Headlines

யாழ் முஸ்லீம் பகுதி கடைகளில் இன்னும் பழைய விலையில் சிற்றுண்டி மற்றும் பால் விற்பனை

பா.சிகான் யாழ். நகரப்பகுதியில் உள்ள உணவகங்களில் விற்கப்பட்ட சில உணவு வகைகளுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதால் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள உணவகங்களும் விலைகளை உடனடியாக குறைக்குமாறு யாழ். வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெய்சேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். நகரப்பகுதியில் உள்ள உணவக உரிமையாளர்களுடன் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது உணவக உரிமையாளர்கள் விலை குறைப்பினை மேற்கொள்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், முன்னர் 15 ரூபாவிற்கு விற்பனை செய்த தேனீர் 10 ரூபாவிற்கும்இ பால் தேனீர் 30…

Read More

மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

மலேசியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, மலேசிய தமிழர்களால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதுமாத்திரமின்றி மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்…

Read More

மைத்திரி – மோடி சந்திப்பு; 4 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் முந்தைய அரசாங்கம், சீனா அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து வந்ததுடன் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய…

Read More

அ.இ.ம.கா.வின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிஷாத் பதியுதீன் அவர்களின்   குருநாகல் மாவட்ட இணைப்பாளரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளருமான அஸார்தீனின் ஏற்பாட்டில் குருநாகல் வெஹெர நகர விளையாட்டு மைதானத்தில், நேற்று காலை (02) இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான ஹஜ்விளையாட்டுப்போட்டியில், அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்ஹ, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்க, மக்கள்…

Read More

பர்தா அணியக் கூடாது என, சட்டம் கொண்டுவந்த அரசு மண் கவ்வியது

கனடா பொதுத் தேர்தலில்; கடந்த ஒரு தசாப்தமாக நீடி த்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்ப தோடு லிபரல் கட்சி வெற்றி யீட்டியுள்ளது. இதன்மூலம் கனடாவின் முன்னாள் பிரதமர் பியெர் ட்ருதாவின் மகனும் லிபரல் கட்சி தலைவருமான ஜஸ்டின் ட்ருதா அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பே ற்கவுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி 188 தேர்தல் மாவட்டங்களில் முன்னிலையில் இருந்தது. மொத் தமுள்ள 338 தேர்தல் மாவட் டங்களில் ஆட்சி அமைக்க…

Read More

இறுதி முடிவு இன்று ஐ.தே.கவுடன் 3 மாவட்டத்தில் போட்டி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 03 மாவட்டங்களில் போட்டியிட இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 03 மாவட்டங்களிலேயே ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புத்தளம் மாவட்டத்தில் ஐதேக பட்டியலில் அ.இ.ம.கா சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் நவவியும் குருநாகல் மாவட்டத்தில் டொக்டர் சாபியும், அநுராதபுர மாவட்டத்தில் இசாக் ஹாஜியாரும்…

Read More

ஞான­சார தேர­ரிடம் 100 கோடி நஷ்ட ஈடு கேட்­கும் அமைச்சர் ராஜி­த

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்களால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூபா 100 கோடி வழங்க வேண்டும் எனக்கோரி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர்  ராஜித சேனாரத்தின தனது சட்டத்தரணி ஊடாக நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்தின சார்பாக அவரது சட்டத்தரணி சனத்வீரரத்தின இந்த நோட்டீஸை கலகொட அத்த ஞானசார தேரருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த…

Read More

வேட்பாளர் தெரிவு தொடர்பான அறிவித்தல்!

-ஊடகப்பிரிவு- மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில், இது வரை கட்சித் தலைமை எந்த இறுதியான முடிவையும் மேற்கொள்ளவில்லை. வேட்பாளர் தெரிவு இன்னும் நிறைவு பெறவும் இல்லை. இந்த சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடாத்தப்பட்டு, இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Read More

பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவு கவலை தருகின்றது – தலைவர் ரிஷாட் அனுதாபம்!

சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் இஸ்ஹாக் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பொறியியல்பீடத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியதுடன், சிறந்த கல்வியியலாளர்களின் அவசியம் தொடர்பில்…

Read More

சந்திரிகா மீதான தற்கொலைத் தாக்குதல் ; 300 ஆண்டுகள் கடூழிய சிறை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச்செய்தார். கொழும்பு மாநகர சபைத்திடலில் வைத்து, 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 190 குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உதயன்…

Read More

3 லட்சம் டொலர்களை வைப்பு செய்தால் இலங்கையில் 10 வருட வதிவிட வீசா

இலங்கையில் 3 லட்சம் டொலர்களை வைப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசாவினை…

Read More

“சமூகத்தின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பேரினவாதத்தின் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்”– வேட்பாளர் அஷ்ரப் தாஹிர்!

நமது சமூகத்தின் குரல், மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் சமூகத்தின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால், இந்த அரசினதும், பேரினவாதத்தினதும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார் என மக்கள் காங்கிரஸின், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர் கூறினார். நிந்தவூர், வன்னியார் வட்டாரத்தில் நடைபெற்ற. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். வேட்பாளர் அஷ்ரப் தாஹிரை ஆதரித்து நடைபெற்ற இக்கூட்டம், பிரதேச சபை பட்டியல் வேட்பாளர் கே.எல்.றபீக்…

Read More