Headlines

ad34@hFacMC

அமைச்சர்கள் நியமனம்! (பட்டியல் இணைப்பு)

மொஹம்மத் சனாஸ்  அமைச்சரவை விவரங்கள்   றிஷாத் பதியுதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்!  ரணில் விக்கிரமசிங்க- பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர் கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர் றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க- மின்சக்கி…

Read More

இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; மஹிந்த, கோத்தபாயவுக்கு எதிராக விசாரணை: மங்கள சமரவீர

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக இருக்கின்றது என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து இராணுவச் சதிப்புரட்சியொன்றுக்கு முயற்சித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தேசிய அரசாங்கத்தின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவியேற்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில், அமைச்சரவை பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய…

Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரியா, மஹிந்தவா?; குழப்பம் தொடர்கிறது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது. ஆனால், சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே தலைவராக நியமித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமையும் 15க்கும் அதிகமானவர்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து…

Read More

மைத்திரி அமைச்சரவையில் மனோ; ஐ.தே.க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகிறார்(?)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இடம்பெறுவார் என்று தெரிகிறது. தற்போது மேல் மாகாண சபையின் உறுப்பினராகவுள்ள மனோ கணேசனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் என்று தெரிகிறது. பொது எதிரணியின் முக்கியஸ்தராக மனோ கணேசன் ஆரம்பம் முதலே செயற்பட்டு வந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம்

மௌலவி எம்.ஐ.எம். நௌபர் (காசிபி) நேற்றைய (11/01/2015) கட்டார் நாட்டின் “அர் றாயஃ”பத்திரிகையில் கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் தொடர்பில் ஒரு ஆக்கம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாடு கருதி அது தொடர்பான விபரங்களை இங்கு சுருக்கமாகத் தருகின்றேன். 1.கட்டார் நாட்டின் தொழில் சட்டங்களின் புதிய திருத்தங்களை “மஜ்லிஸு ஷ் ஷூறா” (கிட்டத் தட்ட பாராளுமன்றம்!!)அங்கீகரித்து விட்டது.குறித்த சட்டத் திருத்தங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 2.குறித்த சட்டத் திருத்தங்கள் தொழிலமைச்சின் மீதான புதிய…

Read More

பாப்பரசர் வருகை: அரச விடுமுறை

பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

மஹிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைபெற்று எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதில் சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்க்கட்சித் தலைவராக நியிமக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேட…

Read More

மொஹான் பீரிஸ்க்கு, 48 மணிநேர காலக்கெடு

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்க்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றத்துக்கு முன்பாகவும் நீதியமைச்சுக்கு முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையால் பிரதம நீதியரசர் உயர்நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, 44 ஆவது பிரதம நீதியரசருக்கு 48மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அப்பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நியமிக்குமாறும் கோரியுள்ளனர்.

Read More

றிஷாத் பதியுதீன் இரண்டு விடயங்களில் பங்காளிகளாகுமாறு வேண்டுகோள்

-இர்ஷாத் றஹூமத்துல்லா – இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்களிடமும்,புத்தி ஜீவிகளிடமும் இரண்டு விடயங்களில் பங்காளிகளாகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாத் பதியுதீன். அவைகளாவன; 1.முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறை 2.முஸ்லிம் சமூகத்தின் ஊடகத்துறையாகும் – என்று கூறினார். இலங்கை முஸ்லிம் வர்த்தக சம்மேளம் நேற்று (2015-01-11) இரவு தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீனுக்கு அளித்த பிரமாண்டமான வரவேற்பு வைபவத்தினை…

Read More

இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை பதவியேற்பு

இன்று மாலை இலங்கை நேரம் 06 மணிக்கு புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கின்றது. இது தொடர்பான முழுவிபரத்தையும் அறிய இணைந்திருங்கள்

Read More

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் புதிய ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத் கண்டி தலாதா மாளிகையில் புதிய ஜனாதிபதி அஸ்கிரிய மகா பீடாதிகளிடம் ஆசிர்வதிப்பதிலும் மற்றும்  கண்டி மீரா மக்கா பள்ளிவாசலிலும் துஆ பிரத்தனையிலும் ஈடுபட்டனர்.

Read More