News
20 இலட்சம் முஸ்லிம்களுக்காக எனது உயிரை இழக்கத்தயார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான, றிஷாத் பதியுதீன் அரசிலிருந்து வெளியேறி பொது எதிரணியில் இணைந்து கொண்டமை தொடர்பாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் முழுவடிவமாக; திடீரென விலகியமைக்கான காரணம் 2005,2010 ஆகிய தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக நானும், எனது கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் பெரும் பங்காற்றிருக்கிறோம். அவரது வெற்றியிலேயே அதிகளவு பங்களிப்பினை நாங்கள் வழங்கியுள்ளோம். 2005…
தாக்குதல் மேற்கொள்ளுபவர்களைப் பொலிசார் பாதுகாக்கின்றனர் ; கபே
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக கபே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முக்கிய எதிர்கட்சிகளும், அவற்றின் செயற்பாடுகளும் மிரட்டல், அச்சுறுத்தல், வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன, அதன் உச்சக்கட்டமே சிறிகோத்தா மீதான தாக்குதல். குறிப்பிட்ட தாக்குதல் ஐக்கிய தேசிய…
மைத்திரியின் வெற்றிக்காக முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் – றிஷாத் பதியுதீன்
-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன், அஷ்ரப்கான், ஹாசிப் யாஸீன்- தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இளைத்த அநீதிக்கு எதிராக, தாங்கள் இந்த அரசு மேல் கொண்ட அதிருப்தியினால் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புவாய்ந்த அமைச்சுப்பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் எல்லாவைரையும் விட ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்சவின் உண்மையான நட்பு இவையெல்லாவற்றையும் துறந்து தாங்கள் வெளியேறி வந்ததை அங்கீகரிப்பது போல் பெரும் திரளான மக்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வந்திருப்பதை தான் பெரிதும் மதிப்பதாகவும் பெரும்…
பதவியேற்ற நேரம் முதல் இன, மத, மொழி, பேதங்களுக்கு இடமளிக்கமாட்டேன் – மைத்திரிபால
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் ஒரு தடவையாக மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பு வர்த்தகக் கண்காட்சி மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய ஐக்கிய அமைப்பின் முஸ்லிம் சமூக ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். உலக நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 அல்லது ஐந்து வருடங்களேயாகும். எமது நாட்டில் மட்டுமே அது ஆறு வருடங்களாக உள்ளது. நான்…
இஸ்லாமிய நிர்வாக குழுவின் விஜயம் ரத்து
இஸ்லாமிய கூட்டுத்தாபன நிர்வாக குழுவின் இலங்கை வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் இஸ்லாமிய கூட்டுத்தாபன செயலாளர் நாயகம் இயாட் அமீன் மதானியின் இலங்கை விஜயம் பிற்போடப்பட்டதாக ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 65 வது அமர்வின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்புக்கு இணங்க செயலாளருடன் 4 தூதுவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்தனர். இஸ்லாமிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் குறித்த…
முஸ்லிம் அரசியல் வாதிகள் , றிஷாத் பதியுதீனிடம் அரசியல் பாடம் கற்க வேண்டும்
K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) இன்று அரசியல் புலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் , அமைச்சர்களாகவும் , சிரேட்ட அமைச்சர்களாகவும் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் முந்நாள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் அரசியல் படிக்க வேண்டும்.ஒப்பீட்டு அளவில் இளம் வயது உடைய அவர் அரசியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். கோடிக்காக கட்சி மாறும் யுகத்தில் மக்களுக்காக மக்களின் அனுமதியுடன் கட்சி மாறிய இவரை இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தேசியத்தலைவராக உயர்த்தி வைத்துப் பார்க்கின்றனர். அரசில் இருந்து கொண்டே தம்புள்ளை முதல் அளுத்கமை வரை…
கொட்டும் மழையிலும் றிஷாத் பதியுதீனை காண திரண்டனர் கல்முனை மக்கள்
முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கிழக்கு மாகாண விஜயத்தின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று இரவு 9 மணிக்கு வருகை தந்து உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு வரலாறு காணாத மக்கள் வெள்ளம் (கொட்டும் மழை வெள்ளத்திலும்) திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இங்கு குழுமியிருந்த மக்கள் முஸ்லிம் சமூகத்தின் மறைந்த தலைவர் அஷ்ரபிற்குப் பிறகு சமூகத் தொண்டனாக தங்களை பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…
ஏறாவூரில் றிஷாத் பதியுதீனுக்கு ஊர்கூடி உணர்ச்சிபூர்வமான வரவேற்பு
ஏ.எச்.எம்.பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீன் இன்று கிழக்கிற்கான தனது பயணத்தை மேற்கொண்டார். இதன்போது ஏறாவூருக்கு விஜயம் செய்த தேசியத் தலைவன் றிஷாத் பதியுதீனுக்கு ஏறாவூர் மக்கள் ஊரோடு ஒன்றிணைந்து உணர்ச்சி பூர்வ வரவேற்பளிப்பதை படத்தில் காணலாம்.
சீத்தாவக்கை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த அரசு
சீத்தாவக்கை பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களில் ஐவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததையடுத்து அந்த பிரதேச சபையின் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது. ஐந்து உறுப்பினர்கள் எதிரணிக்கு மாறியதையடுத்து அந்த பிரதேச சபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. இதன்பிரகாரம் அந்த பிரதேச சபையில் எதிரணிக்கே பெரும்பான்மை இருக்கிறது.
கட்சி மாறும் ஆளும் தரப்பினர்; கலக்கத்தில் அரசு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட 20 பேர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வடமத்திய மாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் பி.பி.திஸாநாயக்க, அனுராதபுரம் பிரதேச சபையின் 12 உறுப்பினர்களுமாக 13 பேர், திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் அநுராதபுரம் மாவட்ட ஜயஅபிமானி அமைப்பின் தலைவர் ஆர்.பி.ஞானதிலக…
பெண்களின் ஆடைகளைக் களையும் அளவுக்கு, உயர் கல்வியமைச்சரின் தரம் மாறியுள்ளது – ரோசி சேனாநாயக்க
கௌரவமான பெண்களது ஆடைகளைக் களைந்து அவர்களை நிலத்தில் போட்டு மிதிக்க வேண்டும் என்றளவிலான கதைகளைக் கூறும் அளவுக்கு எமது உயர் கல்வி அமைச்சின் தரம் மாறியுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க விசனம் தெரிவித்தார். கண்டி, ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஆக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று உயர் கல்வி அமைச்சிற்குப் பாரி பல பொறுப்புக்கள் உண்டு. நாட்டின் இளைஞர், யுவதிகளது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு திட்டமிட வேண்டிய பல்வேறு…
கத்தார் நாட்டில் தொடர் கதையாகும், வெளிநாட்டு பணியாளர்களின் இறப்பு
வரும், 2022ம் ஆண்டில், உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில் பலர், அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகளவில் கட்டுமான பணிகளில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதாக, கார்டியன் நாளிதழ் சுட்டிகாட்டியுள்ளது. நேபாள தொழிலாளர்கள்: இதன்படி, நடப்பாண்டில், ஜனவரி – நவம்பர் வரையில் மட்டும், நேபாளத்தைச் சேர்ந்த,…
