Headlines

ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அறிவிப்பு

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS இயக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் இணைந்து மரணித்த செய்தி வெளியாகியுள்ள இச்சந்தர்பத்தில், இலங்கை முஸ்லிம்களும், இஸ்லாமிய மார்க்கமும் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன என்ற தோரனையில் இனவாதிகள் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன்…

Read More

புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தினால் குற்றம்

மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் அலைபேசிகளை பயன்படுத்தி கொண்டு வாகனம் செலுத்துவது குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தண்டம் பத்திரிகையை வழங்கமுடியாது என்றும் அதனால் அவ்வாறான சாரதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாதுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார். சீருடையில் கடமையில்…

Read More

கண்டி மகிந்த ஆதரவு கூட்டம்..

-Dehianga Azeem M Uzman – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் இணைந்து இன்று மாலை 3 மணி முதல் கண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டத்திற்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் இருக்கும் நிலையில், இப்போதே மக்கள் வந்த வண்ணம் உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

திவிநெகும பரீட்சை நடத்துவதில் சிக்கல்

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்றாம் தர உத்தியோகஸ்தர்களுக்கான  பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. குறித்த பரீட்சைக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சைக்கு தோற்ற வாயப்பு வழங்கப்படாதவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று திவிநெகும திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் மற்றும் பரீட்சையை நடத்தும்…

Read More

ஜெரூசலத்தை இஸ்ரேலாக ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இஸ்ரேலால் அக்கிமிக்கப் பட்ட, பலஸ்தீன பூமியான  ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்க பிரஜைகளின் பிறந்த இடமாக இஸ்ரேலை ஏற்கும் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டு சட்டம் ஒன்றை அமெரிக்க உச்ச நீதி மன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் அவையால் இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டபோதும் அது சர்வதேச கொள்கை தொடர்பில் தீர்மானிக்கும் ஜனாதிபதியின் உரிமையை மீறுவதாக நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலஸ்தீன பூமியான ஜெருசலத்தை, இஸ்ரேலாக அங்கீகரிக்கும் இந்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – வெருகல் பிரதேசத்தில் ஆரம்பம்!

43 வது, 44 வது, 45 வது, 46 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்தின் வேண்டுகோளுக்கிணங்க, வெருகல் பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 43 வது வேலைத்திட்டம் – இலங்கை…

Read More

‘மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை’ சட்டத்தரணி அன்சில்!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் பாலமுனை வட்டாரத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அன்சில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே…

Read More

எமது பொறுமைக்கும் எல்லை உண்டு : அமைச்சர் கபிர் ஹாஷிம்

தேசிய அர­சாங்­கத்தின் கீழ் பல்­வேறு அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்கும் தரு­ணத்தில் அதனை சீர்­கு­லைத்து எமது கட்­சி­யின்­பெ­ய­ருக்கு பங்கம் விளை­விக்கும் வகை­யில் செயற்­படும் பிரி­வினர் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பொறு­மை­யாக இருக்க முடி­யாது. எமது பொறு­மைக்கும் ஒரு எல்லை உள்­ளது என்று அமைச்சர் கபிர்­ஹாஷிம் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது தேசிய அர­சாங்­கத்தின் ஒரு­மித்த செயற்­பா­டுகள் மூல­மாக மக்­க­ளுக்கு பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைச்­சர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­கள் ­தொ­டர்­பில்­ ஒரு…

Read More

நபி மருத்துவம் – ஜவ்வரிசி!

இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக “ஜவ்” என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள். பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி…

Read More

ஜனா­தி­ப­தியின் பதில் இன்று

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்றைய தினம் தனது பதிலை வழங்­க­வுள்ள நிலையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி கள் மற்றும் அவர்­களின் உற­வி­னர்கள் பலத்த எதிர்­பார்ப்­பு­டனும் நம்­பிக்­கை­யு­ட­னு­ம் இருக்கின்றனர். நீண்­ட­கா­ல­மாக நாடளா­விய ரீதியில் உள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் வலி­யு­றுத்தி வந்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர். ஐந்து தினங்­களின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக்…

Read More

றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு.

  மன்னார் நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட பூவரசங்குளம் கிராம விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு  உபகரணங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் பள்ளிநிர்வாகத்தினர் ஊர்மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

பயணிகள் விமாணத்தில் ஜனாதிபதி மைத்திரியின், முதலாவது வெளிநாட்டு பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர். ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி நாளை இந்திய ஜனாதிபதி மாளிகையில் வரவேற்கப்படவுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை சந்திக்கவுள்ளார்.

Read More