Headlines

மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியும் – சிரேஸ்ட சட்டத்தரணி

மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியும் என சிரேஸ்ட சட்டத்தரணி பெற்றி வீரக்கோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இரண்டு தடவைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது என வெளியிடப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எத்தனை தடவையும் பதவி வகிக்கக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாகவும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பது…

Read More

ஹெலியில் சென்று பிரதமர் பார்வை

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலியில் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இயற்கை அனர்த்தங்களை வானிலிருந்து நேற்று புதன்கிழமை பார்வையிட்டார். இயற்கை அனர்த்தங்களை பார்வையிட்டதன் பின்னர், நாடாளுமன்றத்துக்கு நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஹெலியிலேயே வருகை தந்தார். அவைக்கு வருகை தந்த பிரதமர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை, பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நானும்,…

Read More

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் 1929 தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­களை மாத்­திரம் 1929 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு முறை­யி­டு­மாறு சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த சில நாட்­க­ளாக குறித்த 1929 தெலை­பேசி இலக்­கத்தின் ஊடாக அநா­வ­சி­ய­மற்ற முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெறு­வ­தாக அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த வெள்ளிக்­கி­ழமை குறித்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு 1290 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவற்றில் 1202 முறை ப்­பா­டுகள் தேவை­யற்­றவை என்றும் சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. அவற்றில் சிறு­வர்­களை பாட­சா­லைக்கு சேர்ப்­பதில் உள்ள பிரச்­சி­னைகள், சர்­வ­தேச பாட­சா­லை­களின் கட்­டணப்…

Read More

ஆனமடுவ – மதவாக்குளம் முஸ்லிம்களின் சிறந்த முன்மாதிரி

அண்மையில் இலங்கையிலுள்ள ஆனமடுவ, மதவாக்குளம் என்ற ஊருக்கு குத்பா மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தோம் அல் ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் உதவியால் இலங்கையின் பல பாகங்களுக்கும் அவனது மேலான மார்க்கத்தை எத்திவைப்பதற்காக செல்லக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் தந்து கொண்டே இருக்கிறான், எல்லாப் புகழ்களும் அந்த ரஹ்மானுக்கே உரித்தாகட்டும். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை தேடிப்பார்ப்பதில் அலாதியானதொரு இன்பம் நமக்கு, அந்த வகையில் குத்பா நிகழ்த்திய மதவாக்குளம் ஜுமுஆ பள்ளிவாசலுக்கு சுமார்…

Read More

எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் : ரவி கருணாநாயக்க

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முடிவெடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், யாரும் எதிர்பார்க்காத ஒருவரே எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவாரெனவும், இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதனை தீர்மானிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சிகளிடமே ஜனாதிபதி வழங்கியுள்ளமை …

Read More

ஜனாதிபதி சிங்கம் போன்று செயற்பட வேண்டும் – சோபித தேரர்

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எவருக்கும் அடிபணியாமல் நாட்டில் நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமென மாதுலுவாவே சோபித தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டார். நாட்டின் சட்டத்தில் எவரும் தலையிடாதவாறு நாட்டின் நலனுக்காக சகலதையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட மாதுலுவாவே தேரர், எவருக்கும் தலைவணங்க வேண்டிய அவசியமில்லையெனினும் ஜனாதிபதி அவர்கள் சிங்கம் போன்று தலைநிமிர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மாக்கும்புரவில் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியுடன்…

Read More

‘ஜேர்மன்விங்கஸ்’ விபத்து: வெளியான அதிர்ச்சி தகவல்

விபத்துக்குள்ளான ஜேர்மன் நாட்டு விமானத்தின் குரல் பதிவு பெட்டியில் இருந்து பயன்படுத்தக்கூடிய தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து தெரிய வந்ததாகக் கூறப்படும் சில முக்கிய விடயங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. ‘ஜேர்மன்விங்ஸ்’ விமானம் பிரான்சில் விபத்துக்குள்ளான நாளில் வானிலை சீராகவே இருந்தது. இதனால் விபத்துக்கான பிரதான காரணி வானிலையாக இருக்க முடியாது என்பது ஓரளவுக்கு உறுதியாகியது. மேலும் வேறு  எந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது இது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்றா என்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. இந்நிலையில்…

Read More

பான் கீ மூன் – அமைச்சர் றிஷாத் நாளை சந்திப்பு

-சுஐப் எம்.காசிம் – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நாளை காலை (02/09/2016) கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கம் கொண்டுவரவுள்ள யாப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்தும், நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஐநா செயலாளர் நாயகம் பான்…

Read More

அனர்த்தம் நிகழ்ந்து அதனை கடக்கும் வேளை

– Mujeeb Ibrahim – அனர்த்தம் நிகழ்ந்து அதனை கடக்கும் வேளை… இயக்கச்சண்டைகள், அரசியல் முரண்பாடுகள் என நம்மவர்கள் பிஸியாக இருக்கும் போது… இந்த இடைவெளிக்குள் இஸ்ரேல்காரன்வ ந்து இறங்கியிருக்கிறான். நம்ம தெஹிவளை, கல்கிஸ்ஸ மேயர் நிவாரணப்பொருட்களை பாரம் எடுக்கும் காட்சிகளே இவை…. இதன் பின்னால் உள்ள தனசிறியின் (மேயர்) அரசியல், இஸ்ரவேலின் திட்டங்கள் பற்றி விரிவாக பேசவும், ஆராயவும் வேண்டிய தேவை இருக்கிறது. அது சரி தெஹிவளை, கல்கிஸ்ஸ பகுதிகளுக்கு எப்போ வெள்ளம் வந்திச்சு? நிவாரணம் கொடுக்க…

Read More

சுதந்திரக் கட்சியில் இருந்து கருணா ராஜினாமா

முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 நடைபெறும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி (2018) நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

Read More

ISIS அமைப்பில் பெல்ஜியம் நாட்டவர்

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில், 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவலை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில், பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு, அவற்றை இணைத்து, தனி இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பில், பெல்ஜியத்தை சேர்ந்த, யூனுஸ் என்ற, 13 வயது சிறுவன் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் இளம் வயது போராளியாக, கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி உள்ள யூனுசின் புகைப்படத்தை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது….

Read More