Headlines

“தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக தமிழர் – முஸ்லிம் தரப்பினர் ஒரே மேடையில் இருந்து பேச வேண்டும்”

மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது. எமது நாட்டில் தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள், பல தசாப்தங்களாக தேங்கிக் கிடக்கிறது. அவற்றுக்கு ஒரு தீர்வுப் பொறி முன்வைக்கப்பட வேண்டுமென்றால், அரசாங்கத்துடன் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் ஒரே மேசையில் இருந்து பேசித் தீர்க்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட…

Read More

எதைச்செய்தாலும் வேற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமது சமுதாயத்துக்குக் கேடு.

  மினுவாங்கொடை நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாட்.   -ஊடகப்பிரிவு நாம் எதைச் செய்தாலும் அதனை வேற்றுக் கண்ணோட்டத்தில் எப்போதும் நோக்கும் நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமக்கு தொடர்ச்சியாக பாதிப்புக்கள் நேரிடுகின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் ருவைதா மதீன் எழுதிய “குடிபெயறும் கனவுகள்”கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக இன்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்….

Read More

ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம் – விஞ்ஞானிகளின் அற்புதம்

நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த குறையை போக்க புதிய ஆய்வில் மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் குருய்சர் எனேபிள்ட் விமான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதன்படி ஒரு விமானத்தில் எரிபொருள் மட்டும் நிரப்பப்பட்டிருக்கும். அதில் நிரப்பட்ட எரிபொருள் மூலம், 5 விமானங்கள் வரை வானில் பறக்கும் போதே பெட்ரோலை நிரப்பிக்கொள்ளமுடியும். தொழில்நுட்ப ரீதியாக இம்முறை சாத்தியமானது என சிமுலேஷன் நிரூபித்துள்ளதாக கூறிய…

Read More

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் ?

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்….

Read More

வைத்தியசாலைக்கு தனியாகச் சென்ற ஜனாதிபதி

சிகிச்­சைக்­காக கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள காணி அமைச்சர் கே.டி.எஸ். குண­வர்­த­னவை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன பார்­வை­யிடச் சென்றபோது பிடிக்கப் பட்ட படமே இது. இதன்போது அவர் பாது­காப்பு பிரி­வி­னரை அழைத்துச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

வாகன விபத்தில் சிறுமி பலி : யாழில் சம்பவம்

யாழ். – வேலணை பகுதியில் கடற்படையினர் கெப் ரக வாகனத்தில்  மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் 10 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இடைநிறுத்தம்- பிரதியமைச்சர் அமீர் அலி

வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித் கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சி நேற்று 27.10.2016 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்:- “கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும்…

Read More

புத்துயிர் பெறுகிறது லசந்த படுகொலை விசாரணை!

சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பொலிஸார் மேலும் சிலரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்திருப்பதாகத் தெரியவருகின்றது. லசந்தவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள புலனாய்வுப் பொலிஸ் குழு நுவரெலியா மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் ஒருவர் உட்பட பத்துப் பேரின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிச்சை ஜேசுதாசன் என்பவர் மரணமடைந்ததையடுத்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரின் கிராம…

Read More

குளியாபிட்டி வீரகமவில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜய நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை.

Read More

மட்டக்களப்பில் யானை தாக்கி கணவன் மற்றும் மனைவி பலி!

யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் பலியாகிய சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை – நெல்லிக்காடு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்லிக்காட்டிலுள்ள அவர்களது வீட்டை உடைத்த யானை, உறங்கிக் கொண்டிருந்த குறித்த இருவரையும் தாக்கிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதீக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்!

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்! உடல் ஊனமுற்ற நிலையிலும் திருமறை குர்ஆனை ஓதி கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தை தான் பார்க்கின்றீர்கள் அவரது தோற்றத்தை உற்று நோக்குங்கள் அந்த நிலையிலும் அவர் படைத்தவனையும் அவனது வேதத்தையும் மறக்காமல் மதிக்கும் செயல் உண்மையிலேயே அவரது உயர்ந்த இறையச்சத்திர்கு சான்றாக நிர்கிறது ஆரோக்கியம் பெற்றவர்களே சிந்தியுங்கள் வேகமாக திருமறையை நோக்கி திரும்புங்கள் கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ் நாங்கள் உயிருடன் இருக்கும் காலம் வரை…

Read More