Headlines

இந்திய வெளி.அமைச்சர் சுஷ்மா வைத்தியசாலையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இன்று (26) பாகிஸ்தான் நாட்டு வெளிவிகார அமைச்சரை சந்தித்து பேச சுஷ்மா திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றிரவு, சுஷ்மாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சில பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டதாகவும், தற்போது சுஷ்மா சுவராஜ் உடல் நலம் சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

களைக்கட்டும் கச்சத்தீவு

இந்தியாவில் தமிழக தேர்தல் களத்தில் இலங்கை கச்சத்தீவு விவகாரம் மீண்டும் தீவிரமாகியுள்ளது.  தமிழக முதல்வர் ஜெயலிலதா ஜெயராம் கடந்த தினம் அறுப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் கச்சத்தீவின் அதிகாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கமே இலங்கைக்கு தாரை வார்த்ததாகவும் அத்துடன் கச்சத்தீவினை மீளப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் தமிழக முதல்வர் ஜெயலிலதா கூறியதை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துள்ளது. கச்சத்தீவானது, தமிழகத்தில் அவசரகாலநிலைமை அமுலில் இருந்த காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும், இதற்கும்…

Read More

தமிழக மீனவர்களுக்கு நாளை விடுதலை

இருவேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மூன்று பேர் நாளை (13) புதன்கிழமை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். மீனவர்கள் மூவரும் நாளை காலை 8.00 மணிக்கு இலங்கைக் கடற்படையினரின் பாதுகாப்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார். குறித்த மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் கடற்படையினரின் படகுகளை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களும் இரண்டு…

Read More

ஜெயாவின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் பலி

இந்தியா-விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க.வின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிதம்பரம் நகரப்பகுதியை சேர்ந்த கருணாகரன் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள்தான் பலியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்று (11) விருத்தாச்சலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று உரையாற்றினார். மிகப்பெரிய மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த…

Read More

கிரேனிலிருந்து மதில் மீது வீழ்ந்த விமானம்

கிரேன் (பாரம்தூக்கி) ஒன்றில் இணைக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பாரிய விமானமொன்று தரையிலிருந்த மதில் ஒன்றின் மீது வீழ்ந்த சம்பவம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானத்தை ஹைதராபாத் நகரிலுள்ள பழைய பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து, எயார் இந்தியா நிறுவனத்தின் பயிற்சி நிலையமொன்றுக்கு தரை வழியாக கொண்டுசெல்லத் தீர்மானிக்கப்பட்டது. எயார்பஸ் ஏ 320 ரகத்தைச் சேர்ந்த சுமார் 70 தொன் எடையுள்ள இந்த விமானமானது கிரேன்…

Read More

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

(நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77) * அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60) * அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு…

Read More

பீகாரில் மதுபானங்கள் விற்பனை செய்ய முழு தடை

இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக பீகாரிலும் அனைத்து வகையாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நேற்று முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி இல்லை .அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு  மற்றும் நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இராணுவ சிற்றுண்டிச்சாலைகளில் மதுவிற்பனை தொடரும்…

Read More

இலங்கையில் முதலீடு செய்யும் விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி பங்குதாரராக இருக்கும் இந்திய உடல் வலுவூட்டல் (ஜிம்) நிறுவனம் இலங்கையிலும் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தமது வர்த்தகத்தை விஸ்தரிக்கவுள்ளது. ச்சிசெல் பிட்னெஸ் ஜிம் செய்ன் என்ற இந்த நிறுவனம், தற்போது பெங்களுர் மற்றும் ஆந்திர பிரதேசங்களில் தமது வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது இந்தநிலையில் நிறுவனம், புதுடில்லி, மும்பாய், குஹாஹெட்டி, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களிலும் கிளைகளை நிறுவவுள்ளது இதன்படி இந்தியாவில் மாத்திரம் 100 கிளைகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன்…

Read More

ஒவைசியின் தலையை எடுப்பவருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு

பாரத் மாதாகி ஜே சொல்ல மறுக்கும் ஒவைசியின் தலையை எடுப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு – உ.பி.பாஜக தலைவர் ஷ்யாம் பிரகாஷ் திவேதி-

Read More

நளினி மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட நால்வர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மத்திய பெண்கள் தனிச்சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கணவன் – மனைவி இருவரும் 15 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்வார்கள். இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் நளினி அப்பா இறந்ததை தொடர்ந்து 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கு சென்று வந்தார்….

Read More

இந்தியாவுக்கு  சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்

சர்வதேச பொதுமன்னிப்பு சபை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சர்வதேச விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு(2015-16) அந்த சபை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா குறித்து கூறி இருப்பதாவது:- பல்வேறு துறை கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் தங்களுக்கு அளித்த தேசிய விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்து இருக்கின்றனர். இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதை இதற்கு காரணமாக இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர் சமூக தொண்டு நிறுவனங்கள் மீதான கொள்கைகளையும்,…

Read More

மஸ்ஜித் இமாம் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்

இந்தியா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாம் டூரு பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. தலையில் தாக்கப்பட்டு பலியான இமாம் அப்துல் ஹமித் மாலிக்(வயது 45) மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில்…

Read More