Headlines

ad34@hFacMC

2மில்லியன் பெறுமதியான பொதுநோக்கு மண்டபம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

மன்னார் பெரியமடு காயாநகர் மக்களுக்கான பொதுநோக்கு மண்டபம் இன்று (10) முன்னாள் வடமாகாண சபை உறுப்பி றிப்கான் பதியுதீன் அவர்களினால் மக்கள் பாவனைக்கு இன்று கையளித்தார் இந்த பொதுநோக்கு மண்டபமானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவ ரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட்ட நிதியாகும். மேலும் இந்த நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரபீக் சேர் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு…

Read More

1மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இலவச மின்னிணைப்புக்கான காசோலை வழங்கி வைப்பு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குற்பட்ட 52 குடும்பங்களுக்கான இலவச மின்னிணைப்புக்கான காசோலை வழங்கும் நிகழ்வு மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு சமூகம் சார்ந்து…

Read More

நிரபராதி முஸ்லிம்களை விடுவிக்க முஸ்லிம் எம்பிக்கள் வலியுறுத்து!

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள்,நெருக்கடிகள் தொடர்பில் ஜனாபதிக்கு எடுத்துக் கூறிய முஸ்லிம் எம் பிக்கள் நிரபராதிகளை அவசரமாக விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு நடந்த இச்சந்திப்புக் குறித்து விளக்கிய  அவர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுக்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதிக்குள்ள பொறுப்பாகும். ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக…

Read More

நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென கனவு காண்பவர்களுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

சிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே…

Read More

அபிவிருத்திகளில் ஜனநாயகத்தன்மை பேணப்படுகின்றமை வரவேற்புக்குரியதே!

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் ஜனநாயகத் தன்மை கடைப்பிடிக்கப்படுகின்றமையை பார்க்கையில் மிகவும் மகிழ்வைத் தருகின்றது. இந் நாட்டில் பல்லின சமூகம் வாழ்கின்ற நிலைமையில் அனைவருக்கும் சமமனான அபிவிருத்திகளை அரசாங்கம் வழங்குகின்றதென்றால் அவை மிகையாகாது. – என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். அண்மையிலுள்ள சிறந்த பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் (05) இறக்கமாம், வாங்காமம் பிரதேசங்களிலுள்ள இரு பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிக் கட்டிடங்களை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற…

Read More

உட நிதிகம அல் மினா முஸ்லிம் வித்தியாலய சுற்றுமதில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் 50,000.00 ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உட நிதிகம அல் மினா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட சுற்றுமதில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பாடசாலை அதிபர் கபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Read More

எருக்கலம்பிட்டி கிழக்கு அ.மு.க பாடசாலை நுழைவாயல் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டுவிழா

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் எருக்கலம்பிட்டி கிழக்கு அ.மு.க பாடசாலைக்கான நுழைவாயல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது எருக்கலம்பிட்டி மகளீர் பாடசாலை ஆசிரியர் அஸ்மீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி…

Read More

பைசல் நகர் பலாஹ் பள்ளி முன் வீதிக்கான காபட் இடும் ஆரம்ப வைபவம்

நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும்” ரண்மாவத்” திட்டத்தின் கீழ் வீதிகளுக்கு காபட் இடும் ஆரம்ப பணி நேற்று (07) கிண்ணியா பைசல் நகர்_ பலாஹ் பள்ளியின் முன்  வீதியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த காபட் வீதிக்கான அங்குராரப்பண வைபவம் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்கவும் அவர்களின்  தலைமையிலும் இடம் பெற்றுள்ளது. இவ் வீதியினை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் உத்திதோகபூர்வமாக ஆரம்பித்து…

Read More

வில்பத்து பாதை வழக்கு : அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள் தீர்வு யோசனைக்கு , சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால், இன்று(08) 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்த வழக்கை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதென உச்ச நீதிமன்றம் அறிவித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்…

Read More

கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி மற்றும் சுற்றுமதில் நிர்மானிப்பதற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டின் கீழ் அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி மற்றும் சுற்றுமதில் என்பனவற்றை நிர்மானிப்பதற்கான அடிக்கல் 2019.07.04 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது. பாடசாலை அதிபர் சஹாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சமுக சேவையாளர் தேசமான்ய ARM.தாரிக், கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் உப தலைவர் நஜீம், ஹொரொவ்பொத்தான பிரதேச சபை உறுப்பினர் டில்ஷான், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய…

Read More

அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல” அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்- அப்துல்லா மஃறூப் எம்.பி

“அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல” அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்- அப்துல்லா மஃறூப் எம்.பி “அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல “அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று ஞாயிற்றுக் கிழமை (07)அமான் வீதிக்கான ரண்மாவத்த காபட் இடும் வீதி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…

Read More

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி ; ரிஷாத்

(நேர்காணல்:- ஆர்.ராம்) ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் வீரகேசரிக்கு வழங்கிய…

Read More