Headlines

ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டே பணியாற்ற வேண்டியிருக்கின்றது. மன்னார், கூழாங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்

  சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்ற போதும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தே பணிகளை தொடரவேண்டியிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் ஐ.நா ஹெபிடட் நிறுவனத்தின் ஊடாக மன்னார் கூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை அதிபர் அரபாத்…

Read More

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு மேஜர்ஜெனரல் கமால் புகழாரம்

சிறிலங்காவின் முதன்மையான புலனாய்வுச் சேவையான இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வீழ்ச்சியைத் தடுக்காவிடின், நாடு கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன. தெரண தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், ‘உயர்மட்ட வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு லெப்.கேணல் அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. மரபு ரீதியான இராணுவ அச்சுறுத்தலை…

Read More

“யாழில் மாட்டிறைச்சி கடைகளை மூடுவது வீண் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” கே.எம் நிலாம்!

மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் குறிப்பிட்டார். நல்லூர் பிரதேச சபையில் நேற்று (11) மாட்டிறைச்சி கடைகளை தடை செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார். மாட்டிறைச்சியை முஸ்லீம் மக்கள் அதிகமாக நுகர்வதை யாவரும் அறிவர். யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் அநேகமான இறைச்சிக்கடைகளை குத்தகை அடிப்படையில் பெற்று நடாத்துவது முஸ்லீம் மக்களாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில்…

Read More

இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றத்தில் நடந்தது என்ன? அரசியல் பழிவாங்கலா? அதிகார துஷ்பிரயோகமா?

ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம் நல்லாட்சி நிலவுகின்ற எம் நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் நல்லாட்சி பிழையாக விமர்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றம் தொடர்பில் ஒரு உண்மை மறைக்கப்பட்டு பிழையான கருத்தாடல்கள் கல்குடா முஸ்லிம் பிரதேச மக்களிடம் விதைக்கப்பட்டு வருகின்றது. ஒரு உண்மையை மறைத்து விடாது, இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டு விடாது, மக்கள் மன்றத்திற்கு நடந்ததை நடந்ததாகக் கொண்டு சென்று மக்களை விழிப்பூட்டுவது ஊடகவியலாளர்களுடைய கடமையாகும். அந்த வகையிலும்,…

Read More

சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (2016.12.14) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கால் நடைகளுக்கு ஏற்படும் குரைநோய் மற்றும் வாய் நோய் சம்பந்தமாக சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற 03வது வருடாந்த தொடக்க நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் ! பிரதமரிடம் பைரூஸ் ஹாஜியார்

அஸ்ரப் ஏ சமத் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை அரசு நடந்த வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடத்தில் கடிதம் ஒன்றின் மூலம் விஷேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். குறிப்பாக அளுத்கம பேருவளை சம்பவங்களின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம்…

Read More

கோட்டாபயவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ம் மற்றும் 27ம் திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மாயமான மலேசிய விமானத்தின பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக தகவல்

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கிடப்பதாக விமான போக்குவரத்து துறை வல்லுநர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்குப் புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்370) திடீரென ரேடார் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பில் இருந்து விடுபட்டு மாயமாக மறைந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமல் போனதால் அது இந்தியப்…

Read More

அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது!- அவுஸ்திரேலியா

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.இலங்கைக்கு வருகை தந்திருந்த அந்த நாட்டின் குடிவரத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் இருந்து தமிழக முகாம்களில் இருந்தும் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் வருகை, அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரம் அல்ல. இலங்கையின் உள்நாட்டிலும் பிரச்சினையை குறைத்துள்ளது என்று டட்டன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் டட்டன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க…

Read More

தலைக்கவசத்திற்கு எதிராக போராடிய அரசியல்வாதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக போராடிய மிக்சிக்கன் மாநிலத்தின் அரசியல்வாதி ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார். மிக்சிக்கன் மாநிலத்தின் பிரதிநிதியான 66 வயதுடைய பீட்டர் பெட்டாலியா என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வட மிக்சிக்கன் பகுதியில் உள்ள அதிவேக பாதையில் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது டிரக் ஒன்று மோதியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பீட்டர் பெட்டாலியா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More

 நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை

சகல வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலிருந்து சேகரிக்கப்படும் நூடில்ஸ்களின் மாதிரிகள் கைதுதொழில் தொழிற்நுட்ப நிறுவகத்துக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு வவுனியா பட்டாணிச்சூர் மதீனா வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா பட்டாணிச்சூர் மதீனா வீதிக்கான புதிய கொங்ரீட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான. றிப்கான் பதியுதீன்…

Read More