Headlines

மின்சார வேலியில் சிக்கி 16 வயது சிறுவன் பலி

ஆர்.கோகுலன் மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று வியாழக்கிமை(29) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த ரவிந்து டி சில்வா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை, தம்பவின்ன பகுதியில் சட்டவிரோதமாக மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Read More

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் மற்றுமொரு பகுதி காணி; விரைவில் விடுவிப்பு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட  காணியில் விடுவிக்கப்படாமலிருக்கும் எஞ்சிய நான்காயிரத்து 400 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியில் மற்றுமொரு பகுதி விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக யாழ் பாதுகாப்புச் சேவைகள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார் . கீரிமலை வீடமைப்புத்திட்டம் இம்மாத இறுதியில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். நேற்று (7) கீரிமலைக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்காக…

Read More

தேசிய உணவு பாதுகாப்புக்கான வேலைத்திட்டம் விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தேசிய வேலை திட்டமான விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம் எனும் இலங்கை மக்களுக்கான உணவு பாதுகாப்புத்திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது வேலைத்திட்டம் இன்று தம்பலகமம் பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்றது . இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்ட அபிவிருதிகிழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதில் முன்னால் மாகாண அமைச்சர் ஆரியவதி , மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன் , கிழக்குமாகான…

Read More

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழிற்றுறை திட்டங்கள்- அமைச்சர் றிஷாட்.

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபீட்சம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளத்தில்  அமைக்கப்பட்டுள்ள பனம் பொருட்கள் உற்பத்திக் கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார்….

Read More

 தவிசாளர் முஜாஹிர் தலைமன்னார் விகாரைக்கு நல்லெண்ண விஜயம்! 

-ஊடகப்பிரிவு- தலைமன்னாரில் அமைந்துள்ள ஶ்ரீ வாலுகாராம விகாரைக்கு விஜயம் செய்த மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், அங்கு விகாராதிபதியான ஜே.வளல்லாவிட விமலசிரி ஹிமி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, எதிர்காலத்தில் இப்பிரதேசத்தினை சிறந்ததொரு பிரதேசமாக மாற்றுவதற்கு தங்களின் உதவி ஒத்தாசைகளைத் தந்துதவ வேண்டுமெனவும் விகாரதிபதியிடம் வேண்டிக்கொண்டார். விகாராதிபதி ஜே.வளல்லாவிட விமலசிரி ஹிமி அவர்கள்  கருத்து தெரிவிக்கையில்,  தவிசாளர் முஜாஹிரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தன்னாலும், இப்பிரதேச மக்களாலும் முடியுமான உதவி ஒத்தாசைகளை நிச்சயம் வழங்குவோம் என்று உறுதியளித்தார்.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுகீட்டில் மாவடிப்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிப்பு!

-ஊடகப் பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்திற்கு வழங்கப்பட்ட தளபாடப் பொருட்களில் ஒரு பகுதி, மாவடிப்பள்ளி கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று முன்தினம் (14) ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில், காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலினால், அதிபரிடம்  கையளிக்கப்பட்டது. கடந்தவாரம் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட உறுப்பினர் ஜலீல், பாடசாலையின் தேவைப்பாடுகள், குறைகளைப் பற்றி…

Read More

யாழ். வருகிறார் ஜேர்மனிய தூதுவர்

இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர்  ஜூர்கன் மொர்காட் ஒரு நாள் விஜயமாக நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.யாழிற்கு வரும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. வடக்கின் அபிவிருத்தி குறித்தும் இங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அவர் ஆராய்வார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

வாஸ் குணவர்த்தன , மகன் இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தனர் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சீ.பீ. எஸ். மொராயஸே, இவ்வாறு விளக்கமறியலை நீடித்து இன்று  உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் மக்கள் கொந்தளிப்பு ஏற்படும், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இடமிருப்பதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேராவின் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னரே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பிரதி…

Read More

மாணவர்கள் மூவர் கைது!

பதுளை மாவட்டம், எல்ல, உடுவர பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு நடவடிக்கையில்ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் 16 மற்றும் 14 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரவு வேளைகளில் வர்த்தக நிலையத்தின் பூட்டினை உடைத்து அங்குள்ள பொருட்கள்மற்றும் பணத்தினை கொள்ளையடித்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனையடுத்து நேற்றைய தினம் (02) குறித்த மூன்றுமாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர்கள்…

Read More

கழுதைகளுக்கான சிகிச்சை மற்றும் அறிவூட்டும் மையம் திறந்துவைப்பு!

மன்னார் மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி கட்டாக்காலிகளாக திரியும் கழுதைகளை முறையாக பராமரித்து, அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று மன்னார் தாய்லாந்து குடியிருப்பு சின்னக்கரிசலில் நேற்று (21)ஆரம்பித்து வைக்கப்பட்டது . இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்தார். மேலும், பிரதம அதிதியாக பங்குகொண்ட தவிசாளர் உரையாற்றும் போது, மன்னார் நகர மற்றும் பிரதேச மக்களை சிரமப்படுத்திய இந்த கழுதைகளை முறையாக பராமரித்து மக்களின்…

Read More

வாழைச்சேனையில் இலவசக் கருத்தரங்கு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01.08 .2016 திங்கட்கிழமை அன்று பி.ப.02.00 pm தொடக்கம் 07.30pm மணிவரை நடைபெறவுள்ளது. வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில் ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில் அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் பாணந்துறை அல் பஹ்ரியா மத்திய மகா வித்தியாலய அதிபர் ARM ஜிப்ரி அதிபர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது….

Read More