News
‘மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!
-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளிலே ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் மேலும்…
மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எதிர்வரும் 31, 01, 02, 03, 04 ஆம் திகதிகளில் அம்பாறை, குருநாகல், திருகோணமலை ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அந்தவகையில், 31/01/2018 ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று காலை 8.30 மணி நிந்தவூர் காலை 10.30 மணி சம்மாந்துறை பி.ப 2.00 மணி…
அரசியலில் மாற்றத்தை விரும்பும் கண்டி மாவட்ட முஸ்லிம்கள்!
-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமது அரசியல் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு, அவர்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் வெளிப்படுத்துகின்றது. கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை கம்பளை நகரசபை ஆகியவற்றில், தனித்துக்…
‘ஏமாற்றப்பட்டு வரும் சமூகத்துக்கு கைகொடுத்து உதவுவதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்’ கண்டியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
-சுஐப் எம்.காசிம்- வடக்கு, கிழக்கை மையாமகக் கொண்டு அரசியல் செய்து வந்த மக்கள் காங்கிரஸ், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு வெளியே போட்டியிடுவது தமது கட்சியை வலுப்படுத்துவதற்காகவோ அல்லது அதிகாரங்களை பலப்படுத்துவதற்காகவோ அல்ல என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கண்டியில் இன்று (28) பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்…
‘அபிவிருத்திப் பணிகளை மக்களின் காலடிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்’ குருநாகலில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளடங்கிய, கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று (27) சனிக்கிழமை முழுநாள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில்…
‘வன்னி சிறுபான்மை முஸ்லிம்களை பின்பற்றி மக்கள் பிரதிநிதித்துவத்தை உருவாக்குங்கள்’ நாரம்மலயில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும், குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களான பைசர் மற்றும் மபாஸ் ஆகியோரை ஆதரித்து, நாரம்மல, பொல்கஹயாயவில் இன்று (27)…
மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு அமைச்சர் ரிஷாட் கண்டனம்!
-ஊடகப்பிரிவு- காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒரு மிலேச்சத்தனமான செயலென்றும், இந்த நாசகார செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர் கானின் கட்சிக் காரியாலயம் இன்று அதிகாலை (27) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே, அமைச்சர் இவ்வாறான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளர். இந்தச்…
அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றும் ஹக்கீமின் யுக்தி.. நசீர் நியமனம் குறித்து அ.இ.ம.கா!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸு க்கு கிழக்கில் அதிகரித்து வரும் மக்கள் அலை காரணமாகவே, அட்டாளைச்சேனைக்கு எம்.பி. பதவியை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை மு.கா தலைவர் ஹக்கீமுக்கு ஏற்பட்டது. இதற்காகவேண்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் அட்டாளைச்சேனை மக்கள் நன்றி கூறவேண்டுமென கட்சி விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளுராட்சி தேர்தல் பிரசாரம் சூடுப்பிடித்து வரும் நிலையில் மு.கா.வின் கோட்டைகளில் அகில இலங்கை மக்கள்…
குருநாகல் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பல்வேறு பிரதேசங்களில் நாளை (27/ 01/ 2018) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்தக் கூட்டங்களில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் விஷேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அந்தவகையில், நாரம்மல, பொல்கஹயாய காலை 10.00…
‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் இனவாதிகளின் திட்டத்துக்கு பலிக்கடாவாகாதீர்கள்’ மாந்தையில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான கோரிக்கை!
-ஊடகப்பிரிவு- தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தலைமையில், சொர்ணபுரியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….
மு.கா ஒலுவில் அமைப்பளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!
-ஊடகப்பிரிவு- ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், ஒலுவில் அமைப்பாளராகவும் செயற்பட்ட அலியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜெமீல் முன்னிலையில் இணைந்துகொண்ட அவர், இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக உழைப்பதாகவும், மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
‘கல்முனை மாநகரசபை தேர்தல் முடிவுகள் முஸ்லிம் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ வேட்பாளர் ஏ.எம்.றியாஸ்!
-ஊடகப்பிரிவு- கல்முனை மாநகர சபைக்கான தேர்தலின் முடிவுகளில் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவை எடுக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் திணிக்கப்பட்டுள்ளது என்று வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் பெஸ்டர் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் 12 ஆம் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தொடர் ஏமாற்றத்தினால் செல்வாக்கு இழந்து போயுள்ள துரோகிகளின் கட்சியால் திட்டமிட்டு விரிக்கப்பட்டுள்ள சதி வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டிய…
