Headlines

மன்னார், வேப்பங்குளம், அல்- அறபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

மன்னார், வேப்பங்குளம் – அளக்கட்டு, அல்- அறபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், முசலி பிரதேச பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன் நிஸா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

மன்னார், பிச்சவாணிப நெடுங்குளம், அல் / ஹைரத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

மன்னார், பிச்சவாணிப நெடுங்குளம் – அளைக்கட்டு, அல் / ஹைரத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, மன்னார் வலய பாலர் பாடசாலைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் அஸ்லம், முசலி கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர் உவைஸ், முசலி பிரதேச பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன்…

Read More

மன்னார், விளாங்குளியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு! 

ஸகாதுல் பவுண்டேஷனினால் மன்னார், விளாங்குளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (19) ஜும்ஆத் தொழுகையுடன் இடம்பெற்றது. ஸகாதுல் பவுண்டேஷனின் பணிப்பாளர் இஷாக் ஹஸன் அப்பாஸி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.

Read More

மன்னார், மாந்தை கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு!

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார், மாந்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19), மாந்தை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், 08 சமூக சேவைகள் அமைப்புக்களுக்கான உபகரணங்களையும் கையளித்தார். இந்நிகழ்வில், மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர், உதவிச் செயலாளர், மன்னார்…

Read More

“மறிச்சுக்கட்டி ஹமீது மரைக்காரின் (கலீபா மாமா) மறைவு மண்ணுக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ஹமீது மரைக்கார் (கலீபா மாமா) அவர்களின் மறைவு மிகவும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் தனது அனுதாபச் செய்தியில், “மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீது மரைக்கார், 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம், இஸ்மாயில்புரம், நியூ சிட்னி முகாமில் தங்கியிருந்த போது, அந்த முகாமுக்குத் தலைமைதாங்கி, அங்கிருந்த மக்களை சிறந்த முறையில் வழிநடாத்தினார். அதன் பின்னர் நியூ சிட்னி மக்களுக்கென தனியான மீள்குடியேற்ற…

Read More

‘பிற நாடுகளின் கொந்தராத்துக்களுக்காக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம்”

– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,…

Read More

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட செயற்குழுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவருமான எம்.என்.நஸீர் தலைமையில், இன்று (07) வயம்ப கூட்டுறவு கிராமிய வங்கிக் கட்டடத்தில் உள்ள ரோமன் பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமிய, வட்டார அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Read More

“கல்வியில் கைதேர்ந்து பொறுப்புள்ள பிரஜைகளாக பிரார்த்திக்கின்றேன்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

உயர்தரப் பரீட்சை எழுதும் சகல மாணவர்களதும் அபிலாஷைகள் வெற்றிபெற வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாளைய தினம் (04) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மாணவர்களின் அடைவுமட்டம், பெற்றோர்களின் இலட்சியங்களை ஈடேற்ற உதவட்டும். கல்வியில் கைதேர்ந்து, பொறுப்புள்ள பிரஜைகளாக மாணவர்கள் வளர எனது பிரார்த்தனைகள். தொழில்நுட்ப உலகில் அதிகரிக்கும் சந்தைப்போட்டிகள் மற்றும் தொழில் சந்தைகளுக்குள் நுழைவதற்கான சவால்களை வெல்வதற்கு…

Read More

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம்!

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம் தெரிவித்துள்ளார். அவரது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “கௌரவ முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான எனது உறவினரும் நெருங்கிய நண்பருமான நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் இன்று இறையழைப்பை ஏற்றுக் கொண்ட செய்தி என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியது. திருமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது தந்தை வழியில் அரசியல் பயணத்தை மேற்கொண்ட நண்பர்…

Read More

“நஜீப் ஏ.மஜீதின் முன்மாதிரிகள் நாகரீக அரசியலுக்கே அடித்தளம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

நாடறிந்த அரசியல்வாதியும் முதலாவது முஸ்லிம் முதலமைச்சருமான நஜீப் ஏ.மஜீத் அவர்களின் மறைவு நாகரீக அரசியலில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாகரீக அரசியலின் நாயகன் மர்ஹும் நஜீப் ஏ.மஜீத். சிறந்த அரசியல் புலத்தில் புடம்போடப்பட்ட அவரிடம் ஆழ்ந்த அனுபவங்கள் இருந்தன. தந்தை அப்துல் மஜீதின் பாசறையே அவரது ஆளுமைகளை முழுமைப்படுத்தியது. அவரது தந்தையார் மூதூர் தொகுதியின்…

Read More

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!

பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனஞ்செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை நேற்று (05) ஐ.நா தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பலஸ்தீனின்…

Read More