Headlines

குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று (14) விசினவ, மடலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டதுடன், வேட்பாளர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விளக்கங்களையும் அளித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள்…

Read More

VIDEO -“புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதே எமது இலக்கு” – தலைவர் ரிஷாட்!

வடபுல மக்களுக்கு அடைக்கலமளித்த புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான என்.டி.எம்.தாஹிர் மற்றும் எம்.எச்.முஹம்மத் ஆகியோரை ஆதரித்து, வெள்ளிக்கிழமை (25) அல்-காசிம் சிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதில், எமது…

Read More

இன்று முதல் குளிர்பான போத்தல்களுக்கு குறியீடு

குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின்  பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஒரு குளிர்பான போத்தலுக்குள் 2-11 கிராம் சீனி மாத்திரம் அடங்கியிருந்தால் மஞ்சல் நிற குறியீடு…

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்று சித்தியடைந்த  மாணவியை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன்

வவுனியா, ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தின் 47 வருட வரலாற்றில் முதன் முதலாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த அஸ்வர் பாத்திமா ஸல்ஹா என்ற மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில்  இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் கே எம் எம் அனீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்களான வி ஜயதிலக, அலிகான் ஷரீப்,…

Read More

சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக்காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது: ஜனாதிபதி

மஹரகம இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் சுயாதீனமான சுகாதார சேவை ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தடையாக அமைந்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கோரினார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் சுகாதார…

Read More

சிங்கள, முஸ்லிம் நல்லிணக நிகழ்வு

இக்பால் அலி மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் நாமே சிங்கள கிராமவாசிகள் ஒன்றிணைந்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை மேலும் உறவை வலுப்படுத்தும் வகையிலான நிகழ்வு நேற்று 09-11-2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊர்ப் பெரியார் ஏ, டி. குனவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதில் விசேடமாக பௌத்த மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களுடைய ஆசிவுரை நடைபெற்றது. உமங்கல சங்கரத்ன வெலிமடை தம்மரத்தன தேரர் சார்பாக வருகை தந்த கந்தகருவே தேவரத்ன தேரர் மற்றும் கோமன்கடவல தேரர்,…

Read More

அக்­கு­ற­ணைத்­ தொ­கு­தி­யிலே போட்டியிடுவேன் – காதர் ஹாஜி

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்குப் பாராட்டுத் தெரி­வித்த ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்­த­லை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அப்­துல்­ காதர் பேஸா விசாக்கள் விற்­கப்­ப­டாது ஏழை பள்­ளி­வாசல் பணி­யா­ளர்கள் போன்­றோ­ருக்கு பகிர்ந்­த­ளிக்க வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்தார். நேற்­றுக்­காலை கொழும்பு நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் இவ்­வ­ருடம் ஹஜ் கோட்டா ஆகக்­கூ­டி­யது 50ஆகவும் ஆகக் குறைந்­தது 15ஆகவும் ஹஜ் முக­வர்­க­ளி­டையே பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது ஓர் சிறந்த முறை­யாகும்….

Read More

எதிர்க்கட்சி தலைவர் யார் ? சபாநாயகர் இன்று அறிவிப்பார்

எதிர்க்கட்சித் தலைவர் யார் ? என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவா அல்லது தினேஷ் குணவர்த்தனவா அல்லது இரா. சம்பந்தனா? என்ற சர்ச்சை அரசியலில் தலைதூக்கியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் சுதந்திரக் கட்சியினர் இணைந்து…

Read More

யுத்தக்குற்ற விசாரணைக்கு ஆதாரங்களை வழங்கப் போகும் கெலும் மக்ரே

இலங்கையில் இறுதிக் கட்டத்தில்  இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சனல் 4 இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை  நேர்மையானது , எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதிநடவடிக்கைகளுக்குவழிவகுக்க கூடும், எமது வீடீயயோக்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை என எம்மை விமர்சனம் செய்யும் இலங்கை அரசாங்கமும், அதன் இராணுவமும் குற்றம்சாட்டியது, ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நீருபிப்பதற்க்கு எமக்கு புதிய ஆதராங்கள்…

Read More

டின் மீன்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

தகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More