Headlines

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் செம்மண்ணோடை பிரதேச பாதைகள் புனரமைப்பு

  கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் பல லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை செம்மண்ணோடை பிரதேசத்தில், நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த பாதைகள் செப்பனிடப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் வேண்டியதற்கிணங்க அல்ஹம்றா வீதி, தக்வா பள்ளிவாயல் வீதி, தக்வா பள்ளி குறுக்கு வீதி, ஓடாவியார் வீதி, வாஹித் வீதி,  நாகையடி வீதி, எல்லை வீதி ஆகிய வீதிகளின்…

Read More

தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைமைகள் பொதுவான விடயங்களில் ஒன்றுபட வேண்டும் – யாழில் அமைச்சர் ரிஷாட் பகிரங்க அழைப்பு

சுஐப் எம் காசிம் தமிழ் பேசும் சகோதர சமூகங்களின் அரசியல் தலைமைகள் எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில்; சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை யாழ்ப்பாணம் பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்தார். கண்காட்சியில் பிரதம விருந்தினராக…

Read More

துருக்கியை மீண்டும் இஸ்லாமிய தேசமாக கட்டி எழுப்பும் முயற்சி துருக்கி அதிபரால் தொடக்கம்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி துருக்கி என்பது ஒரு இஸ்லாமிய தேசம் ஒரு காலத்தில் கிலாபத்தின் உறுதிமிக்க தலைமைபீடமாக திகழ்ந்த துருக்கி கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு வந்த ஆட்சியாளர் முஸ்லிம் விரோதிகளாகவே மாறி மத சார்பின்மை என்ற பெயரில் துருக்கியில் இருந்து இஸ்லாமிய அடையாளங்களையே அழிக்க முனைந்தனர். அண்மைகாலம்வரை இந்த இழி நிலையே துருக்கியில் நீடித்து வந்தது. தர்போதைய துருக்கி அதிபர் ரஜப் எர்துாகான் அவர்களின் ஆட்சியில் மீண்டு ஒரு உண்மையான இஸ்லாமிய தேசமாக துருக்கி உருவெடுப்பதர்கு…

Read More

ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! – மஹிந்த ராஜபக்ச

கடந்த சில நாட்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடுமையான அவமானங்களை அவதூறுகளை எதிர்நோக்க நேரிட்டது. இவற்றை தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு. மக்கள் ஆதரவு எனக்கு காணப்படுகின்றது. நான் எனது பொறுப்புக்களை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்த போது நான் செய்த பணிகளை முன்னெடுப்பார்கள் எனக் கருதியே வீட்டுக்கு சென்றேன். நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிய காரணத்தினால் மக்கள் என்னை நேசிக்கின்றார்கள். நாம் அனைவரும் பௌத்த மத வழிமுறைகளை பின்பற்றினால் பௌத்த மதம்…

Read More

சுற்றுலா அல்லது கல்வி வீஸாவில் வேலை வாய்ப்புக்காக செல்ல வேண்டாம்

ற்றுலா அல்லது கல்வி வீஸாவில் டுபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக ஆட்களை அனுப்பும் மோசடி வியாபாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அவர்களை அந்த நாடுகளில் தவிக்க விட்டுவிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியது. இத்தகைய குழுக்கள் குறித்து பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார தெரிவித்தார். கடந்த காலங்களில் இவ்வாறான பல சட்டவிரோத…

Read More

மனைவியை மீட்டுத்தரும்படி கணவன், குழந்தை, வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தலுடன்..

சேவைக்காலம் நிறைவடைந்தும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வரும் படி கூறி நபரொருவர் வேலைவாய்பு பணியகமொன்றின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். குருநாகலையில் உள்ள வேலைவாய்ப்பு பணியகமொன்றின் முன்னாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது பிள்ளையுடனேயே குறித்த கணவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தல் ஆகியவற்றையும் அவர் தன் வசம் வைத்திருந்துள்ளார். பின்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

Read More

சில எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொருள் வகைகளில் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கனியவள மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திய எரிபொருள் நிறுவனங்களினால், Xtra Premium Euro3 மற்றும் Extra Mile ஆகிய எரிபொருட்களின் உற்பத்தி விலைகள் 2 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

ஹிலரி வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தெரிவாகியுள்ள ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் உலக நாடுகள் எதிர்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த இரு வேட்பாளர்களில் ஒருவர் தான்…

Read More

மஹிந்த-கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவசர சந்திப்பு!

– ஆர்.யசி – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சி தலைமையகத்தில் அவசர சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று மாலை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தியிருந்த விசேட உரையினையடுத்தே மேற்படி சந்திப்பு தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் ஜன­வரி 8 ஆம் திக­திக்கு முன்னர் இருந்த வைராக்­கியம் இன்னும்…

Read More

சுயநல அரசியல் கட்சிகளை விரட்டியடிக்க மக்கள் தயார்

– நூர் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஏராளமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருந்தனர். இந்த இளையோர் அணி அங்குராப்பன நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும்,கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய…

Read More

மண்ணுக்குள் புதையுண்ட ரோலர் இயந்திரம்!

கினிகத்தேனை – பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது….

Read More

இலங்கை வரும் பான் கீ மூன்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியுடன், ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், பான் கீ மூன் சிறிலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை, அடுத்த மாதம் மேற்கொள்ளவிருக்கிறார். செப்ரெம்பர் 3ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார். இதன் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் பலரையும், எதிர்க்கட்சித் தலைவர்…

Read More