Headlines

நாளை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனையொட்டி இன்றும், நாளையும் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு எம்.பிக்களின் ஓய்வு அறைகள் அலுமாரிகள் என்பனவும் சோதனையிடப்பட இருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நாளை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 22 வரை பாராளுமன்ற விவாதங்கள் இடம் பெறவுள்ளன. ஒக்டோபர் 25 முதல் நவம்பர் முதலாம் திகதி வரை முதலாம் வாசிப்பு மீதான…

Read More

மக்கள் சந்திப்பு

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அமைச்சில் (09) இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் சந்திப்பில், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிடீன் மற்றும் அமைச்சின் அதிகாரி லலத் ஆகியோர் கலந்துகொண்டு, மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டனர்.    

Read More

முஸ்லிம் பாடசாலைகளுக்கு, 3 நாள் விடுமுறை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை பிரிவு, எதிர் வரும் ஓகஸ்ட் 17-19 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தெரிவித்துள்ளதோடு, ஓகஸ்ட் 20ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்குமாறும் தெரிவித்துள்ளது

Read More

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் புதிய ஹஜ்முகவர்கள் சங்கத்தின் நிருவாக குழு தெரிவு

(அஸ்ரப் ஏ சமத்) கடந்த காலங்களில் பிரச்சிணைகளில் ஈடுபட்ட இரண்டு ஹஜ்முகவர்கள் சங்கங்களையும் ஜம்மியத்துல் உலமா அழைத்து கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிக இலங்கை ஹஜ்முகவர்கள் நிருவாக சபையைத் தெரிபு செய்து முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷஷேக் றிஸ்வி முப்தி, செயலாளர் அஷ;ஷேக் அஹ்மத் முபாராக் உறுப்பிணர் முக்ஸித் அஹ்மத் ஆகியோர் முன்னிலையில் இரண்டு ஹஜ் முகாவர்கள்…

Read More

ஆஸியில் இலங்கைப் பெண்ணொருவர் மரணம்

கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அமேஷா ராஜபக்ச என்ற பெண், கடைக்கு பொருட்களை வாங்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவருடைய சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சந்தேகம் இருக்குமானால் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிங்களவரான அமேஷா ராஜபக்ச 2009ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இதேவேளை ஒருவாரத்துக்கு முன்னர் குறித்த பெண் உடல்கட்டுமான நிலையம் ஒன்றுக்கு சென்று நீச்சல் பயிற்சியை பெற்றுக்கொள்வது தொடர்பாக விசாரித்து வந்தார் என்று…

Read More

தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கியதற்கு காரணம் என்ன? பெரியமடுவில் அமைச்சர் றிஷாட் விளக்கினார்.

சுஐப் எம் காசிம் போரின் பிடியில் இருந்து தப்பி முள்ளுக்கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதனாலேயே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பள்ளமடு-பெரியமடுவுக்கான பாதை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் கூறியதாவது, வங்குரோத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும்…

Read More

ஜக்கரிய்யா (அலை) அவர்களின் பிரார்த்தனையும் ஏக இறைவனின் அருளும்

நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தன்னுடைய திருப்பணியைத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்பினார்கள் ஜக்கரிய்யா (அலை). அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தி, தாழ்ந்த குரலில் மிக உருக்கமாக அழுது வாரிசு வேண்டி பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்! மனதால் உறுதியுடன் இருக்கும் எனக்கு, தலைமுடிகள் நரைத்துவிட்டன, எனது எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன. மனதில் இருக்கும் தெம்பு உடலில் இல்லை.  எனக்குப் பின்னர் என் உறவினர்கள் வழி்கெட்டு விடுவார்களோவென்று நான் அஞ்சுகிறேன். நான் செய்து கொண்டிருக்கும்…

Read More

சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை,  அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத் தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவத்தை வைத்து சில வங்குரோத்து அரசியல்வாதிகள் ஆதாயம் தேட முனைகின்றனர். இஸ்லாத்துக்கு மிக நெருக்கமான மார்க்கத்தவர்களான கிறிஸ்தவ சகோதரர்கள், படு பயங்கரவாத கயவர்களால் கொல்லப்பட்ட…

Read More

புதிய பட்டியலுக்கு சுகாதார அமைச்சர் அனுமதி

புதிதாக வழங்கப்படும் வைத்தியர் பதவி நியமன பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அமல் ஹர்ஷடி சில்வா தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய பட்டியலை நாளை health.gov.lk என்ற சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பார்க்கலாம். இன்றையதினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால தலைமையில் குறித்த நியமனப் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு.

ஊடகப்பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பெயரில் மாத்திரமின்றி கொள்கையிலும் மக்களுக்காகவே பணியாற்றி வருவதாக  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தேவன்பிட்டி கிராமத்திற்கான தேவாலய சுற்றுப்புற பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் நிகழ்வு  மாந்தை பிரதேச சபைத் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்… தமிழ், முஸ்லிம், என்ற இன வேறுபாடு, மத வேறுபாடு, மொழி வேறுபாடு என்ற…

Read More

நேர்மையாக நடந்து கொண்ட முஹம்மது நிப்ராஸ்!

சகல இலங்கையர்களுக்கும் பெருமையைத் தேடித்தரும் விதத்தில், கட்டார் நாட்டில் இலங்கை இளைஞரின் நேர்மை கட்டார் நாட்டின் பொது இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 90,000 கட்டாரி ரியால்களை இலங்கையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நிப்ராஸ் என்பவர் அவ்விடத்திற்கு உரிய பாதுகாப்பு அதிகாரியினூடாக போலீஸிடம் ஒப்படைத்ததையிட்டு கத்தார் நாட்டின் பாதுகாப்பு திணைக்களத்தின் Brigadier Nasser Jabr Al-Nuaimi அவர்கள் இவரின் இந்த நல்ல செயலை பாராட்டியதுடன், கத்தார் தலைமை பாதுகாப்பு திணைக்களத்தின் இணையத்தளத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை ரூபா சுமார் 32…

Read More