Headlines

முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ள இலங்கை : மங்கள சமரவீர

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் சொர்க்கபுரியாக இருந்து வந்த இலங்கை தற்போது முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜீ.7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர அங்கு இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

சுன்னாகம் நிலத்தடிநீர் வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளது என தொடுக்கப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையினை மன்றில்   சமர்ப்பிக்க வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வடமாகாண விவசாய நீர் வழங்கல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை  எனவும் நீதவான்  தெரிவித்துள்ளார். கழிவு ஒயில் கலப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம்…

Read More

அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்

கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் மைத்திரிபாலவோ,  ரணில் விக்ரமசிங்கவோ, சம்பிக்க ரணவக்கவோ வெற்றியீட்டப் போவதில்லை. உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும். ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியினால் மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். மைத்திரிபால வெற்றியீட்டியதன் பின்னர் பெப்ரவரி மாதமளவில் அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும். சம்பள உயர்விற்கான பொறிமுறைமை உருவாக்கப்படும் வரையில்…

Read More

இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து – மன்னார், காக்கையன்குளத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், காக்கையன்குளத்தில் இன்று (08) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், இலக்கம் 1 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன்…

Read More

அமீர் அலி தலைமையில் களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (22.07.2017) இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி…

Read More

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் சிவில் அணு உடன்படிக்கை உள்ளிட்ட நான்கு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சிவில் அணு தொடர்பான முதலாவது உடன்படிக்கை இன்று மதியம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு 04 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் நரேந்திர…

Read More

டிஜிட்டல் என்றால் என்னவென்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை! அமைச்சர் ஹரின்

டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவி கிடைக்கும் வரை டிஜிட்டல் என்றால் என்னவென்றே தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நமது பிரதேசத்தில் எப்போது மழை பெய்யும், காலநிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை நம் கைகளில் வைத்திருக்கும் மொபைல் போன்கள் ஊடாக…

Read More

பலாங்கொட நகர சபைக்கு சர்வதேச விருது

ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தில் ஆசிய பசுபிக் நகர நிர்மாண திட்டம் 2015 போட்டியில் ஜூரியின் விஷேட விருது பலாங்கொட நகர சபைக்கு கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் குடியிருப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பல நாடுகளில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஜூரிஸ் விஷேட விருதுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது. குறித்த விருது யூ.என். ஹெபிடாட் அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் உலக குடியிருப்பு சங்க நன்கொடை நிதியினைப் பயன்படுத்தி பலாங்கொட நகரத்தின்…

Read More

இப்றாஹீம் அன்சாரின் தொலைபேசியை திருடிச்சென்ற கொள்ளையர் கூட்டம்

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாஹீம் அன்சாரைத் தாக்கிய கொள்ளையர் கூட்டம் அவரது கையடக்கத் தெலைபேசியையும் திருடிச் சென்றுள்ளது. என்பதை நவமணி பத்திரிகையின் ஆசிரியர் என்.எம்.அமீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

அவநம்பிக்கையினூடாக வெளிப்பட்ட கோபமாகவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய உரையைப் புரிந்துகொள்ள முடிகிறது. # வெறுப்பு !!!

நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும், மேற்படி ஆட்சித் தலைவர்கள் இருவரிடத்திலும், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை விடுத்திருக்கின்றார். வரக்காபொல பிரதேசத்தில், சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சர்…

Read More

VIDEO-“அஸ்வெசும திட்டத்தில் அதிகமானவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுங்கள்”

தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை! ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே…

Read More

புத்தளத்தில் மியன்மார் முஸ்லிம்களுக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களுடன் பிக்குகளும் களத்தில் குதிப்பு

முஹ்ஷி மியன்மார் முஸ்லிம்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலைகளை வன்மையாக கண்டித்தும், இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமும் உடனடியாக இதில் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியும் புத்தளம் நகரில் இன்று (29.05.2015) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதில் சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Read More