Headlines

மஸ்கெலியா ஏழு கன்னி மலை பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்பு

மஸ்கெலியா ஏழு கன்னி மலை (சப்த கன்ய) பகுதியில்  மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  மீட்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும்  அடங்கியுள்ளனர்.  

Read More

பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் சாய்ந்தமருது பிரச்சாரக் கூட்டத்தில் ஜெமீல்

தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சியில் இருந்து விலகியதாக சிலர் கூறிவருவதாக குறிப்பிட்ட அவர் அப்படி நான் பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்றும் சாய்ந்தமருது பொலிவோரியன் திறந்த வெளியரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் பல்வேறு பதவிகள் வகித்தவரும் கிழக்குமாகாணசபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு

الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு நிகழ்ச்சி. ஏற்பாடு Sri Lanka Da’wa Centre – Qatar இடம் MIC Sports Club– Ummsaeed Time 05/10/2014 (காலை 9 இலிருந்து ) பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விஷேட விளையாட்டு நிகழ்ச்சிகள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள் . جـــــــزاكم الله خيـــــــــــــــــــــــرا ،،،،، Sri Lanka Dawa Centre Qatar – SLDC…

Read More

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

  -சுஐப் எம்.காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை…

Read More

மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை…

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான  வர்த்தமானியை நடைமுறைப்படுத்த எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தடைவிதிக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை (22) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கூறி ஆறு வாக்களர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேவேளை, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி…

Read More

115 ஆசனங்களுக்கு அதிகம் பெற்று ஐ.தே.க. வெல்லும் – லக்ஷ்மன் கிரியெல்ல

இந்த முறைப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 115க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்ளும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு 55 ஆசனங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நாடுபூராகவும் உள்ள விகாரைகளுக்கு சென்று வாக்கு சேர்க்க முயற்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐ.தே.க.வின் தலைமையகத்தில் இன்றுகாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு…

Read More

பிள்ளையுடன் பிச்சையெடுத்தால் கைது

சிறு பிள்ளைகளைக் காண்பித்து பிச்சையெடுக்கும் யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்தனர். பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களைக் காண்பித்து பிச்சையெடுப்பவர்களைக் கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தினூடாக கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த பிள்ளைகளின் உண்மையான பெற்றோர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்…

Read More

கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு!

வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில் பின்னர் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இதனால், சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியரின் விடுதி அறையின் பூட்டை உடைத்து பார்த்த போது குறித்த வைத்தியர் கோமா நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த…

Read More

பொருளாதார மையமாக மாற்றப்படும் ஹம்பாந்தோட்டை

ஹம்பாந்தோட்டையை ஒரு பொருளாதார மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு சீன அரசாங்கம் முதலீடுகளை வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சீன அரசாங்கம் பொலன்னறுவை பகுதியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீனாவின் 21ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுப்பாதை இந்திய மற்றும் இலங்கைக்கான பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read More

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்: பாராளுமன்றத்தில் மோடி உரை!

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்கிற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதை வரிகளில் நம்பிக்கை கொண்டே தான் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்தியப் பிரதமர், பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவும், இலங்கையும் அண்மையில் இருக்கின்ற நாடுகள் என்கிற வகையில் மதம், மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்களில் ஒற்றுமையுள்ளவை. அதுபோல,…

Read More

துறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்

இலங்கை துறை முக அதிகார சபைக்கு சொந்தமாக காணப்படுகின்ற கப்பற் துறை , முத்துநகர் காணிகள் உரியவர்களுக்காக துரிதமாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் வெற்றுக் காணிகளில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதன் ஊடாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரியாலயத்தில் இன்று (19) வெள்ளிக் கிழமை இடம்…

Read More

நான் ஜனாதிபதியாக வரவேண்டுமென, மக்கள் விரும்புகின்றார்கள் – கோதபாய

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாம் ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதியாக தாம் நாட்டில் பதவி வகிக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு இலங்கையைச்சேர்ந்த மக்களும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். நாடு இன்று ஸ்திரமற்ற ஓர் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டால் அனைத்து விடங்களையும் சரி செய்து விட…

Read More