News
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் காரியாலயத்தை வவுனியா, எருக்கலங்கல் பிரதேசத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் திறந்து வைத்தார்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் காரியாலயத்தை வவுனியா, எருக்கலங்கல் பிரதேசத்தில் திறந்து வைத்த போது.
சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சார பணியில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது வெற்றிப் பயணத்திற்காய் இலங்கை துறை முகத்துவாரப் பகுதியில் மக்கள் கலந்துரையாடலும் பிரச்சார நடவடிக்கையும் பிரதியமைச்சரும்,மூதூர் தொகுதிக்கான புதிய ஜனநாயக முன்னணியின் அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான அப்துல்லா மஃறூப் அவர்களால் இன்று (02) முன்னெடுக்கப்பட்டது வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் சஜீத் பிரேமதாச தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
வெள்ளை வேன் கலாச்சாரம் ஊடுருவ இடமளிக்க வேண்டாம் : மன்னார், தாராபுரத்தில் பிரதமர் ரணில் கோரிக்கை
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபயவின் வெள்ளை வேன் கலாச்சாரத்தை மீண்டும் ஊடுருவச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று (02) மாலை மன்னார் தாராபுரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிகான் சரிப் தலைமையில் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்களான ரவி கருனாணாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும் பங்கேற்றனர். பிரதமர் மேலும் கூறியதாவது,…
சஜித்தை வீழ்த்த பல கோணங்களில் சதி – ரிஷாத்
சிறுபான்மை மக்களின் அதிபெரும்பாலானோர் ஆதரிக்கும் சஜித் பிரேமதாசவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அந்த மக்களின் வாக்குகளை சஜித்துக்கு செல்லவிடாமல் தடுப்பதற்கான பாரிய சதியொன்று அரங்கேற்றப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வாழைச்சேனையில் நேற்று(01) சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார், அவர் கூறியதாவது, அரபிகளின் வாகனமே ஒட்டகம் எனக் கூறிக்கொண்டு அரபிகளின் பணத்தை வாரி வீசி ஒருவர் களமிறங்கியுள்ளார். தான் போகுமிடம் எல்லாம் கேள்வி பதில் என்ற…
பொதுபலசேனாவுக்கு முழுமையான ஆதரவு வழங்கியவர்தான் இந்த கோட்டாபய ராஜபக்ஷ – ரிஷாட் பதியுதீன்.
பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைத்தவர் இந்த கோட்டாபய ராஜபக்ஷ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல், தித்தவல்கால பகுதியில் அன்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் காலியிலே பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச போக இருக்கின்ற விடயம் கேள்விப்பட்ட உடனேயே முன்னாள் ஜனாதிபதியாக…
இலவச குடி நீர் இணைப்பு வழங்கல்
முன்னால் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களது முயற்சியின் பயனாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களூடாக. முழு அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் (அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, தீகவாபி, அஷ்ரப் நகர், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும்)குடி நீர் இணைப்புக்காக விண்ணப்பித்த சுமார் 413 பயனாளிகளுக்கு கட்சி பேதமில்லாமல் அனைவருக்கும் ரூபா 75 இலட்சம் பெறுமதியான இலவச குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது…. அல்ஹம்துலில்லாஹ்!…
சமூகத்தின் மீது கொண்ட அதீத அக்கறையினாலேயே சஜித்துக்கு ஆதரவளிக்கின்றோம். கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட்.
முஸ்லிம் தலைமைகள் கொள்கை வேறுபாடு மற்றும் கருத்தியல் ரீதியான இடைவெளிகளை கொண்டுள்ள போதும் சமூகத்தின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கருத்தில்கொண்டே ஓரணியில் செயற்பட்டு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை எப்படியாவது கபளீகரம் செய்யவேண்டுமென்று…
ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் முற்போக்கு கூட்டணி,முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உருமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து…
அகதி வாழ்வில் 29 வருடங்கள் ; மீள்குடியேற்றம் நிறைவேற்றமடைய பிரார்த்திக்கின்றேன்: அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து, இழந்து போன நமது சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னை முழுமையாக தொடர்ந்தும் அர்ப்பணிக்குமென அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் (31) 29 வருடங்கள் நிறைவடையும் நிலையில், இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வரும் மக்கள் துரிதகதியில் மீள்குடியேறவும், மீள்குடியமர்ந்து இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவுபெறாத வகையில்…
சிறுபான்மையினரின் வாக்குகளை சின்னாபின்னமாக்க சதி’ ஏமாந்துவிட வேண்டாமென வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,…
வரலாற்றுக் கடமைகளிலிருந்து வழிவிலகிய யதார்த்தம். வடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா?
காலவோட்டத்திற்கேற்ப தேர்தல் களத்தை எவ்வாறு நகர்த்துவதென்பதை நாடி பிடித்துப்பார்ப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீனுடன் கடந்த வாரம் சென்ற களப் பயணங்கள் சமூக உணர்வுகளை உரசிச்சென்றது. வடக்கின் தொடுவாயிலிருந்து ஆரம்பித்த எமது பயணம் தென்னிலங்கையின் மூலை முடுக்குகளையும் ஆழ ஊடுருவி நோக்கியதால், கள யதார்த்தங்களை கணிப்பிட இயலுமாயிற்று.இந்தக் கணிப்பீடு வெற்றி தோல்வி பற்றியதல்ல.முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்குள் ஊடுருவியுள்ள அச்சம் கலந்த ஆதங்கம், அடிப்படைவாதத்தின் அசல்,நகல் பற்றிய தௌிவுகளில் எமது சமூகத்தின் கணிப்பீடுகளை இக்கள விஜயத்தில் காண முடிந்தது. ராஜபக்ஷக்களின் தென்னிலங்கை…
மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் தலைமையில் விழுதுகள் ஊடாக மகளீர் சங்கங்களுடன் கலந்துரையாடல்..
“விழுதுகள்” ஊடாக நடைபெற்ற நிகழ்வில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் , கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும மாவட்டத்தில் உள்ள மகளிர் சங்கங்கள் அனைவரையும் இன்று அழைத்து கலந்து உரையாடல் நடைபெற்றது. அதில் அவர்களுடைய குறை , நிறைகளை கேட்டறிந்தார்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஊடாக பிரச்சினைகளை செய்து தருவதாக வாக்களிக்கபட்டது. இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி மற்றும் நகர சபை உறுப்பினர் டிலான் , நகர சபை உறுப்பினர் குமரேசன் , பிரதேச…
