News
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசி எதையும் சாதித்து…
பிரதியமைச்சர் அமீர் அலி முயற்சியால் அங்குராணை மக்களுக்கு பாலம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, மினுமினுத்தவெளி பிரதேசத்திற்குச் செல்வதற்கான ஆற்றைக் கடப்பதற்கு ஒரு பாலம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பாலம் அமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லாமல் அக்குறாணை மற்றும் மினுமினுத்தவெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராம மக்கள் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துப் பாதைகள் இல்லாததாலும் அக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான பாதையூடாகச் செல்லும்…
மியன்மார் அகதிகளை இலங்கையில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக இனவாதிகள் மோசமான பிரசாரம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசாத் சாலி வலியுறுத்து.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப்பார்ப்பதாக தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார், ஆசாத் சாலி, அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் ரோஹிங்கியோ அகதிகளை இங்கு கொண்டு வந்து குடியேற்ற…
வடக்கில் வாழ்ந்தவர்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை
நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான இந்த செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார். வட மாகாணத்தில் முன்னர் வாழ்ந்து யுத்த நெருக்கடிகளாலும், யத்தப்பீதியினாலும் வெளியேறிய, வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அகதி மக்கள் இந்த செயலணிக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி மீண்டும்…
மேல் மாகாணசபையில் 20வது திருத்தச்சட்டம். முஹம்மட் பாயிஸ்(மா.உ)
அன்று 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் பெரும்பாலான அதிகாரங்களைகளை கொடுத்துவிட்டு இன்று மீண்டும் எஞ்சியுள்ள மாகாண சபையின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு தாரைவார்த்து கொடுத்து மாகாணசபைகளின் தரங்களை மாநகரசபை அல்லது பிரதேசசபையின் தரத்திற்கு தரந்தாழ்த்த எடுக்கும் இந்த 20வது திருத்த சட்ட மூலத்தை நாங்கள் ஆதரிக்க போவதில்லை என மேல் மாகாணசபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ் மேல்மாகாண சபையில் நடைபெற்ற 20வது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதின் போது மிகத்தெழிவாகவும் ஆடித்தனமாகவும் எடுத்துரைத்தார். அது மாத்திரமன்றி நாங்கள்…
அரசியல்சொல்வாக்கு இருப்பதாக கூறி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த இடமளியோம். நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்
குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கெடுக்காது பிரதேச மக்களின் நலனையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டே தகைமை பெற்றவர்களுக்கே புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் கனிய மணல்…
மீள்குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயலணிக்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் பங்களிப்பு நல்கவேண்டும்.
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தனது பூரண பங்களிப்பை நல்கவேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். பங்கொக்கை தளமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிறுவகத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று மாலை (13.09.2017) அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து பேச்சு நடத்திய போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்தச் சந்திப்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சிம்ரின் சிங் அவர்களும்…
ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்து இலங்கையின் பொருளாதார, தற்கால அரசியல் போக்கு குறித்து கேட்டறிந்துகொன்டனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் டுங் லாய் மார்க்( Tung -Laimargue) அவர்களும் கலந்துகொண்டனர்.
பொருளாதார வளர்ச்சியில் கணக்காளர்களின் பங்களிப்பு அபரிமிதமானது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணக்காளர்களின் பங்களிப்பு அபரிமிதமானதெனவும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக, புலமைப்பரிசில்கள் வழங்கிவருவது பாராட்டத்தக்கது எனவும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பட்டயக்கணக்காளர்களுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தொவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது, எனது அமைச்சின்…
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவர் அல் ஹாஜ் இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீட்டில் பாதைகள் புனரமைப்பு
கொல்லன்குட்டிகம மக்களின் பாதைகள் சேதமடைந்து மிகவும் சிரமப்பட்டு வந்த நீண்டகால பிரச்சினையை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவரும் அனுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
புத்தளம் விஞ்ஞான கல்லூரி கட்டிட வேலைகளை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி எம்.பி
புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை கொண்ட அலுவலக கட்டிட நிர்மாண வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. இக்கட்டிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பாரிய முயற்சியின் பயனாகவும், அவர்களின் வேண்டுகோளின் வாயிலாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் மூலம் புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விஷேட அம்சமாகும்.. கட்டிட நிர்மாண வேலைகளை பாராளுமன்ற…
தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி மாக்கந்துறை இன்கியுபேட்டர் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு
தேசிய சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான கொள்கை ஒன்றையும் தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிருத்தி அதிகார சபை (நெடா) நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாக்கந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் இயந்திர மத்திய நிலையம் அங்குரர்ப்பண விழாவில் விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,…
