Headlines

பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம்

அஸ்ரப் ஏ சமத் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் களுவாஞ்சிக்குடிக்கான புதிய பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம் 24.05.2015ம் திகதி (இன்று) கிராமத்தலைவரும், களுவாஞ்சிக்குடி அபிவிருத்திச் சங்கத்லைவருமான திரு.அ. கந்தவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. பொன் செல்வராஜா, மாகாண சபை…

Read More

குவைத் அரசின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி மன்சூர் என். ஜப்ராஹ் :பிரதியமைச்சர் அமீர் அலி சந்திப்பு.

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்துவதற்கு குவைத் அரசாங்கத்தின் பிரநிதியிடம் பிரதியமைச்சர் அமீர் அலி பேச்சுவார்ததை. குவைத் நாட்டில்  இருந்து கடந்த வாரம் இலங்கை வந்திருந்த குவைத் அரசின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி மன்சூர் என். ஜப்ராஹ் அவர்களை நேற்று முன்தினம் வீடமைப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார். இச் சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கைகளை பிரதியமைச்சர் விடுத்துள்ளார். அத்துடன் கடந்த யுத்த காலத்திலும் சுனாமி…

Read More

ஏன் இந்த கொடுமை..? இந்த அழகான சிசு என்ன கொடுமை செய்தது..?? (படம்)

பிறந்த உடனேயே கைவிடப்பட்ட ஆண் சிசுவொன்று அக்கரைப்பற்று சாகாமம் வடிகானுக்குள்ளிருந்து கண்டெ டுக்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடியுடன் இந்த ஆண் சிசு வடிகானுக்குள் இருந்ததை பெண்ணொருவர் கண்டெடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.நேற்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட் பட்ட சாகாம பிரதான வீதியின் அருகில் கோளாவில் பிரதேசத்தில் உள்ள வடிகானுக்குள் இருந்தே இச்சிசு மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலி ஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More

வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை இனவாதத்துடன் பார்ப்போருக்கு எதிராக இன்று மருதமுனையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

– பி.எம்.எம்.காதர் – வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் சக்திகளுக்கு எதிராக நேற்று மருதமுனையில்(22-05-2015)கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டனர். இங்கு ‘பேரினவாதிகளே வடபுல முஸ்லிம்களை வாழவிடு! ,முஸ்லிம் தலைமைகளே சமூகத்திற்காக ஒன்றுபடுங்கள்! ,பொதுபல சேனாவே முஸ்லிம்களைச் சீண்டாதே உள்ளீட்ட பல சுலோகங்களை கவனயீர்ப்;பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணி பொத்துவில் பிரதேசத்தில் (படங்கள் இணைப்பு)

கலைமகன்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணியொன்று அண்மையில் பொத்துவில் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளரும் சிம்ஸ் தனியார் பல்கலைகழக பணிப்பாளர் நாயகமுமான கணணி பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த அதிகளவிலாலான  இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும்  மிக முக்கிய         பிரச்சினைகள்  பல  ஆராயப்பட்டதுடன் அகில இலங்கை மக்கள்      …

Read More

கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் மீள கரையோர மாவட்டக் அலுவலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

அஷ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் கல்முனையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்று கல்முனை நகரில் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் 2006ல் அது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொட்டு நீலாவனை வரையிலான 12 கரையோர பிரதேசங்களை உள்ளடக்கி கல்முனை சிட்டி அலுவலகமாகவும் தரமுயர்த்பட்டு இயங்கி வந்தது. கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவினால் இவ் அலுவலகத்தை மீண்டும் உப…

Read More

இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டம்: களுத்துறை,காலி மற்றும் மாத்தறைமாவட்டஇளம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

எம்.ரீ.எம்.பாரிஸ் இனங்களுக்கிடையிலானபுரிந்துணர்வு,உரையாடல்,வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கு,சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவிழுமியங்களை மக்கள் மயப்படுத்துவதே இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும். மக்கள் அரங்கநாடகச் செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம் கடந்தவருடம் மிகவெற்றிகரமாக கிழக்குமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டது. தேசியமொழிகள் மற்றும் சமூகஒருமைப்பாட்டுஅமைச்சு மற்றும் கிழக்குமாகாணகல்வி அமைச்சு ஆகியன இதற்கு அணுசரனை வழங்கின. இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இதனை அமுல்படுத்தியது. இதன் இரண்டாவது கட்டம் திருகோணமலை,பொலன்னறுவைமற்றும் கண்டி ஆகியமாவட்டங்களில் கடந்தமாதம் நிறைவூபெற்றது. கிழக்கு,மத்திய மற்றும் வடமத்திய மாகாண கல்வியமைச்சுமற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியன…

Read More

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 30.05.2015 சனிக்கிழமை இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

ஏறாவூரில் றிஷாத் பதியுதினை ஆதரித்து மக்கள் பேரணி

றியாஸ் ஆதம் வடபுல அகதி மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் இனவாத அமைப்புக்களையும் அதனோடு தொடர்புடைய ஊடகங்களையும் கன்டித்தும் வடபுல மக்களின் விடுதலைக்காக போராடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதினை ஆதரித்தும் மாபெரும் மக்கள் பேரணி ஏறாவூர் பிரதேசத்தில் (15.05.2015) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அன்றைய தினம் ஜூம்ஆ தொழுகையினை தொடர்ந்து ஆரம்பமான மக்கள் பேரணி ஏறாவூர் முதலாம் குறிச்சி ஜூம்ஆ பள்ளிவாசலிருந்து ஏறாவூர் நகர சபை வரை சென்றது….

Read More

சம்மாந்துறை ; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மக்கள் சந்திப்பு

கலைமகன்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும்  மக்கள் சந்திப்போன்று அண்மையில்  சம்மாந்துறையில்  இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் கிழக்கு மாகாண அமைப்பாளருமான  கணணி  பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா கலந்துகொண்டார். 100க்கும் அதிகமான தமிழ் ,முஸ்லிம் பெண்களை உள்ளடக்கிய மகளிர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் மக்களின் மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் எமது சமுகத்தின் தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் எதிர்வரும்…

Read More

திருமலை ஊடகவியலாளர் யாசீம் தாக்கப்பட்டமைக்கு கிழக்கு ஊடக சங்கம் கண்டனம்

திருகோணமலை மாவட்ட செய்தியாளரான அப்துல் சலாம் யாசீம் செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை குறித்து கிழக்கு ஊடக சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வி. பத்மசிறி ஆகியோர் கைnழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருகோணமலை, ரொட்டவௌ மதரசா மண்டபத்தில் நடைபெற்ற விவசாய சங்கத்தின் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த திருகோணமலை மாவட்ட செய்தியாளர் அப்துல் சலாம் யாசீம்…

Read More

மட்டு.மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

ஜவ்பர்கான்  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. புதிய காத்தான்குடி, ஏத்துக்கால்,பூநொச்சிமுனை, பாலமுனை, நாவலடி, பாலமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளன. இதனால் கடல் மீன்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடற்றொழிலாளர்கள் தமதுபடகுகளையும் வள்ளங்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இடம்மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம்மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கடும் மழை பெய்துள்ளது.24 மணிநேரத்தில்…

Read More