Main News
‘வடக்கு, கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தளவில் பூர்த்தி செய்வோம்” பிரதியமைச்சர் அமீர் அலி!
-முர்ஷித் கல்குடா- வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில், திட்டமிட்டு செயற்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிரதியமைச்சர் அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும், விருந்துபசாரமும் பொத்தானை, கழுவாமடுவில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எனக்கு மேலதிகமாக மீன்பிடி…
தம்பிடிய, நிதுல்லகஹபிடிய வீதியோர மின்விளக்குகள் திருத்தியமைப்பு!
-றிம்சி ஜலீல்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நஸீரின் ஆலோசனையில், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களான ரஸ்லான் ரஸீன், அப்துல் ஹமீத் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மிகநீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாமல் இருந்த தம்பிடிய, நிதுல்லகஹபிடிய கிராமத்தின் வீதியோர மின்விளக்குகள், மக்கள் காங்கிரஸின் குளியாப்பிட்டிய பிரதேச சபையின் உபதவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் நேற்று (12) திருத்தியமைக்கப்பட்டது.
மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட மகளிர் அமைப்புக்கான கூட்டம்!
-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட மகளிர் அமைப்பின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கூட்டம் நேற்று மாலை (12) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸின் தலைமையில், கொழும்பு மாவட்ட கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மகளிர் கலந்துகொண்டனர். பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,…
மக்கள் காங்கிரஸின் அக்குரணை மத்திய குழுக் கூட்டம்!
-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரணை மத்திய குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (11) இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் அக்குரணை கிளைத் தலைவர் இல்யாஸ் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது, அக்குரணை மற்றும் கண்டி மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும்…
பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் வேண்டுகோளின் பேரில் மாவடிப்பள்ளி பொதுநூலகத்தின் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு!
-சாஜித்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவுப் பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் முயற்சியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்தின் சிரமதானப் பணிகள் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன. “மாவடிப்பள்ளி பொதுநூலகம் சில காலமாக பற்றைக்காடுடன், தூசுகள் படிந்து சீரின்மையாகக் காட்சியளித்தது. இதனைப் பார்வையிட்ட உறுப்பினர் ஜலீல், எதிர்வரும் றமழானுக்கு முன்பு இதனை சுத்தம் செய்ய வேண்டுமென்ற நோக்குடன், மாவடிப்பள்ளி SEDO அமைப்புக்கு பரஸ்பர சிரமதான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். இதனை ஏற்ற SEDO…
யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம், அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் வீட்டுக்கு விஜயம்!
-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட கிளைத் தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு இன்று (11)விஜயம் செய்து, அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்தார். அத்துடன் பிள்ளைகளை கிளிநொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பிக்கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார். மேலதிமாக வீட்டில் கல்வி கற்பதற்கான தளபாடங்கள், மகள் சங்கீதா ஆசைப்பட்டுக்கேட்ட பாடசாலைக்குச் செல்ல துவிச்சக்கர வண்டி மற்றும் பாதனிகள், வீட்டில் அணிவதற்கான ஆடைகள்…
வடக்கு மீள்குடியேற்ற செயலணி தனது பணிகளை துரிதப்படுத்துகிறது!
-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி அபிவிருத்திக்கு பொறுப்பாளரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை இணைத்தலைவராகக் கொண்டு இயங்கி வரும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி தனது திட்டங்களைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலணி, மீள்குடியேற்றக் கிராமங்களில் வீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு முன்னேற்பாடாக வன்னியில் உள்ள கிராமங்களுக்கு, மீள்குடியேற்றச் செயலணியின் பணிப்பாளர், பொறியியலாளர் யாஸீனின் தலைமையிலான தொழில்நுட்பக் குழு விஜயம்…
‘சிங்கப்பூரில் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இஷாக் எம்.பி!
-ஊடகப்பிரிவு- சிங்கப்பூர் ஜனாதிபதி லீகுவான்யூ 48 மணிநேரத்தில் இனவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுத்தது போன்று இங்கும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். நீதித்துறை திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனை தெரிவித்தார். இதன் போது பிரதமரும் சபையில் பிரசன்னமாகியிருந்தார். மேலும், உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது, வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை வரவேற்கிறோம். கடந்த ஆட்சியில் அன்றிருந்த ஜனாதிபதியோ, அமைச்சர்களோ, எம்.பிக்களோ…
யாழ் மாநகர சபையின் கல்வி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக கே.எம் நிலாம்!
-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், யாழப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் கல்வி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக யாழ் மாநகர சபை முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களினால் நியமிகப்பட்டுள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உறுப்பினர் நிலாம், இதன் மூலம், யாழ் மக்களுக்கு சிறந்த முறையிலான கல்வி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். அத்துடன், இளைஞர்களின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான சகல வசதிகளையும் நாம் மேற்கொள்வோம். அத்துடன், பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டுத்…
மக்களின் வாழ்வியல் தேவைகள் குறித்து கன்னி அமர்விலேயே கவனஞ்செலுத்திய பிரதேச சபை!
-எ.எம் றிசாத்- மன்னார் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு, கன்னி அமர்வாக நேற்று (10) இடம்பெற்றது. பேசாலையில் அமைந்துள்ள மன்னார் பிரதேச சபையின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த அமர்வுக்கு, பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.முஜாஹிர் தலைமை தாங்கினார். சபையின் செயலாளர் உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர். இதன் போது, தம்மை அறிமுகம் செய்து கொண்ட உறுப்பினர்கள், தமது கன்னி உரையினை ஆற்றினர். அத்துடன் பிரதேச சபையின் கடந்த அமர்வின் அறிக்கை வாசித்து, திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது….
‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- “உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப் பாரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். AISEX மற்றும் FASE ஆடைத் தொழிற்துறைக்கான எக்ஸ்போ கண்காட்சியின் 08வது பதிப்பின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று (10) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்;. இந்நிகழ்வில்…
‘அமைச்சர் ரிஷாத்தின் சேவையின் பிரதிபலனே வன்னியில் 04 சபைகள் கிடைத்தது’ தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு!
-பரீட் இஸ்பான்- நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னியில் 4 சபைகளின் தவிசாளர்களையும் 2 பிரதித் தவிசாளர்களையும் 66 உறுப்பினர்களையும் (மன்னார் – 34, வவுனியா 20, முல்லைத்தீவு 12) பெற்று வன்னியிலே மாபெரும் அங்கீகாரத்தை மக்கள் வழங்கியமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் சேவையின் வெளிப்பாட்டுக்கான அடையாளமே என மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) தெரிவித்துள்ளார். மேலும்…
