ACMC News
அ.இ.ம.கா. வின் கூட்டத்திற்காக திரண்டு வந்த மக்கள் வெள்ளம்
அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக நேற்று முன்தினம் 25.07.2015 சனிக்கிழமை மலை சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வெள்ளம் அலையாய் திறண்டு வந்து வரலாறு படைத்தமையானது மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது எடுத்த எடுப்பிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்வதனானது மிக இலகுவான விடயம் என்பதனை எடுத்துக்காட்டியது. இங்கு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஷாத் பதியுதீன் சம்மாதுரைக்கு…
அ.இ.ம.கா வின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான SSPமஜீத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதோடு,அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு ஊரின் நன்மை கருதி ஊர் மக்கள் அனைவரும் SSP மஜீத் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ஒருமித்து கேட்டுக் கொண்டனர்..
ACMC, அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் திறந்து வைப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் இன்று மதியம் (25-07-2015)சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,தேசிப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் பத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்…
மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல – றிஷாத் பதியுதீன்
அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனிச்சின்னத்தில் இங்கு களம் இறங்கி இருப்பதாக அ.இ.மு.கா.தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தொழிலதிபர் சித்தீக் நதீரின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இங்கு வந்து புலம்புவதாக அறிகின்றேன்.ஏன்…
தேசியப் பட்டியல் ஊடாக ஜெமீல் பாராளுமன்றம் செல்வார்
எமது கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ஏ.எம்.ஜெமீல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருக்கிறார். அந்த அதிகாரத்தின் மூலம் சாய்ந்தமருதின் அனைத்து தேவைகளையும் அவர் நிறைவேற்றித் தருவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலகம் இன்று சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சீ பிரீஸ் மண்டபத்தில் இடம்பெற்ற உடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியுடன்…
மக்களுக்குப் பயன்படாத கட்சிகளோ அமைப்புகளோ அவசியமற்றது – றிஷாத்
தேசியப் பட்டியல் ஊடாக சாய்ந்தமருது ஜெமீலை பாராளமன்றம் அழைத்துச் செல்வேன் – றிசாத் ஏனைய கட்சிகளைப் போன்று ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று மக்களை ஏமாற்றும் கட்சி தங்களது கட்சி இல்லை என்று தெரிவித்த அமைச்சர் றிசாத், எங்களது கட்சி சொல்வதையே செய்யும் என்றும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தங்களது கட்சிக்கு கிடைக்கவிருக்கின்ற தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் காங்கிரசின் கோட்டையான…
ACMC நிந்தவூர் கட்சிக் காரியாலயம் திறந்து வைப்பு
கட்சியென்றால் மார்க்கம் போல் நினைக்கின்றனர்.கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர்.மக்களுக்கு உதவாத கட்சி அதனை விட்டுவாருங்கள் என்றால் ஏதோ மதத்தினை விட்டுவருவதால் பிரயத்தனம் செய்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் முஹம்மத் சிசானின் கட்சி அலுவலகத்தினை நிந்தவூரில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகத்தின் விளைவு அவர் ஆட்சியில்…
றிஷாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு
– ஏ.எச்.எம் பூமுதீன் – பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார். நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில்…
அ.இ.ம.கா. வின் திகாமடுல்ல கூட்டம்!
– அப்துல் அஸீஸ் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டத்தில்) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்சியியின் விஷேட கூட்டம் (23) மாலை அதன் செயலாளர் நாயகத்தின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை தொகுதிகள் ரீதியாகவும், பிரதேசம்கள் ரீதியாகவும் விஸ்தரித்து முன்னெடுப்பது தொடர்பாகவும், தேர்தல் கால சட்டதிட்டம்களை கடைபிடிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், எதிர்வரும் சனி,…
அ.இ.ம.கா வேட்பாளர் சிராஸிக்கு இறக்காமம் மக்கள் பாரிய வரவேற்பு (Photo)
– அகமட் எஸ். முகைடீன் – சமூகத்திற்கான காத்திரமான முன்னெடுப்புக்களை செய்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இறக்காமம் பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளை நேற்று மாலை மேற்கொண்டார். கல்முனை மாநகர முன்னாள் முதல்வராக சிராஸ் மீராசாஹிப் மக்கள் பணியாற்றியபோது அவரிடம் காணப்பட்ட ஆற்றல், சேவை நலம், விவேகம், வேகம் என்பவற்றை…
பெட்டிகள் மீது கொள்ளும் ஐக்கியத்தை மு.கா. சமூக நலனில் கொள்வதில்லை -ஜெமீல்
-எம்.வை.அமீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டு ஒருசிலரின் அபிலாசைகளை நிவர்த்திக்கும் கட்சியாகி கீழ்மட்டத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நடக்கவிருக்கும் பாராளமன்ற தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையூடாக பாராளமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுபவருமான எ.எம்….
தகுதியான வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்யுங்கள்
இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்கித் தர காத்திருக்கும் ரணில் விக்ரம சிங்கவின் தலைமையிலான ஆட்சியொன்றினை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைப்போம் எனவும் அழைப்புவிடுத்தார். பாராளுமன்றத்தேர்தலில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்யிடும் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில்…
