Headlines

பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் கண்டனம்!

பாராளுமன்றத்தில் நேற்று(03) நடைபெற்ற நடவடிக்கைகளானது பாராளுமன்றத்தின் உயரிய தன்மைக்கும் அபிமானத்துக்கும் பெரும் களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவர்களையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக சாபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபையில் அறிவித்தார். பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்…

Read More

தமிழக தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் (29) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி  வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 2,112 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த 233 வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பிரிசீலனை எதிர்வரும் 30 ஆம் திகதி  நடைபெறுகிறது. மே 2 ஆம் திகதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று, இறுதி வேட்பாளர்…

Read More

துமிந்தவுக்கு நீதிமன்றம் அனுமதி

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய விசேட நீதிபதி குழு  அனுமதி வழங்கியுள்ளது. தனது தலையில் சத்திர சிகிச்சையொன்றை சிங்கப்பூரில் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால்  நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தின் அனுமதியை கோரி இருந்தாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். இம் மாதம் 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பவர் 2 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிங்கப்பூரில்…

Read More

மஹிந்த தரப்பு விளம்பரத்திற்கு பாரிய தொகை செலவு

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்கு மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டுள்ளது. பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது நேற்று இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரி- சந்திரிக்கா தரப்புக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சந்திரிக்காவின் உரையிலிருந்து மிஸ்டர் பிரபாகரன்…

Read More

சவூதி மன்னரின் விஷேட ஆலோசகர் – பிரதியமைச்சர் அமீர் அலி சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் சவூதி  அரேபியாவின் ரோயல் – மன்னரின் விஷேட ஆலோசகர் கலாநிதி பாயிஸ் அல் ஆப்டின் நேற்று வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலியை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார். இச் சந்திப்பின்போது கிழக்கு மாகணத்தின் வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் நிர்மானத்துறை பற்றியும் பிரதியமைச்சர் சவூதி  மன்னரின் ஆலோசகருடன் கலந்துரையாடினார்.

Read More

காஸாலை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருக்கிறோம் – கட்டார்

இஸ்ரேல் – ஹமாஸ்  யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் கட்டார் காசா பகுதியை வெகு விரைவில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் துருக்கி அனைத்து எல்லை கட்டுப்பாடுகளையும் இஸ்ரேல் உடன் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Read More

அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அனுதாபம்!!!

புத்தளம் கல்விமான் அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவு தனக்கு ஆழ்ந்த கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.. பன்முக ஆளுமைகொண்ட அவரின் மனிதநேய செயற்பாடுகளை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றேன்.கற்றோருக்குரித்தான எளிமையும் சிறந்த பண்பும் கொண்ட அன்னார் வடபுல அகதி மக்களின் விடிவுக்காக உழைத்தவர். 1990ம் ஆண்டு புத்தளத்தில் தஞ்சம் அடைந்த வடபுல அகதிகளின் நலன்களுக்காக களத்தில் நின்று உதவிஇருக்கின்றார். பல்லாயிரக்கணக்கன மக்கள் ஒரே இரவில் புத்தளத்தில் அடைக்களம் தேடியபோது…

Read More

மகிந்தவை 2005 ஆம் ஆண்டு சிறையிலடைத்திருக்க வேண்டும் : சரத் என். சில்வா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை என்ற சுனாமி நிதி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது. அப்போது, அவரது வேட்பாளர் அந்தஸ்து கேள்விக்குறியானபோது, அவர் மீதான குற்ற விசாரணையை நிறுத்தி சரத் என்.சில்வா தலைமையிலான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது….

Read More

தையல் தொழிற்பயிற்சி நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம்  மாவட்ட அமைப்பாளர்  அலி சப்ரி ரஹீமின் முயற்சியில் புத்தளம்  மாவட்டத்தில் பத்து மினிதையல் தொழிற்பட்டறைகள் ஆரம்பிக்கப்பட்டதும், அவற்றில் சுமார் 200 மகளிர் பயிலுனராக இணைந்து கொண்டதும் யாவரும் அறிந்ததே. அவர்களது குறிப்பிட்ட ஆறு மாத கால பயிற்சி நெறி நிறைவுக்கு வருவதை முன்னிட்டு, ஒவ்வொரு நிலையங்களிலும் பிரியாவிடை வைபவங்களும், கண்காட்சிகளும் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், புத்தளம், சேனைக்குடியிருப்பில் உள்ள பயிற்சி நிலையத்தில்…

Read More

தலைமன்னார் பியர் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை. அமைச்சர் ரிஷாட் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு தக்க பலன்..

தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக, அந்த மக்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்க  காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், சமாதான சூழ்நிலையில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்களுக்கான காணி உரிமங்களை வழங்குமாறு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த தொடர்ச்சியான எழுத்துமூல கோரிக்கைகள், சந்திப்புக்கள்…

Read More

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எரித்ரோசின் “பி” தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்!

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எரித்ரோசின் “பி” தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்! விழிப்புணர்வு தர உதவுங்கள் அதிகம் பகிருங்கள் கோடை வந்தாலே கூடவே அனல் தணிக்க வந்துவிடும் தர்ப்பூசணி. இனிக்கும் இந்தப் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டால், எவ்வளவு வெயிலையும் சமாளிக்கும் உத்வேகம் வந்துவிடும். அவ்வளவு நீர்ச்சத்து இந்தப் பழத்தில். வீதிக்கு வீதி இளநீர்க் கடைகளைவிட தர்ப்பூசணி கடைகள் கோடையில் முளைப்பது இதனால்தான்.ஆனால் வாட்ஸ் அப்பில் வைரஸாகப் பரவிய அந்த வீடியோ காட்சி நிச்சயம்…

Read More

புனர்நிர்மாணம் செய்யப்படும் பெல்லங்கடவள வாய்க்கால்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், அநுராதபுர மாவட்டப் பாராளுன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெல்லங்கடவள வாய்க்கால் புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Read More