Headlines

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், காணாமல் போனவர்கள் பற்றி கண்டறியும் அலுவலகம் மட்டும் போதுமானதல்ல.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றும் அவசியமாகின்றது. ராஜபக்ச கோட்பாடு போர் செய்வதாக கூறி திறைசேரியை காலியாக்கியதேயாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதனைப் போன்றே திருடர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமென நாம் அந்தக் காலத்தில் கூறியிருந்தோம். போர் இடம்பெற்ற காலத்தில்…

Read More

இறந்த பிறகும் பேஸ்புக்!

இறந்த பின்பு தன்னுடைய பேஸ்புக் கணக்கை யார் கையாள்வது என்பதை முடிவு செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. மரபு தொடர்பு ‘என்ற இந்த வசதியின் மூலம் நாம் இறந்த பிறகு நமது பேஸ்புக் கணக்கை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நாமினியாக நியமித்துக் கொள்ளலாம். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் நமது தகவல்களுக்கு யை மாற்ற முடியும், போருக்கு களை சேமித்து வைக்கலாம் விவரம். ஆனால் தனியார் Messages- யை பார்க்க முடியாது, இந்த வசதி…

Read More

உயர் கல்வி- ஆராய்ச்சி அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தார் அமைச்சர் அமுனுகம

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று (25) அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது ஆராய்ச்சி அமைச்சின் கீழியங்கும் நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் ஆராய்ச்சி மற்று அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பீ. ரணேபுர- மேலதிக செயலாளர் எஸ்.எச். ஹரிஸ்சந்திர- அமைச்சின் ஆலோசகர் தாரா விஜயதிலக்க- இலங்கை நெனோ…

Read More

ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு

உலகின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனர் டிம் குக் தனது அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு செய்துள்ளார். தகவல் தொழில்நுட்ப துறையில் இருக்கும் முக்கிய ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே தங்களிடம் இருக்கும் அபரிமிதமான சொத்துகளை பொது சேவைக்கு கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க், ஆரக்கிள் கார் நிறுவனத்தின் லாரி எல்லிசன், பங்கு சந்தை கில்லாடி வாரன் பப்பட் போன்றவர்கள் ஏற்கனவே மருத்துவம், சுற்றுசூழல்…

Read More

‘நல்லெழில்’ நூல் வெளியீட்டு வைபவம்!

புத்தளம்/நல்லாந்தலுவை ஆரம்பப் பாடசாலையில் நேற்று முன்தினம் (14) “நல்லெழிழ்” நூல் வெளியீட்டு வைபவம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டிப் பிரதேச அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அவர் உறையாற்றுகையில், “இப்பாடசாலையின் இன்றைய கல்வி எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதோடு, இன்றைய நாளில் இப்பாடசாலையின் வரலாற்றை உள்ளடக்கிய இந்நூல் வைபவத்திலே, இந்தப் பாடசாலையின்…

Read More

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் அமர்வு, முதல் தடவையாக தென்னாசியாவில் இடம்பெற வேண்டும் என யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) ஆகிய அமைப்புகளின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவையடுத்து, மைல்கல் நிகழ்வாக இந்த அமர்வு இலங்கையில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வு இலங்கையின் மிக உயர்ந்த சிறிய நடுத்தர தொழில்முனைவோரான வணிக அபிவிருத்தி முகவராக இயங்கும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினரை (NEDA) இலக்கு வைத்திருப்பது வரப்பிரசாதம் என கைத்தொழில் மற்றும்…

Read More

அதிகாரப் பகிர்வும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் (கட்டுரை)

– எம்.ஐ.முபாறக் – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர்.அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத் தொடங்கிவிட்டனர். புதிய அரசமைப்பில் இருக்க வேண்டிய ஏனைய விடயங்களை விடவும் அதில் உள்ளடங்கப்போகும் அரசியல் தீர்வின் மீதுதான் சிறுபான்மை இன மக்களின் முழுக் கவனமும் உள்ளது.எப்படியாவது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்காக இருக்கின்றது. இந்த நாட்டின் மூவின…

Read More

கிருலப்பனை மேதின பேரணியில் மயங்கி விழுந்த எம்.பி

நேற்று, (01) கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மேதின பேரணியில் செல்கையில் திடீரென மயங்கிவிழுந்தார். அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருலப்பனையில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின பேரணியில் பங்கேற்றிருந்தபோதே அவர், மயங்கிவிழுந்துவிட்டார்.

Read More

அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கு அபுதாபி கொடைவள்ளல் மனிதாபிமான உதவி ஆரம்ப கட்டமாக 120 வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் வடமாகாண அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கென ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நாட்டைச் சேர்ந்த தனவந்தரும் கொடைவள்ளலுமான மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் அல்ஹாஜ் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அயராத முயற்சியினாலும் வேண்டுகோளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த அந்த கொடைவள்ளல் முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களுக்குச் சென்று அங்கு மீளக்குடியேறியுள்ள அகதிகளின் துன்பங்களை நேரில் கண்டறிந்தார். “ஆரம்பக் கட்டமாக இந்த…

Read More

“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் ஊடகவியலாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று (27) இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளும் மதவாதிகளும், சஹ்ரானின் தாக்குதலுடன்  என்னை தொடர்புபடுத்தி, எப்படியாவது…

Read More

அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை: ஜனாதிபதி அதிரடி

ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு ஜனாதிபதியால் இன்று (8) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வட் வரி அதிகரிப்பு மற்றும் பல விடயங்களுக்காக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அமைச்சர் உள்ளிட்டவர்கள் தயாராக இருக்க…

Read More

முஸ்லிம் பிரதேசங்களில் CCTV கமரா பொருத்துவதில் ஆர்வம்

ஏறாவூரில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சம்பவத்தின் பின்னர் சிசிரீவி கண்காணிப்புக் கேமராக்களை வீடுகளிலும் கடைகளிலும் பொருத்தும் ஆர்வம் அதிரித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மிக நுட்பமாக நடக்கும் திருட்டு மற்றும் கொலை நிகழ்வுகளை கண்காணிப்புக் கேமராக்கள் பதிந்து வைத்துக் கொள்ளும் என்பதால் பொதுமக்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூர் கொலைச் சம்பவத்தில் இரு வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் நடமாடித் திரிவது அவதானிக்கப்பட்டு அதுவே சந்தேக…

Read More