Headlines

4 மில்லியன் ரூபாய் நிதயொதுக்கீட்டில் பொல்கஹவெல தொகுதிக்கு சுயதொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்..

குருநாகல் பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் மடலகம தேர்தல் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வும் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துறையாடலும் நேற்று (08) முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளருமான அன்பாஸ் அமால்தீனின் ஏற்ப்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி . இர்பான் ,…

Read More

தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது!

“சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்துறை கழிவு அகற்றலுக்கும் அரசாங்கத்தின் இந்த முக்கிய செயற்பாடுகள் பாதுகாப்பாக அமையும்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையில் முதன் முறையாக சர்வதேச தொழில்துறைகளின் “அபாயகரமான பொருட்களின் பாதுகாப்பு மீதான முகாமைத்துவத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நேற்று (17) வியாழக்கிழமை ஹில்டன் ஹேர்ட்டலில் நடைபெற்ற…

Read More

அமைச்சுப்பதவி ஒரு பொருட்டள்ள. சாய்ந்தமருதுவில் அமைச்சர் றிஷாட்

-ஊடகப்பிரிவு. முஸ்லிம் சமூகத்திற்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின் ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை எனவும் வேண்டுமெனில் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் எந்த நேரமும் தயாராக இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக…

Read More

அமைச்சர் றிஷாத்தின் வேண்டுகோளின் பேரில் மன்னார் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

மன்னார் மற்றும் யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அடுத்தவாரம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம் பெறவுள்ளது. வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும்,கைதெ்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடற்றொழில்,நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர விடத்தில் விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று கடற்றொழில் அமைச்சில் மன்னார் தாழ்வுபாடு மற்றும் தலைமன்னார் பியர் மீனவ சங்கப் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் போது…

Read More

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து 5000த்திற்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள்

சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து இணையத்தளங்களும், சமூக வலைத்தள கணக்குளும் மூன்று வார காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட போலி இணையத்தளங்களைப் போன்றே, பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தள கணக்குகளும் ஆயிரக்கணக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செய்தி மூலங்களைக் குறிப்பிடாத செய்திகள், அவதூறு ஏற்படுத்தும் தகவல்கள் அடங்கிய செய்திகள் இந்த புதிய இணையத்தளங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன. இவ்வாறான…

Read More

முடியாது என்று எமக்கு எதுவுமில்லை – ஜனாதிபதி

“முடியாது என்று எமக்கு எதுவுமில்லை, மக்கள் எம் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஊவாவில் ஆட்சியமைக்கலாம் என்று ஐ.தே.க. கனவு காண்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது எனவும் தெரிவித்தார். பதுளை ஹாலிஎலயில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மகளிர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, “பெண்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் சக்தியாக உள்ளதாகவும், உலகிலேயே பெண்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கும் நாடு இலங்கை”…

Read More

சவூதியில் 13 உம்ரா யாத்திரியர்கள் பலி

சவூதி அரேபியாவில் தாயிப் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். பஸ்ஸின் டயர் வெடித்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணமடைந்தவர்களில் பெரும்பாலனவர்கள் எகிப்தியர்கள் எஎன தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணல்  ஏற்றிச் சென்ற லொறி சாரதி ஒருவரிடம் 1500 ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அஸ்ஸலாமு அலைக்கும். சென்ற மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடக்க வில்லை. இது சம்பந்தமாக உங்களிடம் கதைக்குமாறு இன்று தெரிவித்தார்

சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரமணிய சாமி தமது கருத்துக்களை அறிக்கையாக சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் தாமும் சில கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணிய சாமி, 18ம் திகதிக்குள் கருத்துக்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்….

Read More

நான்கு வகையான அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதி­ரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரி­சோ­தனை

கொட்­ட­தெ­னி­யாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறு­மியின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் துனேஷ் பிரி­ய­சாந்த எனப்­படும் கொண்­டயா பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில் நேற்று விசேட பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். நீர்­கொ­ழும்பு சிறைச் சாலையில் இருந்து சிறை அதி­கா­ரி­களால் பொர­ளையில் உள்ள ஜீன் டெக் நிறு­வ­னத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட அவர் அங்கு விசேட மருத்­துவ நிபு­ணர்­களால் விசேட பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். கொண்­டயா எனப்­படும் சந்­தேக நபரின் உடலின் பல…

Read More