Headlines

தாராபுரத்தில் இடம்பெற்ற வேட்பாளர் ஆதரிப்பு கூட்டம்!

-ஊடகப்பிரிவு-  மன்னார், தாராபுரம் வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எச்.உவைஸ் அவர்களை ஆதரித்து, புத்தளம் அல் காஸிமி சிட்டியில் நேற்று (07) கூட்டமொன்று இடம்பெற்றது. இளைஞர்களின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்நிகழ்வில், வேட்பாளரின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன், சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளிபரிபாலன சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின்  ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்    …

Read More

புத்தளம் பிரதேச சபை வேட்பாளர் அலுவலகம் திறப்பு நிகழ்வில் நவவி எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் றிபாஸ் நசீரின் தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.        

Read More

கிண்ணியா பைசல் நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கிண்ணியா நகரசபைத் தேர்தலில் பைசல் நகர் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்  ஹாரிஸ் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பும், கலந்துரையாடலும் பைசல் நகர் கட்சிக்கிளையில் நேற்று மாலை (06) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.    

Read More

மருதமுனை கண்டுகொண்ட வரலாறு காணாத அரசியல் தளம்!

-ஊடகப்பிரிவு- கல்முனை கிழக்கில் அரசியல் வரலலாற்றில் பெரும் எண்ணிக்கையிலான மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள், இன்று (06) மருதமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது, மேடையில் ஏறி கட்சியின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மருதமுனை கிராம மக்களின் பல்வேறு தேவைகள் தொடர்பில் கண்டறிந்து, அவற்றை இந்த மக்களுக்காக பெற்றுக்கொடுத்ததுடன், இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பினை பெரும்பான்மை…

Read More

வேதாந்தி சேகு இஸ்ஸத்தீன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைகின்றார்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், வடக்கு  கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸத்தீனை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் (06) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. மு.காவின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, மற்றும் மு.காவின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்துகொண்டு…

Read More

வேட்பாளர் ஆதரிப்பு கூட்டம்.. டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகரசபைத் தேர்தலில், ரஹ்மானிய வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸில் போட்டியிடும் வேட்பாளர் மஹ்தியை ஆதரித்த கூட்டம் நேற்று மாலை  (05) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, வீடுகளுக்குச் சென்று வாக்குச் சேகரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தகது.        …

Read More

சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- வர்த்தக, மீனவ, லொறி, முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் செவிப்புலனற்றோர் அமைப்பு ஆகியவற்றை  ஒன்றிணைத்த கலந்துரையாடலொன்று நேற்று மாலை (05) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளாரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம்.நெளஷாத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பை, வை.என்.டிரவல்ஸ் உரிமையாளர் ஜனாப் எம்.எஸ்.யாஸ்தீன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் அதிதியாகக் கலந்துகொண்டதோடு, சம்மாந்துறை பிரதேச சபையில் போட்டியிடும்…

Read More

‘முஸ்லிம் சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென மு.கா துடியாய்த் துடிக்கின்றது’ மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள தீர்வுத் திட்டத்தை எவ்வாறாவது அமுல்படுத்துவதற்கு,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை துடியாய்த் துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டாரத்துக்கான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜலீலை ஆதரித்து, மாவடிப்பள்ளியில் இன்று (06) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போதே…

Read More

கண்டி மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அமோக வரவேற்பு!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச சபை மற்றும் உடுநுவர பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்குரணை, உடுநுவர பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் நேற்று (05) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. அக்குரணை பிரதேச சபைக்குட்பட்ட உக்கல்ல வட்டாரத்தில் போட்டியிடும்…

Read More

பேருவளை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தர்காநகரில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற கூட்டத்தில். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட அளுத்கம வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சமீரை ஆதரித்து சீனவத்தையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதியமைச்சர், வெலிபிட்டி வட்டார வேட்பாளர் ஹஷீப் மரைக்காரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்….

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் விருது வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் விருது வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (05) நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வர்த்தகக் கூடுத்தாபனத்தின் மெகா காட்சியறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்  உயரதிகாரிகள், ஊழியர்கள்  உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.      

Read More

‘சமூகத்தின் விடிவுக்காக குரல் கொடுக்கும் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ வி.சி இஸ்மாயில்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களை நேசிக்கின்ற, முஸ்லிம் சமூகத்தின் விடிவுப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கின்ற ஒரு கட்சியாகும் என லக்ஸல நிறுவனத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச சபைக்கு வறிப்பத்தாஞ்சேனை வடக்கு வட்டாரத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும், பிரதம வேட்பாளர் எஸ்.ஏ.அன்வரை ஆதரித்து வறிப்பத்தாஞ்சேனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More