Headlines

ஆசிரியர் விடுதிக்கான அடிகல் நாட்டு விழா

முசலி தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு தங்குமிட விடுதிக்கான அடிகல் நாட்டு விழா நேற்று (17) நடைப்பெற்றது.  இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முன்னாள் முசலி பிரதேசசபை உப தவிசாளர் பைரூஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

Read More

விரும்பியபடி மருந்துகளின் விலைகளை நிர்ணயிப்பதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது – அமைச்சர் ராஜித

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் முன்னைய அரசில் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் 2014ஆம் ஆண்டில் 3 மாதங்கள் அமைச்சில் இருந்து இதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒவ்வொரு கிழமையும் இரண்டு நாட்கள் கலந்தாலோசித்து ஓளடத (மருந்தாக்கள்) சட்டத்தை சகல வேலைகளையும் முடித்திருந்தார். நான் தற்போதைய சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் முடிவுரை மட்டுமே எழுத முடிந்தது. தற்பொழுது அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிந்தது. இதனை சமர்பிக்கும்போது ஒரே ஒரு வேறு கட்சியின் பாராளுமன்ற…

Read More

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் நியமனம்

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக தரன்ஜிட் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  தரன்ஜிட் சிங் உக்ரைன், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சேவையினை புரிந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் குழுவின் இந்திய பிரதிநிதியாக செயற்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் 5G

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சரான ஹரின் பெர்னான்டோ மற்றும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

பிரதி சபாநாயகராக திலங்க சுமத்திபால

8 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக திலங்க சுமத்திபால சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிறிய ஆடை தொழிற்சாலை திறப்பு விழா கண்டி அருப்பொலையில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்

சிறிய ஆடை தொழிற்சாலை திறப்பு விழா கண்டி அருப்பொலையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இச் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மத்தியமாகான சபை உருப்பினர்களான லாபீர் ஹாஜியார் மற்றும் ஹிதாயத் சத்தாரும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் மற்றுமொரு பகுதி காணி; விரைவில் விடுவிப்பு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட  காணியில் விடுவிக்கப்படாமலிருக்கும் எஞ்சிய நான்காயிரத்து 400 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக யாழ் பாதுகாப்புச் சேவைகள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார் . கீரிமலை வீடமைப்புத்திட்டம் இம்மாத இறுதியில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். நேற்று (7) கீரிமலைக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்காக…

Read More

மொங்கோலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட மம்மி துறவி இன்னமும் தியான நிலையில்?

கடந்த வாரம் கண்டுபிடிக்கப் பட்ட மொங்கோலியாவில் கோயில் ஒன்றில் பாதுகாக்கப் பட்டு வைக்கப் பட்டிருந்த துறவி போன்ற வடிவத்திலுள்ள மம்மி இறக்கவில்லை எனவும் தொடர்ந்து நூற்றுக் கணக்கான வருடங்களாக இன்னமும் தியான உணர்விலேயே இருப்பதாகவும் மூத்த பௌத்தத் துறவிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மம்மி துறவி சடலமானது கால்நடைகளின் தோலினால் போர்க்கப் பட்டும் பத்மாசனத்தில் உட்காந்திருப்பது போன்ற நிலையிலும் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. ஏற்கனவே இத்துறவி மம்மி ஒரு மர்ம நபரால் கருப்புச் சந்தையில் விற்கப்படுவதற்காகத்…

Read More

பீ. ஜெ வந்தால் கலவரம் வெடிக்குமாம்

இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் இலங்கை வரவுள்ள நிலையில் அவரை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என ஆசாத் சாலி வலியுருத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்த 2005ல் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களும் அப்போதைய பாதுகாப்பு செயலாலரும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இன்று ரனிலின் அரசு அவர் நாட்டுக்குள் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்துள்ளது.இலங்கைக்குள் இஸ்ரேல் நட்பு உயிர்பெற்றுள்ள நிலையில் பி ஜெய்னுலாப்தீன் இஸ்ரேல்…

Read More

ராஜித குழுவினர் ஜெனீவா நோக்கிப் பயணம்

69ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளிட்ட குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இந்த சுகாதார மாநாடு இன்று 23ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ் முஸ்லிம்கள் தொடர்பில் எழுத்துமூல ஆவணம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளேன் – றிப்கான் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு வாக்களித்த தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு சமமான முறையில் தமது பணிகளை ஆற்றுவதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் தமது நன்றியினை தெரிவிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளதுடன்,அதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச வேண்டும் என்ற கோறிக்கையினையும் முன் வைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ் விஜயம் செய்தமை தொடர்பிலும்,அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்…

Read More

‘யாழ் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

  -ஊடகப்பிரிவு- 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா கடந்த சனிக்கிழமை (23) யாழ் உஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள் என்றும், எல்லோருக்கும் முன்மாதிரியாகவும் அருட்கொடையாகவும் அல்லாஹ் நபிகளாரை அனுப்பி மாக்களாக…

Read More