்னாள் ரஸ்யாவிற்கான தூதுவர் குறித்த வழக்கின் குற்றவாளியாக…

Read More

பதவி விலகப் போவதில்லை – சரத் ஏக்கநாயக்க

சத்தியக் கடதாசிகள் கையளிக்கப்பட்டதால் மாத்திரம் தாம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பல்லேகல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனக் கூறியுள்ளார்.எவ்வாறாயினும், மத்திய மாகாண சபையில் உள்ள 58 உறுப்பினர்களுள் 34 உறுப்பினர்கள் இணைந்து, மத்திய மாகாண புதிய முதலமைச்சராக திலினபண்டார தென்னகோனை நியமிக்குமாறு கோரி சத்தியகடதாசியை கையளித்திருந்தனர். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் செயற்படவிருப்பதாக, மத்திய மாகாண ஆளுனர்…

Read More

நாடு கடத்தப்பட்டவர்கள் புலானாய்வு துறையினரிடம் ஒப்படைப்பு

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டதாக தெரிவித்து மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டவர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை கைது செய்த கட்டுநாயக்க பொலிசார் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான சேகர் குசைன் வழங்கிய தகவலுக்கு அமைய, மொஹமட் குசையின், மொஹமட் சுலைமான்…

Read More

நல்லாட்சிக்கெதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள குழுக்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. இலங்கையில் அரசு மாற்றம் ஏற்பட்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைய உள்ளது. அன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 3…

Read More

திருகோணமலை துறைமுகத்தில் சர்வதேச கப்பல்கள்

அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் நியூ ஒர்லியன்ஸ் கடற்படை கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையில் வந்து சென்றது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக திருகோணமலை துறைமுகத்தை வந்துடைந்துள்ளது. கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளையிடும் அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை திருகோணமலை துரைமுகத்தில் பிரான்ஸ் கப்பல்…

Read More

“15 வருட கால அரசியலில் செய்யமுடியாத அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் ரிஷாட் அவர்களோடு கைகோர்த்த 07 மாதங்களுக்குள் செய்ய முடிந்துள்ளது”- தவிசாளர் தாஹிர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் நாம் கைகோர்த்து 07 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நமது ஊர்மக்களுக்காக கோடி ரூபாய் மதிப்புள்ள வாழ்வாதார உதவிகளை செய்தது மட்டுமல்லாமல், பலகோடி பெறுமதியான அபிவிருத்தித் திடங்களுக்கான முன்மொழிவுகளை எம்மிடமிருந்து கேட்டுப்பெற்று அதற்கான நிதிஒதுக்கீடுகளையும் செய்து தந்திருக்கின்றார் எனவும்  அத்துடன் 02வது கட்டமாக சுமார் 1000 க்கும் அதிகமான தேவையுடைய மக்களுக்காக, வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

“ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்” கொள்கைப் பிரகடனம்!!!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தருமான ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, உருவாக்கியுள்ள “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்” கொள்கைப் பிரகடனம் நேற்று (10/ 12/ 2017) கொழும்பு ரேணுகா ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரஜைகளான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நலனுக்காகவும் ஐக்கியத்திற்காகவும் நாட்டில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தவும் உறுதிபூண்டு செயற்படுகின்ற றிசாட் பதியுதீன்…

Read More