முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!
புத்தளம், முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா சிறப்பாக இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (23) 90 ஏக்கர், அல் ஹஸ்பான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், முன்பள்ளி வலய இணைப்பாளர் ஜௌசிரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் கட்சியின் முதளைப்பாளி அமைப்பாளர் தௌபீக்,…
மஹிந்த குடும்பத்தின் காலை உணவுச் செலவு 94 இலட்சம்
மஹிந்த ராஜபக்ச குடும்பமும் சுற்றமும் ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாட்டு தலைவர்கள் மாநாடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ச குடும்பமும் நண்பர்களும் ஒருவேளை காலை உணவிற்காக மட்டும் 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளனர். அலரி மாளிகைக்கு உணவு வழங்கிய ஹில்டன் ஹோட்டல் 94 இலட்ச ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது. 2013ம் ஆண்டு…
தண்டனை அனுபவிக்கத்தயார் ;மஹிந்த
தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கத் தயார் என்றும் மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பை தமது குடும்பத்தார் மீது காண்பிக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் நேற்று காலை கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் சில நாட்களில் என்னையும் அழைப்பர். நாமலையும் அழைப்பர். பஸில், மற்றும் கோத்தபாய ஆகியோரையும் அழைப்பர். நல்லாட்சியை…
செல்போனில் பேச ஒபாமாவுக்கு தடை
உலகம் பயணிக்கும் வேகத்துக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுடன் தற்போது பலவிதமான செல்போன்கள் உலா வருகின்றன. ஆனால் 2010 ம் ஆண்டிற்கு முன்பு ‘பிளாக்பெர்ரி’ செல் போன்கள் ஆதிக்கம் செலுத்தின. அவை முக்கிய பிரமுகர்கள், வசதிபடைத்த செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தன. ஏனெனில் அக்காலத்தில் தொழில் நுட்பத்துடன் அதிக விலைக்கு இவை விற்கப்பட்டன. இந்த ‘பிளாக் பெர்ரி’ செல்போனை தான் 2008–ம் ஆண்டில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தி வருகிறார். இவர் அதிபர் பதவி ஏற்பதற்கு…
தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்
அட்டன் – எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 2 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 2 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி
நேற்று (2016.12.14) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கால் நடைகளுக்கு ஏற்படும் குரைநோய் மற்றும் வாய் நோய் சம்பந்தமாக சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற 03வது வருடாந்த தொடக்க நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்; ஆயிரம் ரூபா கட்டணம்
– வி.தபேந்திரன் – அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டிய நடைமுறை தற்போது 750 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, திருமணப் பதிவு…
“அடுத்த சில வாரங்களில், ஆச்சரியப்படும் தீர்மானங்கள்” – முக்கியஸ்தர்கள் கைதாகும் வாய்ப்பு
புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மக்கள் ஆச்சரியப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படலாம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஊழல், மோசடிகள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. புதிய சட்டமா…
ஆராயும் விஷேட அபிவிருத்தி குழு கூட்டம்
கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலாளா் பிரிவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் விஷேட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (30) பிரதேச செயலகங்களின் கேட்போர் கூடத்தில் பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ்.அமீா் அலி தலைமையில் நடைபெற்றது. இதன் போது கோறளைப்பற்று பிரதேச செயலாளா் எம்.எம்.நௌபா், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளா் திருமதி நிஹாரா மௌஜூத்,பிரதேச சபை தவிசாளா் கே.பீ.எஸ்.ஹமீட்,பிரதி தவிசாளா் ஏ.எம்.நௌபா், செயலகத்தின் உதவித்திட்டமிடல் அதிகாரிகளான எஸ்.ஏ.றியாஸ், எச்.எம்.எம்.றுவைத்…
ததேகூ குழுவினர்- சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு
இலங்கையில் தமிழர்களின் நலனை பேணிக்காப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வலியுறுத்தியதாக இரா.சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் வெள்ளிக்கிழமை (22) புதுடில்லியில் தெரிவித்துள்ளனர். புதுடில்லி வந்துள்ள கூட்டமைப்பின் குழுவினர் (22) காலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பின் போது, தமிழர்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றதாகவும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை முறையாக பெற்றுத் தருவதற்கு உதவிபுரிய…
தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் – றிஷாத் பதியுதீன்
ஊடகப் பிரிவு எமது மக்கள் அதிகமான தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.இவ்வாறானதொரு நிலையிலும் தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள பொற்கேணியில் தெரிவித்தார். முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 31 வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். முஸ்லிம் நிறுவனத்தின் பணிப்பாளர் பைஸர்கான் தொழிலதிபர் அல்-ஹாஜ் நவாஸ்,முசலி பிரதேச…
