வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா (வீடியோ)
வவுனியா – சிங்கள பிரிவு வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா
வவுனியா – சிங்கள பிரிவு வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா
எ.எச்.எம்.பூமுதீன் மன்னார் மாவட்டத்தில் சாரதி பயிற்சியை நிறைவு செய்த 220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (31) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முத்து முகம்மட், அப்துல் பாரி என பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வருடமும் அமைச்சரால் இலவசமாக சாரதி பயிற்சி வழங்கி இளைஞர்…
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸை பணித்துள்ளார். இம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்குமாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவை இன்று காலை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதே வேளை…
உலகம் முழுவதும் 6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதற்காக ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் 3.1 பில்லியம் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது.சமீப காலங்களில் குழந்தைகளுக்கான் அச்சுறுத்தல்கள் அதிகமாக வளர்ந்து உள்ளன.மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் எபோலோ நோய் மூலமும் , சிரியாவில் தீவிரவாதம் மூலமும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த நிதி உதவி மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும். இது குறித்து யுனிசெப் இயக்குனர் அப்சான் கான் கூறியதாவது:-…
கௌரவமான பெண்களது ஆடைகளைக் களைந்து அவர்களை நிலத்தில் போட்டு மிதிக்க வேண்டும் என்றளவிலான கதைகளைக் கூறும் அளவுக்கு எமது உயர் கல்வி அமைச்சின் தரம் மாறியுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க விசனம் தெரிவித்தார். கண்டி, ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஆக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று உயர் கல்வி அமைச்சிற்குப் பாரி பல பொறுப்புக்கள் உண்டு. நாட்டின் இளைஞர், யுவதிகளது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு திட்டமிட வேண்டிய பல்வேறு…
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நேர்மையான நாட்டுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும அரசியல் கட்சித் தலைவர்களிடம் இரண்டு பீடாதிபதிகளும் கோரியுள்ளனர். குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் மக்களிடம் கோரியுள்ளனர்.
ஊடக பிரிவு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியில் நாணாட்டனில் கலாச்சார மண்டபம் நிர்மாணம் மன்னார் மாவட்டம் – அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மானம் செய்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முதற்கட்டமாக 220 வீடுகளுகளை நிர்மாணிப்பதற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், வழங்கப்பட்ட குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான…
இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…
இனவாதிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக மட்டும் இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்பதற்கு விசேட வைத்தியர் குழுவின் சில உறுப்பினர்கள் உதாரணமாகவுள்ளனர். அத்துடன் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் நியமிக்கப்ட்டுள்ள நிபுணர்குழு உலக சுகாதார ஸ்தாபனத்திலுள்ள நிபுணர்களை விடவும் சிறந்த நிபுணர்களா கேட்கிறேன் என அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (30) திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு…
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார். கடந்த காலங்களில் ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புரிந்த சிராஸ் மீராசாஹிப் மீண்டும் அரசியலில் இறங்கியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனித்தனி கடிதங்களிலும்…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய விளக்கம் இன்னமும் நாடாளுமன்றத்துக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.