News
மஹேலவுக்கும் சங்காவுக்கும் சச்சின் ருவிட்டரில் வாழ்த்து !
உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றனர். ஓய்வு பெற்ற இருவருக்கும் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் சச்சின் டென்டுல்க்கரும் தனது வாழ்த்தினை இருவருக்கும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சச்சின் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “பல வருடங்களாக ஒரு நாள்…
நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
அரச மருத்துவர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அரச வைத்தியகள் சங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசிடம் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபடப் போகின்றனர் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய அரசிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து 8 வாரங்கள் கடந்த நிலையில் அவை எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த அரச வைத்திர்கள் சங்கம். எதிர்வரும் 25ஆம் திகதியிலிருந்து தாம்…
பண்டாரநாயக்க கொலையின் பின்னணி கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் – ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திர இளைஞர் முன்னணியின் புதிய அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு – 10 , டீ.பீ ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தமது கட்சியின் தலைவரைக் கொலை செய்யும் அளவிற்கு அரசியல் வீழ்ச்சியடைந்து சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு பண்டாரநாயக்க…
ஹம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அயுப்காண் அமைச்சர் ராஜித நியமனம்
அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் பொலிஸ் அதிகாரி ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த அயுப்காண் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஹம்பந்தோட்டை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சாம் மஹ்ருபின் மகன் மஹ்ருபையும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார். இந் நிகழ்வு இன்று நரரேஹேன்பிட்டியில் உள்ள ஊழியர் சோமலாப நிதிய அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில் திணைக்களத்தில் உள்ள ஊழியர் சேமலாப நிதியமே உப்புக் கூட்டுத்தாபனத்;தில்…
விலைக் குறைப்பு செய்யாத வர்த்தகர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – அமைச்சர் றிஷாத்
அரசாங்கம் மக்களுக்கு அறிவித்த பொருட்களுக்கான விலைக் குறைப்பு நுகர்வோர்களை சென்றடைவதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் கீழ் உள்ள நுகரவோர் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான அலுவலகம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கேதீஸ்வரன்,நுகர்வோர் அதிகார…
முஸ்லிம் மீடியா போரம் கண்டியில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 21ஆம் நூற்றாண்டில் ஊடகம் என்ற தொனிப்பொருளிலான உயர் வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ளது. கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூட்டத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கு மத்திய மாகாண சபை முதலமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நூறு மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக போரத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர்…
சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் கைது
வனாத்தவில்லு – போம்பரிப்பு பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 8 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அரசியல்வாதிகளுக்கு மதுசார விற்பனை அனுமதிப்பத்திரங்கள் இல்லை! பிரதமர் ஆப்பு
மதுசார உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் இனிவரும் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படமாட்டாது. தேவையேற்படின் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் மேலதிகமான வரிகளை விதித்து அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்க எம்.பி.யினால் எழுப்பப்பட்ட இடைக் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக கேள்வியெழுப்பிய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான அனுரகுமார திசாநாயக்க கூறுகையில்,…
நீரில் மூழ்கி சிறுவன் பலி
தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் ஆணமடு – பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்கொடுமைத் தடயங்கள் சிறுமியில் காணப்படுகின்றன; சட்ட வைத்திய அறிக்கை
வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டுள்ளமைக்கான தடயங்கள் இருப்பதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவு கொழும்பு தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது. வவுனியா, கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 27ஆம் திகதி தொண்டையில் நீர் இறங்கவில்லை என்று தெரிவித்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். ஆனால் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அக்கிரா மத்தை சேர்ந்த மாதர்சங்கத்தினர்,…
பொதுபல சேனா இரகசிய கூட்டம்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் முக்கிய பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று காலை தியவன்னா தியத்த பூங்காவில் நடைபெற்றுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகேவும் இக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
யாழ். உஸ்மானியா கல்லூரி கட்டடம் அமைச்சர் றிஷாதினால் திறந்து வைப்பு (photos)
யாழ்ப்பாணத்தில் 1956ஆம் ஆண்டு ஒரு பாடசாலையின் தேவை உணரப்பட்டது அப்போது ஒன்று சேர்ந்த மக்கள் 1958 ஆம் கட்டட நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தனர். 1963 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூதினால் இந்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. 1990 அம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதரன சூழலினால் மக்கள் இடம்பெயர்ந்ததனால் இங்குள்ள மாணவர்களின் தொகை குறைந்தது. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பாடசாலை மீண்டும் இயங்க துவங்கியது.தற்போது இந்த பாடசாலை உயர் தர…
