News
அமெரிக்க அப்பிள்களை வாங்காதீர்கள்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரமெல் அப்பிள் பழங்களை எவரும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவற்றை எந்த வியாபாரிகளும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் அறிவித்துள்ள சுகாதார அமைச்சு இறக்குமதியாளர் அவற்றை மீள எடுத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒருவகைக் கிருமி தொடர்பான நோய் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதனால் இலங்கையில் அது பரவுவதைத் தடுக்க இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளது என்று ணுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பி.ஜி.மகிபொல தெரிவித்தார். இந்த வருட ஆரம்பித்திலிருந்து லிஸ்ரெறியா மனோசைரோஜஸ்…
புதிய முறையில் தேர்தல் நடத்த மூன்று மாதம் தேவை – தேர்தல்கள் ஆணையாளர்
புதிய முறையில் தேர்தல் நடத்துவதாயின் குறைந்தது மூன்று மாத அவகாசம் தேவை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமை குறித்து சகல தரப்பினருடனும் ஆராய்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் தேர்தல் பரப்புரைகளின் போது கட்அவுட் சுவரொட்டி எதனையும் பயன்படுத்தாமல் தேர்தலை நடத்துவதையே தான் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அப்துல்லாவின் ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ இணைப்பு)
அப்துல்லா மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
புதிய ஆளுநர்கள் நியமனம் (photos)
அஸ்ரப் ஏ சமத் மூன்று புதிய ஆளுநர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அந்த வகையில் மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சஜித் பிரேமதாச கண்டிப்பான உத்தரவு
அஸ்ரப் ஏ சமத் வடக்கு கிழக்கு மலையகம் உள்ள சகல பிரதேசங்களும் எனது அமைச்சின் கீழ வருகின்ற வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுா்த்தி திவிநகும சகல நடவடிக்கைகளும் சமமாக பங்கீட்டு அப்பிரதேச அபிவிருத்திகள் நடைபெறவேண்டும். என புதிய அமைச்சா் சஜித் பிரேமதாச கண்டிப்பான உத்தரவு. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 24 மாவட்ட முகாமையாளா்கள், சமுா்த்தி அதிகார சபைகளின் சகல முகாமையாளா்களையும் நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனா். எனது அமைச்சின் கீழ் வருகின்ற எந்தவொரு…
மட்டகளப்பு அரசியல் வாதிகளின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் – அமீர் அலி (photos)
ஓட்டமாவடி அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி தான் இந்த பிரதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதற்கினங்க மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும் அரச அலுவலர்களும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கும் ஊழல்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து அனைத்தையும் உடைத்தெரிவதே எனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் முதற்திட்டமாக இருக்கும் என எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று(23.01.2015) செத்சிரிபாயாவில் உள்ள சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சில் தனது கடமையை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு அஹமட் இர்சாட்டின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார். அமீர் அலி பிரதி…
சவூதி தூதரகத்தின் இரங்கல் குறிப்பில் கையொப்பம்
ஊடகப் பிரிவு நேற்று அதிகாலை வபாத்தான சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ்; அவர்களின் நினைவாக இலங்கை ஹோட்டன் பிளேஸில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு புத்தகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தமது இரங்கற் குறிப்பினைனை எழுதினார். அதேவேளை, அப்துல்லா அப்துல் அஸீஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் பொருட்டும்,இலங்கை முஸ்லிம்களினதும்,அரசினதும் பிரதி நிதிகளின் குழுவில் ஒருவராக அமைச்சர் றிசாத்…
சவூதி மன்னரின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி அனுதாபம்
சவூதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும் பிலுள்ள சவூதி தூதரகத்துக்குச் சென்ற ஜனாதிபதி, குறிப்புப் புத்தகத்தில் கையயழுத்திட்டார். ஜனாதிபதி யுடன் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமும் சென்றிருந்தார்.
சவுதி மன்னரின் ஜனாசா நிகழ்வில் கலந்து கொள்ள அமைச்சர் றிஷாத் வெளிநாடு பயணம்
சவுதி அரேபியா மன்னரின் ஜனாசா நிகழ்வில் கலந்து கொள்ள கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத்,நீர் வழங்கள் அடிகால் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹகிம்,முஸ்லிம் சமய பண்பாட்டு அமைச்சர் ஹலிம் மற்றும் முன்னைய அமைச்சர் பெளசி ஆகியோர் இலங்கை நாட்டின் ஜனாதிபதியின் பிரநிதியாக இன்று மாலை விசேட விமானம் முலம் சவுதி அரோபியா சென்றுள்ளார்கள்.
முஸ்லிம் உலகுக்கு பணியாற்றிய சவூதி மன்னரின் சுவன வாழ்வுக்கு பிரார்த்தனை செய்யுங்கள் -றிஷாத் பதியுதீன்
ஊடகப் பிரிவு இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாலராக இருந்து முஸ்லிம் உலகுக்கு பணியாற்றிய சவூதி ஆரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் திடீர் மரணம்(2015-01-23) குறித்து இலங்கை முஸ்லிம்களும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அன்னாரின் சுவன வாழ்வுக்காக அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களையும் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் வபாத்தான மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்கள்…
சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் அஜித் நிவாட் கப்ராலுக்கு தடை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட்கப்ரால் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க இதனை அறிவித்துள்ளார். லஞ்ச ஊழல் திணைக்களத்தின் அறிவிப்பின் பிரகாரம் இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். tks- mn
அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு மாபெரும் மக்கள் வரவேற்பு நிகழ்வு
மன்னார் செய்தியாளர் நடை பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் மீண்டும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு வன்னி மாவட்ட மக்கள் மாபெரும் வரவேற்பு வைபவங்களை ஏற்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் சனிக்கிழமை 24 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று மற்றும் துனுக்காய் பிரதேசங்களிலும்,மாலை 4.00 மணிக்கு…
