Headlines

ACMC நாவிதன்வெளி இளைஞர்கள் சந்திப்பு.

நாவிதன்வெளி பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர்கள் சந்திப்பும், மக்கள் சந்திப்பு இன்று (03) கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷ்ர்ரப் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், இளைஞர்கள் நெறிப்படுத்தல் தொடர்பாகம் இங்கு ஆராய்யப்பட்டது. இந்நிகழ்வின் கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் .

Read More

“நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது. அக்கட்சியின் தலைமை சமூகம் சார்ந்த போராட்டங்களையும், பணிகளையும் எந்தவித தடைகளுமின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேசத்திற்கான மகளிர் அணி காரியாலயத் திறப்பு விழாவும், கட்சியின் வெற்றிக்கு பாங்காற்றிய ஆதரவாளர்களுக்கு…

Read More

அஸ்வர் ஹாஜியாரிடம் அன்பான வேண்டுகோள்!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகத்தை முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் கிழித்து எறிந்ததையிட்டு ஆச்சரியப்படுகின்றேன். முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். அப்பொழுது முஸ்லிம் அறிஞர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள் கண்டனம் தெரிவித்து மறுப்பு எழுதினார்கள். அக்காலத்தில் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த அஸ்வர் கிறுக்காஜியார் எந்தவொரு நடவடிக்கையை எடுக்கவோ, வாய்பேசவோ இல்லை….

Read More

மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது..!!

பலாங்கொடை, கிரிமெட்டிதென்ன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 134 வெள்ளைச் சந்தன மரக்கட்டைகளுடன் மேலும் பல பெறுமதியான மரக்கட்டைகளும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More

கொழும்பு நோக்கி வந்த விமானம் ஏன் திரும்பிச் சென்றது தெரியுமா?

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வௌியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் இன்று காலை 10.06க்கு நாட்டை…

Read More

திருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்….

Read More

முஸ்லிம் காங்கிரஸ் வங்குரோத்து அரசியலை ஆரம்பித்துள்ளது… அப்துல்லாஹ் மஹ்ருப் குற்றச்சாட்டு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருவதாக மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பளார் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துவிட்டு, அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு ஆதாயம்…

Read More

ஜப்பானுக்கு செல்வதே எனது இலக்கு ; யாழில் முதலிடம் பெற்ற மாணவன்

ஜப்பானுக்கு செல்வதை இலக்காகக் கொண்டு இந்தப் பரீட்சைக்குத் தோற்றியதாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான கபிசன் தெரிவித்தார்.மேலும் அவர் கருத்துதெரிவிக்கையில்,நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளேன். ஜப்பானுக்கு செல்வதை இலக்காகக் கொண்டு இந்தப் பரீட்சைக்குத் தோற்றினேன்.

Read More

அமைச்சரவை எண்ணிக்கை குறைக்க தீர்மானம்

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை தடுக்க 30ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின் படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்தியமைக்கும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இம் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 19 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் கீழ்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட…

Read More

எனது அரசில் குறைகள் உண்டு; மஹிந்த

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். (o) நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன். இந்த அரசு குறைபாடுகள் இல்லாமல் இல்லை. போதைப் பொருள் காணப்படுகின்றது அவற்றை நாம் பிடிக்கின்றோம். இவற்றை பத்திரிகைகளில் பிரசூரித்து…

Read More

மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் அ.இ.ம.காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டி

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வனிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.   கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்தார்.   இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்;-   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட கிழக்கில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்ததால்…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ஐ.டி.என் தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில் ஒலி,ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபாய் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். ஏற்கனவே, பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ, இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், குறித்த கொடுப்பனவுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதனை தேர்தலின்போது பொறுப்பாக இருந்த பிரச்சாரக்குழுவே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை…

Read More